சனி, 25 டிசம்பர், 2010

நேபாளத்திடம் மன்னிப்பு கேட்டது இலங்கை


கொழும்பு, டிச.24- நேபாளத்தில் அமைதியை ஏற்படுத்த ராஜபட்சவிடம் உதவி கோரப்பட்டதாக வெளியான தகவலுக்காக இலங்கை வெளியுறவுத்துறை இணையமைச்சர் நாமல் பெரேர, நேபாளத்திடம் மன்னிப்பு கோரியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் நேபாளம் சென்றிருந்தபோது அந்நாட்டு அதிபரை நாமல் நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

நேபாள அதிபர் ராம் பரன், தமது நாட்டில் அமைதியை ஏற்படுத்த உதவுமாறு இலங்கை அதிபர் ராஜபட்சவை பீஜிங்கில் சந்தித்தபோது கேட்டுக்கொண்டார் என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் முன்பு கூறியிருந்தார். தற்போது அவரது கூற்றுக்காக வெளியுறவுத்துறை இணையமைச்சர் நேபாளத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் என்று அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மன்னிப்பு கேட்கப்பட்ட தகவலை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் இலங்கை அமைச்சர் தரப்பில் நேபாள அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 கருத்துகள்

 நன்றாக கூறினீர்கள் தோழர் வெற்றிசெல்வன் அவர்களே.....

இதேபோல் ஈழ தமிழர்களிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டிய காலம் வரும்.

By வெற்றிவேலன்

ஞாயிறு, 21 நவம்பர், 2010

உலகெங்கும் 85 திராவிட மொழிகள்

உலகெங்கும் 85 திராவிட மொழிகள் என்ற உண்மை கூட நம் மாணவர்களுக்கு தெரியாது

- நந்திவர்மன் வேதனை

பாகூர் அரசு மேனிலைப் பள்ளியில் 14.11.2010 அன்று பண்பாட்டுக் கழகம் சார்பில் பண்பாட்டுப் பயிலரங்கம் நடந்தது. ஆசிரியர் தமிழுலகன் முன்னின்று பள்ளிகள் தோறும் பண்பாட்டுப் பயிலரங்கை நடத்தி வருகிறார். அந்தப் பயிலரங்கில் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு பற்றி நந்திவர்மன் பேசியதாவது.

தமிழர்களுக்கு ஆங்கிலமே உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்ற மயக்கம் உள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் உலகில் 30 மொழிகளை அமெரிக்காவில் புகழ்பெற்ற நாளேடு நியுயார்க் டைம்சு 1998 ல் பட்டியல் இட்டது. உலக மக்கள் தொகையில் 14.75 விழுக்காடு மக்கள் சீன-மண்டாரின் மொழி பேசுகின்றனர். மூன்று நாடுகளில் அது ஆட்சிமொழி. ஐக்கியநாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று. 885ää000ää000 மக்கள் சீன மொழி பேசுகிறார்கள். உலக மக்கள் தொகையில் 5.33மூ விழுக்காடு மக்கள் பேசும் ஸ்பானிஷ் மொழி 20 நாடுகளில் ஆட்சிமொழிää ஐக்கிய நாடுகள் மன்ற ஆட்சிமொழிகளுள் ஒன்று 322ää000ää000 மக்கள் ஸ்பானிஷ் மொழி பேசுகிறார்கள்.

மூன்றாமிடத்தில் உள்ள ஆங்கிலம் இந்தியா போல ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்ட 51 நாடுகளில் ஆட்சி மொழியாக இன்னமும் வைத்திருப்பதால் அதுவே உலகில் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியென நினைத்துக் கொண்டுள்ளோம்.

இந்த வரிசையில் தமிழ் 19வது இடத்தில் உள்ளது. தெலுங்கு 15வது இடமும் மலையாளம் 30வது இடமும் பெற்றுள்ளன. இந்த மூன்று மொழிகளும் திராவிட மொழிகளாக பட்டியலில் சொல்லப்படுகின்றன. தமிழ் இரண்டு நாடுகளில் ஆட்சிமொழி. அந்த 2 நாடுகளும் இந்தியாவுக்குள் இல்லை. நாம் இந்திய ஆட்சிமொழிகளுள் தமிழை ஒன்றாக்க பேச்சளவில் போராடி வருகிறோம்.

சாகித்திய அகாதெமி இந்திய மொழிகளின் வரலாற்றை புத்தகமாக்கியது. 1968ல் பி.கே.பரமேசுவரன் நாயர் மலையாள மொழியின் வரலாற்றை எழுதினார். மலையாளம் தமிழின் கிளை மொழி அல்ல என்று அதில் எழுதிவிட்டார். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் தீட்டிய டாக்டர் கால்டுவெல் கருத்தை உலகமே ஏற்று தமிழின் சேய்மொழிகளாக தெலுங்கையும் கன்னடத்தையும் மலையாளத்தையும் துளுவையும் கூறி வருகிறது. ஏதோ ஒரு மூலத்திராவிட மொழியில் இருந்து தமிழும் மலையாளமும் பிறந்ததாக பரபேசுவரன் நாயர் கட்டுக்கதை கட்டியது 1968ல் என்றால் இன்று வரை நாம் சாகித்ய அகாதெமியை தட்டிக் கேட்கவில்லை. ஏதோ ஒரு மூலதிராவிட மொழி என்று உளறும் பரமேசுவரன் நாயரை அந்த மூல மொழியின் பெயரைச் சொல் பார்ப்போம் என எவரும் சவால் விட்டதில்லை. இதையெல்லாம் செய்ய வேண்டிய நம் தமிழறிஞர்கள் மனப்பாடம் செய்து மாணவர்களுக்கு சொல்லி வந்த சரக்கையே ஆயுளுக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். புதிதாக தினமும் படிக்கவில்லை.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்று பழமொழி உண்டு. இதே நூலில் தொடர்ந்து பொய் எழுதிய பரமேசுவரன் நாயர் தடுக்கி விழுகிறார்.

“தமிழ் என்ற சொல்லுக்கு இன்று வழக்கில் உள்ள பொருளில் மலையாளத்தை எக்காலத்திலும் தமிழ் என்று குறிப்பிட்டதில்லை. மூலத் திராவிட மொழியின் பிரிவுகள் என்ற கருத்தில் கன்னடத்தை கரிநாட்டுத் தமிழ் என்றும் துளுவை துளு நாட்டுத் தமிழ் என்றும் சொல்லி வந்ததைப் போலவே மலையாளத்தை மலை நாட்டுத்தமிழ் என்றும் சொல்லி வந்தார்கள்” என அவரே எழுதுகிறார். மூலத்திராவிட மொழி தமிழென்பது நீங்கள் எழுதியதில் இருந்தே தெரிகிறது நாயரே! ஏன் தமிழர் வரலாற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள் என நம்மவர் கேட்கவில்லை.

இதனால் இன்று மலையாளம் செம்மொழி தகுதி கேட்கிறது. தெலுங்கு கேட்கிறது. கன்னடம் கேட்கிறது. உலகின் இயற்கை மொழிகள் பட்டியலில் கன்னடத்தையம் மலையாளத்தையும் சேர்த்து விட்டனர். நாம் தூங்கிக்கொண்டுள்ளோம். காஞ்சிபுரத்துக் கம்பண்ணக் கவுண்டன் பெங்களுரைக் கட்டினான். அவன் பெயரை கெம்பே கவுடா ஆக்கி பெங்களுரில் கெம்பே கவுடா சர்க்கிள் அமைத்து விட்டனர். வரலாற்றை மறைக்கின்றனர்.

தமிழ் இயற்கை மொழிகள் பட்டியலில் உள்ளது. தமிழிலிருந்த பிறந்த மொழிகளான தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் இயற்கைப் பட்டியலில் சேர்த்தது தவறு என தமிழ்நாட்டு அறிஞர்கள் தட்டிக்கேட்பதில்லை.

திராவிட மொழிக் குடும்பத்தின் தாய் தமிழ். தமிழிலிருந்து பிறந்த மொழிகள் தாமே வானில் இருந்து வந்து குதித்த மொழிகள் போல இன்று பேசுகின்றன. உலகில் 85 திராவிட மொழிகள் பேசும் 200 மில்லியன் மக்கள் உள்ளனர். இந்த 85 மொழிகளின் பெயரையாவது நம் மாணவர்களுக்குச் சொன்னோமோ? நாம் சொல்லித் தராவிட்டால் இந்த வரலாறு மறைக்கப்படும் என்பதை மறந்தோம்.

பாபா சாகேப் அம்பேத்கார் எழுதிய சு10த்திரர் வரலாறுää தாழ்த்தப்பட்டோர் வரலாறு ஆகிய 2 நூல்களை கண்டிப்பாக ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டும். இந்தியா முழுதும் பேசப்பட்ட மொழி தமிழ். தமிழ் பேசிய அந்த மக்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். வட இந்திய நாகர்கள் சமசுகிருதச் செல்வாக்குக்கு வீழ்ந்தபோது தென்னிந்திய நாகர்களைக் குறிக்க திராவிடர்கள் என்ற சொல் வந்தது என எழுதியுள்ளார்.

சீனமொழியில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தரின் வரலாற்றில் அவர் இளமையில் தமிழ் கற்றார் என்பது பதிவாகியுள்ளது.

இயேசு வாழ்ந்த காலத்தில் அவரின் குடும்பம் பேசிய மொழி அராமிக் மொழி அந்த மொழியில் தாயை ஆயா என அழைப்பார்கள். இயேசு தன் தாயை ஆயா என்று தமிழ்ச்சொல்லால் அழைத்திருக்கக் கூடும்.

கருநாடகம் நம்மோடு சண்டையிடும் ஒகேனக்கல்லின் பழைய பெயர் உகுநீர்க்கல். அந்த பெயரை தொலைத்து விட்டோம். தமிழ்ப்பெயருக்கு பதில் கன்னடப் பெயரை வைத்துக் கொண்டோம். இதனால் கன்னடர்கள் நம் ஊர் தங்களுக்குச் சொந்தமென வாதாடுகிறார்கள்.

1971 ல் புகழ்பெற்ற ரீடர்சு டைஜஸ்ட் வெளியிட்ட இந்திய வரைபடத்தில் இமய மலையில் நேபாளத்துக்கும் திபேத்துக்கும் இடையே இருந்த கணவாய்க்கு சோழர் கணவாய் என்ற பெயர் இருந்தது. சோழர் படைகள் இமயம் சென்றன என்பதற்கு அந்தக் கணவாய் பெயரே சாட்சி. நாம் தூங்கினோம் அந்தப் பெயரை மாற்றிவிட்டார்கள்.

அரியானாவில் உள்ள காலிபங்கன் என்ற இடத்திலும் ராஜஸ்தானிலும் பழங்காலத்தில் ஓடிய கக்கர் என்ற ஆறு வறண்டு போனது. வடநாட்டார் அதற்கு சரசுவதி ஆறு என்று பெயர் சுட்டி ஆரிய நாகரிகம் அங்கே பிறந்ததாக கதை விடுகின்றனர். நம் சிந்துசமவெளி நாகரிகத்துக்கு திராவிட நாகரிகம் என்ற பெயர் இருந்தது. அதை மறைத்து சரசுவதி நாகரிகமென புதுப்பெயர் சு10ட்டிவிட்டனர். ஆனால் அங்கு வாழும் மக்கள் குவாரி கன்யா என்பதே அந்த ஆற்றின் பழைய பெயர் என்று கூறுகின்றனர் குஜராத் மொழியில் குமாரி என்பதை குவாரி என்;றே கூறுவர். குவாரி கன்யா ஆறு குமரி கன்யா ஆறு ஆகும். கன்னியாகுமரியில் இருந்து சென்றவர்கள் அங்கு வாழ்ந்த பழங்கால மக்கள். அதனால் குவாரிகன்யா ஆறு எனப் பெயரிட்டனர்.

இதையெல்லாம் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர் தொடங்கிய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகராதியை தொடர்ந்து எழுதி முடித்து இன்று 31 தொகுதிகளாக சுமார் 10ää000 விலையில் தமிழக நூலகங்கள் அனைத்துக்கும் சென்றுள்ள அகராதியை உருவாக்கிய அறிஞர் மதிவாணன் பல நூல்களில் பதிவு செய்துள்ளார்.

மதிவாணன் நூல்களை மாணவர்கள் படித்தல் வேண்டும். வரலாற்றில் பல மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர் மதிவாணர். இன்று மலையாளத்தை செம்மொழி ஆக்க ஐராவதம் மகாதேவன் புனையும் கட்டுக்கதைகளையும் தவிடுபொடி ஆக்குபவர் மதிவாணன்” எனத் தமிழ்மாமணி நந்திவர்மணி நந்திவர்மன் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தமிழறிஞர் இலெனின் தங்கப்பா தலைமை தாங்கினார் தமிழுலகன் முன்னிலை வகித்தார். காலைநிகழ்ச்சியில் பேராசிரியர் இராமதாசுää பேராசியர் குழந்தை வேலனார் கருத்துரை ஆற்றினார்.

சனி, 6 நவம்பர், 2010

கடலடியில் தமிழர் நாகரிகம்

கடலடியில் தமிழர் நாகரிகம்


உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நடத்திய செ. அரங்கநாயகம் அறக்கட்டளைச் சொற்பொழிவு


தமிழ்மாமணி நந்திவர்மன்

கடலடியில் மீன்வளம் பற்றிய கணக்கெடுப்பு நடக்கிறது. இந்தப்பணியில் 2700 அறிவியல் அறிஞர்களும் 670 நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. 540 தேடுதல் வேட்டைகளில் கடலில் 9000 நாட்கள் இருந்து 120000 மீனினங்களை கண்டறிந்துள்ளனர். புதிய வகை 6000 மீனினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 16764 வகை மீன்களை விளக்கியுள்ளனர். இன்னும் இனம் கண்டறியப்படாத 750000 மீனினங்கள் உள்ளன. இந்தக் கள ஆய்வில் மீன்கள் பயணிக்கும் கடல் நெடுஞ்சாலைகளும் அவை பயணத்திற்கிடையே ஓய்வெடுக்கும் இடங்களும் வரைபடங்களாக ஆக்கப்பட்டுள்ளன. இதற்காக 650 மில்லியன் டாலரில் அனைத்துலக ஆய்வு நடந்தது. அதாவது 470 மில்லியன்; யூரோவாகும் இது. இந்தியாவின் புகழ்பெற்ற நாளோடு டைம்சு ஆப் இந்தியா 5.10.2010-ல் இலண்டன் செய்தியாளரின் செய்தியை வெளியிட்டது. கடலடியில் மீன்கள் கணக்கெடுப்பு நடத்த இத்துணை நிறுவனங்களும் ஆய்வாளர்களும் கூட்டாக இணைந்து கோடிகோடியாகச் செலவழித்தது போன்று மனித குலத்தின் நாகரிகத் தடயங்களை கண்டுஎடுக்க முயற்சிகள் இல்லையே! முனைப்பும் இல்லையே! என்று சிந்தித்தேன்.

வரலாற்றில் புதிய உண்மைகள் வெளிப்பட்டால் நேற்று வரை நாம் கூறிவந்த காலக்கணக்கை திருத்திக் கொண்டாக வேண்டும். ஆண்டுக்கணக்கை மாற்றிக் கொண்டாக வேண்டும். இந்தக் கருத்தும் என்னுள் சுரக்க இன்னொரு பத்திரிக்கைச் செய்தியே காரணமாயிற்று.

பாறை ஓவியங்கள் - பாறைகளில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவங்களின் முன்னோடி என்பது நாமறிந்ததே! பிரான்சு நாட்டின் குகை ஒன்றில் பாறையில் 30000த்திலிருந்து 40000 ஆண்டுகளுக்கு முன்பே அக்கால மனிதன் ஓவிய வடிவில் தன் உள்ளக் கிடக்கைiயை வெளிப்படுத்த முனைந்துள்ளது பற்றி சென்னையிலிருந்து வெளிவரும் தி டைம்சு ஆப் இந்தியா 20 பிப்ரவரி 2010-ல் செய்தி வெளியிட்டது.

விக்டோரியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கோடு கோடுகளாகப் புள்ளிகளாக கோணல் மாணலான கிறுக்கல்களாக அரை வட்டங்களாகப் பாறைகளில் தென்பட்ட வடிவங்கள் 30000 முதல் 40000 ஆண்டு முன்பு அக்காலமனிதன் தன் எண்ணத்தை ஓவியமாக வெளிப்படுத்தாமல் குறியீடுகளாக வெளிப்படுத்த முற்பட்டதைக் கண்டறிந்தனர். Genevieveon Petzinger என்ற பேராசிரியர் தலைமையிலான குழுவினர் பிரான்சு நாடெங்கும் 146 இடங்களில் கண்டுபிடித்த எழுத முயன்ற மனிதன் 35ää000 ஆண்டு முன்போ 25ää000 ஆண்டு முன்போ 10ää000 ஆண்டு முன்போ வாழ்ந்திருக்கக் கூடும். 26 வகை குறியீடுகள் அதே வடிவில் பல்வேறு இடங்களில் கிடைத்தது வியப்பளித்தது. குறிப்பாக Les Trains Freres என்ற இடத்தில் நான்கு வகையான இணையான குறியீடுகள் தென்பட்டன.இது பிரான்சில் கிடைத்த தடயங்கள். மனிதகுல வரலாற்றில் புதிய ஒளி பாய்ந்தது.
 
 கண்டறியப்பட்டுள்ளன. நமது பாறை ஓவியங்கள் பற்றிப் பலநூல்கள் உள்ளன. உலகெங்குமுள்ள பாறை ஓவியங்கட்கும் நமது ஓவியங்கட்கும் ஒப்பீட்டாய்வு நடந்தால் நம் வரலாற்று முன்மை வெளிப்படுமெனச் சிந்தித்தேன்.

சகாரா பாலைவனப் பகுதிகளில் கிடைத்த பாறை ஓவியங்களும் குறியீடுகளும் அங்கிருந்த பண்பாட்டைää வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து அங்கு நிகழ்ந்த இயற்கை மாறுபாடுகளைப் பதிவு செய்கின்றன. நைல் நதியின் மேற்குப் புறமுள்ள நைசர் லிபியா அல்சீரியா போன்ற நாடுகளில் இவை


Homo sapiens எனும் மதிமாந்தர் ஆப்பிரிக்காவில் வாழ்ந்தனர். 160000 ஆண்டு முன் அங்கிருந்து பரவினர் என்பதை அகழ்வாராய்ச்சியில் இருந்து பெறப்பட்ட mt DNA மற்றும் Y குரோமோசோம்கள் மூலம் கிழக்கு ஆப்பிரிக்காவே மனித குலத் தொட்டில் என்று சொல்லிவருகிறோம். மண்டை ஓடுகளே மனிதனின் பயணத்தை அடையாளம் காட்டுகின்றன. சுமார் 200000 ஆண்டு முன்பு மதிமாந்தரினம் அறிந்திருந்த தொழில்நுட்பம் neandertals அறிந்திருந்த நுட்பங்களைவிடப் புதிதாக மாறுபட்டதாக இருக்கவே Neandertal கிலள அல்ல மதிமாந்தரினம் என்பதும் அவை அக்காலத்தே தனித்தோங்கியவை என்பதும் தெளிவாகியது. இவ்வேறுபாடு இருவகையினர் தம் மண்டை ஓடுகளில் இருந்தே பெறப்பட்டது. 

1878-ல் 27000 த்துக்கோ 23000 ஆண்டுக்கோ முற்பட்ட பாறை வாழிடத்தில் Les Eyzies என்ற தென்மேற்கு பிரெஞ்சுக் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட உறைபடிவமாகிப் போயிருந்த எலும்புக்கூடுகளில் இருந்து முதல் மாந்தரினத்தவர் எவ்வாறிருந்தனர் என யூகிக்க முடிந்தது. அம்மாந்தன் Go magnm எனப் பெயரிடப்பட்டான். நவீன அய்ரோப்பியரை ஒத்திருந்தான். ஆண்கள் 5 அடி 4 அங்குலம் முதல் 6 அடி உயரம் வரை இருந்தனர். இவ்வாறாக உலகெங்கும் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் எலும்புக் கூடுகள் உறைந்து போன படிமங்கள் இவற்றால் பொதுவாக இன்றைய மாந்தன் ஓரிலக்கம் ஆண்டுகளாக உலகில் உலா வந்துள்ளான் எனச் சொல்லி வந்தோம்.

ஆனால் The Hidden History of Human Race நூலாசிரியர் மைக்கேல் ஏ. கிரமோ மற்றும் ரிச்சர்டு எல். தாம்சன் அதிர்ச்சியூட்டும் செய்திளை தம்நூலில் பதிந்துள்ளனர். சிகாகோ பல்கலைக்கழகத் தொல்மாந்தவியல் அறிஞர் ஆர்.எச். டியூட்டல் கிழக்கு ஆப்பிரிக்காவில் தான்சானியா நாட்டில் லாயிடோலி என்னுமிடத்தில் 1979-ல் எரிமலைச் சாம்பல் படிவங்கள் மீது கண்டறியப்பட்ட காலடித்தடங்கள் தற்கால மாந்தரின் காலடிகளை ஒத்து இருந்தது. இதை 1990 மார்ச்சில் வெளியான Natural History இதழிகையில் எழுதிய ஆர்.எச். டியூட்டல் இது புதிராக உள்ளது. மதிமாந்தன் வாழ்ந்தபோதே இக்கால மாந்தனை ஒத்த மனித உயிர்களும் இருந்துள்ளன என்கிறார். அக்காலடிச் சுவடுகள் 360 (மில்லியன்) பத்திலக்கமாண்டுகள் பழமையானவை. ஆக 1.60 பத்திலக்கமாண்டு முன்பிருந்தே மதிமாந்தரிடமிருந்து பிறந்த மாந்த குலம் 3.60 பத்திலக்கமாண்டு முன்பும் இருந்துள்ளது. மாந்தகுலத்தின் தொன்மை இன்னும் பழமையானதாகிறது.


திருவனந்தபுரத்தில் உள்ள பாபா அணுசக்தி ஆய்வு மையப்பேராசிரியர் இராசேந்திரன் புதுவை கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள பொம்மையார் பாளையம் பள்ளங்களில் 1.66 பத்திலக்கம் ஆண்டுக்கு முந்திய படிவமாக ஆகிவிட்ட குழந்தையின் எலும்புக் கூட்டை கண்டெடுத்து அதை நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாக்கியது. நான் இதை மேற்கோள் காட்டியபோது ஏளனம் செய்தார்கள். சென்னை பூண்டியை அடுத்து ஒரு இலட்சம் ஆண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என நியு இந்தியன் எக்ஸ்பிரசு (செய்தியாக்கிய போதும் சிரித்தார்கள் இன்றோ 3.6 பத்திலக்கமாண்டு முன்பு மனிதன் வாழ்ந்தான் என்று தடயம் தான்சானியாவில் கிடைக்கிறது.   கடந்த இரு நூறு ஆண்டுகளில் பலப்பல கண்டுபிடிப்புகள். இவற்றின் அடிப்படையில் வரலாற்றில் திருத்தம் செய்ய மாட்டோமென அடம் பிடிக்கிறார்கள். சீனா தன் நாட்டுப் பழம்பெருமையை உயர்த்த வரலாற்றில் திருத்தங்களை முன்மொழிகிறது. அமெரிக்காவைச் சீனம் கண்டுபிடித்த ஆண்டு 1421 எனச் சீனாவில் நடந்த கண்காட்சி பற்றி International Herald Tribune நாளேடு செய்தி வெளியிட்டது. Gavin Mensies இது பற்றி எழுதினார். இக்கட்டுரை சென்னையில் இருந்து வெளிவரும் நண்பர் பகவான்சிங் பணிபுரியும் டெக்கான் கிரானிக்கல் ஏட்டிலும் வெளிவந்தது. 1405-க்கும் 1423க்கும் மிடையே 28000 வீரர்களுடன் 317 கப்பல்களுடன் ழெங்ஹீ என்ற இசுலாமியச் சீனர் கடலோடிய போது அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதைக் கொண்டாட சிங்கப்பூரில் 2005-ல் சீனா கண்காட்சி நடத்தியது. 50 மில்லியன் டாலர் செலவில் சீனாவில் அருங்காட்சியகம் அமைத்தது. 

புகழ்பெற்ற திங்களிதழான Readers Digest 1971-ல் வெளியிட்ட Atlas-ல் நேபாளத்துக்கும் திபேத்துக்குமிடையே சோழர் கணவாய் இருந்ததை வெளியிட்டது. போலன் கைபர் கணவாய் பற்றிப் பேசிய நாம் சோழர் கணவாய் பற்றிப் பேசினோமா? சோழர் படைகள் அவ்வழியே சீனம் சென்றிராவிட்டால் அந்தக் கணவாய்க்குச் சோழன் கணவாய் என்ற பெயர் சொந்தமாகி இருக்க முடியுமா? இமயத்தின் உச்சியிலே வில்ää புலி கயல் எனும் மூவேந்தர் கொடிகளை பறக்க விட்டான் சேரன் செங்குட்டுவன் என்று பேசுகிறோம்! எழுதுகிறோம். ஆனால் எங்கே பறக்க விட்டான் என்று ஆய்வு செய்து நிறுவினோமா?

புகழ்மிகு News Week இதழிகை 30.08.2004-ல் Unearthing the Bible என்ற கட்டுரையை வெளிட்டது. மெலிண்டாவின் க. கிறிசுபோபர்டிக்கி எழுதிய இந்தக் கட்டுரையில் விவிலியம் கூறும் இடங்கள் ஊர்கள் அரசர்கள் பற்றி நடக்கும் தேடுதல் வேட்டைப் பதிவாகியுள்ளது. Foundation of Biblical Archaeology இத்தேடலில் ஈடுபட்டுள்ளது. அதுபோல் Foundation for Sangam Archaeology துவக்கும்படி நமது அரசை நாம் கேட்போமா?

26.9.2003-ல் வெளியான Frontline எட்டில் செய்தியாளர் டி.எசு சுப்பிரமணியன் சென்னையில் நடந்த கண்காட்சி ஒன்றில் இடம் பெற்றிருந்த வரைபடம் பற்றிக் குறிப்படுவார். “கி.மு. நான்காவது நூற்றாண்டில் இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் என்ற அந்தவரைபடம் தெற்கில் பல்லவ பாண்டிய சோழ சேரநாடுகளையும் வடக்கில் கடம்ப காசுமீர் காந்தார நேபாள விதர்பா நாடுகளையும் காட்டும் அந்த வரைபடத்தையாவது மக்களிடம் பரப்பி கி.பி. நான்காம் நூற்றாண்டின் தமிழகத்தையாவது அறிமுகம் செய்தோமா?

இன்றைய இந்தியத் தேர்தல் ஆணையத் துணை ஆணையரும் தமிழ்வழி இந்திய ஆட்சிப் பணியில் தேறியவருமான ஆர். பாலகிருட்டிணன் ஊர்ப்பெயராய்வு மூலம் தமிழன் இந்தியாலெங்கும் பரவி இருந்ததை வெளிப்படுத்துவார். Tamil A Toponymical Probe அவருடையது. ஆந்திரா (29)அருணாச்சலப்பிரதேசம் (11) அசாம் (38) பீகார் (53) கூச்சரம் (5) கோவா (1) அரியானா (3) இமாச்சலப்பிரதேசம் (34) கர்நாடகா (24) மகாராட்டிரா (120) மேகாலயா (5) மணிப்பூர் (14) மத்தியப் பிரதேசம் (60) நாகாலாந்து (4) ஓரிசா (84) பஞ்சாப் (4) ராஜஸ்தான் (26) தமிழ்நாடு (10) உத்திரப்பிரதேசம் (64) மேற்குவங்கம் (24) என இந்தியா எங்கும் “தமிழ்” எனத் தொடங்கும் 612 ஊர்களை அவர் பட்டியல் இடுவார். தமிழ்க்கோடா தமிழ்க்குடி எனத் தொடங்கும் இவ்வூர்களுக்கருகே மதுரை பழனி தேனீ என்றும் ஊர்ப் பெயர்கள் உளவாம். இவரை தமிழ்த் தொகைக் காட்சிகள் செவ்வி கண்டிட வேண்டாமா? அவர் சுட்டும் ஊர்களுக்குச் சென்று தமிழரின் பரவலைத் தரணிக்கு அறிவிக்கவும் இந்திய வரைபடத்தில் 612 தமிழூர்களை பதிந்து தமிழரின் இந்தியப் பரவலை என்று விளக்கும் வரைபடங்களை நம் பள்ளிகளில் - கல்விக் கூடங்களில் தொங்கவிட்டும் பாட நூலில் இடம் பெறச் செய்தும் பரப்புரை நிகழ்த்தல் நம் கடனன்றோ!

 புதிய புதிய நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்ந்துள்ளன. சிந்துச் சமவெளி அகழ்வாய்வும் புதுவை அருகன்மேட்டு அகழ்வாய்வும் நிலத்தில் அகழ்ந்து நிகழ்த்தப்பட்டவை. ஆயின் நம் பழந்தமிழகம் இன்றுள்ள தமிழகமா? இல்லை அன்றோ! எனவே கடலடி அகழ்வாய்வு மூலம் நம் முன்னோர் நாகரிகத்தைக் கண்டறிய முடியும்.
 
நம் கடற்கரையை ஒட்டிய கடலடி அகழ்வாய்வுகள் மூலம் சில புதிய தகவல்கள் கிடைத்தன. Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன். பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடத்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டலாவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது.

கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது. யேவழையெட ஐளெவவைரவந ழக ழுஉநயழெபசயிhல யும் இந்த ஆய்வில் இணைந்திருந்தது.



இதே குழு பூம்புகாரிலும் மாமல்லபுரத்திலும் ஆய்வில் ஈடுபட்டது. கிரகாம் ஆன் காக் கண்டுபிடிக்கும் முன்பே 1999ல் ஜி.பி. பங்கோத்ராவும் எம்.எச். பிரசாத்தும் கூட்டாக கட்டுரையில் கடலூர் புதையுண்ட மாமல்லபுரம் பற்றிச் சொல்லி இருந்தனர். இலண்டனில் இருந்து வந்திருந்த கடலுள் மூழ்கித் தேடும் கலை அறிந்தோருடன் தாம் கண்டறிந்தவை பற்றி கிரகாம் ஆன் காக் டர்காம் பல்கலைக்கழகத்தின் புவிஅறிவியல் துறைப்பேராசிரியர் டாக்டர் கிரௌன்மில்ன் அவர்களிடம் கருத்துக் கேட்டார். உயரிய தொழில்நுட்பம் செறிந்தக் கணினித் திட்டங்கள் மூலம் எந்தெந்தக் காலத்தில் எந்தெந்தக் கடற்கரை எவ்வாறு இருந்தது என்று காட்டக் கூடிய வரைபடங்களை உருவாக்குபவர் கிரௌன் மில்ன். மாமல்லபுரத்தில் கிடைத்த ஒளிப்படச் சான்றுகளை பார்த்து விட்டு கிரௌன் மிலன் 6000ஆண்டு முன் ஏற்பட்ட கடல் மட்ட உயர்வால் மாமல்லவுரம் கடலில் மூழ்கியது என்று உறுதிப்படச் சொன்னார். புவியியல் மாற்றம் எதுவும் அப்போது ஏற்படவில்லை. மாமல்லபுரம் அருகே கடல் மட்டம் உயர்ந்ததே அந்நகரம் கடலுள் மூழ்கக் காரணம் என்றார் கிரளன் மில்ன்.



மாமல்லபுரத்தில் இத்தகவலை வெளியிடமுடியாத அவலம். எனவே 10 ஏப்ரல் 2002-ல் இலண்டனில் 8 தெற்கு ஆட்லித் தெருவில் நேரு நடுவத்தில் செய்தியாளர்களிடம் கிரகாம் ஆன்காக் இதைப் பதிவு செய்தார். “தமிழ் நாட்டின் மாமல்லபுரம் அருகே கடற்கரையில் இருந்து 5-7 மீட்டர் தூரத்தில் தொடங்கி கடற்கரையில் ஓரு மைல் தூரம் வரை பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் புதையுண்ட நகரத்தின் சான்றுகள்; காணப்படுகின்றன. இலண்டனில் உள்ள அறிவியல் தேடுதல் சங்கத்தினரும் இந்தியக் கடலியல் ஆய்வு நடுவமும் கூட்டாக இணைந்து 25 பேர் கடலில் மூழ்கித் தேடும் நிபுணர்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் இது வெளிப்பட்டது. இக்கண்டுபிடிப்புகளின் ஒளிப்படக் காட்சியை www.atlantia.org இணையத்தில் காணலாம்.



பிரிட்டனில் உள்ள சானல் 4 தொலைக்காட்சி 2002 பிப்ரவரி 111825 ஆகிய நாட்களில் Flooded Kingdoms of Ice Age என்ற தலைப்பில் ஒளிபரப்பியது.

பென்ங்குவின் நிறுவனம் 7 பிப்ரவரி 2002-ம் Underworld : The Mysterious Origins of Civilization என்ற கிரகாம் ஆன்காக்கின் நூலை வெளியிட்டது.



அந்நூலில் பூம்புகார் ஆய்வில் தான் ஈடுபட்டக் காரணத்தை கிரகாம் ஆன்காக் விவரிக்கிறார்.



“1991 மார்ச்சு 23-ல் மூவர் பூம்புகார் அருகே கடலடியில் ஆய்வு செய்தபோது குதிரைலாட வடிவிலான கற்சுவரை கண்டுபிடித்தனர். கடலியலுக்கான தேசிய நிறுவனம் 23 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடித்த இச்செய்தியை இலண்டனில் உள்ள கிராகாம் ஆன்காக் அறிந்தார். அந்த ஆய்வில் ஈடுபட்ட எசு. ஆர். இராவைத் தேடி 2001-ல் பெங்களூர் வந்தார் கிரகாம் ஆன்காக். அவருக்கும் இராவுக்கும் நடந்த உரையாடலை கிரகாம் ஆன்காக்கின் நூல் பதிவு செய்கிறது. எவ்வாறு கால நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதற்கு கார்பன் 14” அளவு கோல்படி கணக்கிட்டோம் என்றார் கிராவ். ஒரு கட்டிடம் கடலில் 23 மீட்டர் ஆழத்தில் மூழ்கியுள்ளது. அவ்வளவு உயரம் கடல் மட்டம் உயரக் கடலியல் நிபுணர்களைக் கொண்டு கணக்கிட்டீர்களா? என்றார் கிரகாம் ஆன்காக். பிறகு மீண்டும் பூம்புகார் ஆய்வு நடக்கிறது. அதன் முடிவுகளை அறிவிக்க ஆய்வாளர்களிடையே கருத்து மோதல். கி.மு 2 (அ) 3 நூற்றாண்டுக்கும் மேலாக பூம்புகாரின் காலத்தை ஒப்புக் கொள்ள இந்திய ஆய்வாளர்கள் தயங்குகின்றனர். எனவே பெங்களூர் சென்று அங்கு மிதிக் சொசைடியில் பூம்புகார் கடலடியில் கண்டெடுத்தவைகளை – ஒளிப்படங்களை காட்சியாக்கிவிட்டு பூம்புகார் கடலுள் கி.மு. 9500 அளவில் மூழ்கியதென கிரகாம் ஆன்காக் அறிவித்ததை தினமணி நாளோடு செய்தியாக்கியது.

அச்செய்தி படித்த நாள் முதல் கிரகாம் ஆன்காக் இன்றைக்கு 11500 ஆண்டு முன்பு பூம்புகார் கடலில் மூழ்கியது என்றது அறிவியலுக்குப் பொருந்துகிறதா? என்று சிந்தித்தேன்.



“1970 முதல் நிகழ்ந்த ஆய்வுகள் உலகில் மூன்று காலக் கட்டங்களில் கடற்கோள்கள் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்.

15000-14000 ஆண்டு முன்பும்ää 12000-11000 ஆண்டு முன்பும் 8000-7000 ஆண்டு முன்பும் முப்பெரும் கடற்கோள்களை உலகம் எதிர்கொண்டது. பிளாட்டோ நூலில் பெருவெள்ளத்தில் அட்லாண்டிசு எனும் பெருங்கண்டம் மூழ்கியதாகச் சொல்லும் இயற்கைப் பேரிடர் 12000-10000 ஆண்டுகட்கிடையே நிகழ்ந்தது எனலாம். தமிழிலக்கியம் கூறும் குமரிக்கண்டமும் அதில் கூறப்படும் கடற்கோளும் இதே காலத்தினதே என தியோசபிகல் பல்கலைக்கழகம் வெளியிட்ட சன்ரைசு இதழில் ஹாரியங் எழுதி இருந்தார். கடைசி பனியூழிக்காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பூம்புகார் 11500 ஆண்டு முன்பு மூழ்கி இருக்கும் என்று கூறியதும் அறிவுக்குப் பொருந்தியது.



துவாரகையை கடலியல் நிபுணர்கள் ஆய்ந்து கடல் மட்டம் உயர ஆன காலத்தைக் கணக்கிட்டு அதன் காலம் கி.மு. 7500 ஆண்டுகள் என்றபோது எழாத எதிர்ப்பு பூம்புகார் கி.மு.9500 ஆண்டு என்று சொன்னபோது எழுந்தது என்றால் காரணம் என்ன? உடன் பிறந்தே கொல்லும் வியாதி காரணமா? கடலை ஒட்டிய ஆய்வுகளுக்கே இவ்வளவு எதிர்ப்புகள் என்றால் கடலடியில் ஆராயச் சொன்னால் என்ன ஆகும்? மனம் பதைத்தேன்.

இப்போது செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் google maps-wikimapia இரண்டும் தௌ;ளத்தெளிவாக காட்டுவதை சிறு குழந்தை கூடக் கணினியில் பார்த்துவிட முடியும். அப்படிப் பார்த்த போது புதுவை கடலை ஒட்டி இளநீல வண்ணமாக இருக்கும் கடல்தரை சிறிது தூரம் சென்றதும் கருமையான கடலைக் காட்டிடவே புதுவை கடற்கரைக்கு கிழக்கே கடலில் பள்ளத்தாக்கு இருப்பதை அறிந்தேன். கோவாவில் உள்ள கட்லுக்கான தேசிய நிறுவனம் கடலடியில் வெடிப்பு உள்ளதைச் சொன்னது. 1857-ல் கடலடியில் புதுவைஓட்டி பூகம்பம் ஏற்பட்டதும் பதிவாகி இருந்தது. 2172000 கிலோ மீட்டர் பரப்புடைய வங்கக் கடலில் புதுவையை ஒட்டிக் தொடங்கும் கடற்பள்ளத்தாக்கில் எவரும் தேடியதில்லை. மூச்சடக்கி மூழ்கித் தேட முடியாது. கருவிகள் துணையின்றிக் காரியம் ஈடேறாது! வங்கக் கடல் பற்றிய ஆய்வுகள் நடந்துள்ளன.ஆனால் கடலடியில் நாகரிகத்தைத் தேடும் ஆய்வுகள் நடக்கவில்லை.

தமிழக இலக்கியங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. தமிழக இலக்கியங்கள் மட்டுமல்ல உலகத்தில் 600 தொன்மங்கள் கடற்கோள் பற்றிப் பேசுகின்றன. நம் பிங்கல நிகண்டு நாவலந்தீவாக நம் நாடு இருந்தது பற்றிப் பேசும். ஆக நாற்புறமும் நீரால் சூழப்பட்டத் தீவாகத் தமிழகம் எங்கிருந்தது? என்ற வினா எழுந்தது.

உலகின் கண்டங்கள் எல்லாம் ஒரே கண்டமாக விளங்கியதை அறிவியல் உலகம் விளக்கியது.எல்லா நிலமும் என்று இலத்தீன் மொழியில் பெயரிடப்பட்ட ஒரே கண்டம் தெரிந்தது. இன்றைய உலக வரைபடத்தை எடுத்துவைத்துக் கொண்டு 1912-ல் கத்திரிக் கோலால் ஒவ்வொரு கண்டத்தையும் பொருந்துகிறதா என்று பார்த்து ஒரே கண்டமாக உலகம் இருந்தது பிரிந்தது என்று கண்டங்களின் இடப்பெயர்வுக் கோட்பாட்டின் தந்தையாக அறிவியல் உலகு பின்னாளில் ஏற்றுக் கொண்ட ஆல்பிட் வெக்கனர் 1912-ல் சொன்னார். அப்படி ஒன்றாக இருந்த பங்கேயோ பிரிந்ததை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமும் உலகின் பல நாட்டுப் பல்கலைக் கழகங்களின் புவி அறிவியல்துறையும் விளக்கும் படங்களை காட்டுகின்றன. அந்தப் படங்களில் நான்கு புறமும் நீரால் சூழப்பட்ட இந்தியா காட்டப்படுகிறது. நாவலந்தீவாக நாமிருந்தோம்! அறிவியல் உறுதி செய்தது. நாவலந்தீவாக நாம் எங்கிருந்தோம்? அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து மறைந்துபோன அட்வாண்டிசு பற்றி பிளாட்டோ பேசுவாரே? அதன் ஒரு பகுதியாக இருந்தோமா?

அட்லாண்டிசு இப்படி இருந்திருக்கக் கூடும் என அறிஞர்கள் பலர் வருணித்து பல வரைபடங்களை வெளியிட்டார்கள் இதை தொகுத்தாலே தனி நூலாகிடும்.பசிபிக் பெருங்கடலில் இருந்த இலமூரியாக் கண்டம் தேவாங்குகள் பல நாடுகளில் கிடைத்ததால் தேவாங்குகள் பெயரால் இலமூரியாக் கண்டம் எனப்பட்டது. நடுவண் இந்தியாவில் திராவிட இனத்தவரான கோண்டுகள் வாழும் பகுதியில் கிடைக்கும் செடி உறைபடிவமாக எல்லா இடங்களிலும் பொதுவாகக் கிடைத்தமையில் கோண்டுவானா எனவும் அக்கண்டம் பெயர் பெற்றது.
 
தமிழிலக்கியச் சான்றுகள் கொண்டு குமரிக்கண்டம் என்று நந்தமிழ் அறிஞர்கள் சொன்னதும் கொண்டுவானா எனப்படுவதும் இலமூரியா எனப்படுவதும் மூ என்று சொல்லப்படுவதும் ஒரே கண்டத்தையே! நம் அறிஞர்கள் கற்பனையில் கன்னியாகுமரிக்குத் தெற்கே கடலில் குமரிக்கண்டம் இருந்தாக சொன்னார்கள். அப்படிச் சொன்ன அறிஞர்களை மறுத்து ஒரு பெண் பேராசியை நூல் எழுதினார். கண்டம் ஒன்றும் மூழ்கவில்லை! ஒரு தாலுக்கா அளவே நிலம் மூழ்கியது என்றார். ஒருதாலுக்கா அளவு கடல் கொண்டதற்கா உலகின் 600 தொன்மங்கள் ஓலமிடுகின்றன என்று நெடிய பட்டியல் மூலம் உலகத் தொன்மங்களில் பெருவெள்ளக் கதைகள் பற்றிப் பேசும் 82நூல்கள் பற்றிக் குறிப்புகளுடன் இந்நூல் உங்களிடம் வருகிறது. ஒப்பிடுங்கள்! ஒப்பீடுகளை ஆய்வாக்குங்கள்! அறிவியலும் தமிழும் கைகோர்க்கட்டும். புதிய முடிவுகள் வரட்டும்! மேலும் புதிய உண்மைகள் வெளிவரின் அறிவை மேம்பாடு செய்க!

 
தமிழ்மாமணி நந்திவர்மன்



நாள் : 2.11.2010

புதன், 29 செப்டம்பர், 2010

200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்டது - அன்று



200 கம்பெனிகள் உலகை ஆளுவது இன்று

உலகை நடத்திச் செல்வது யார்?
உலகில் அரசுகளை இயக்குவது யார்;? நேரில் நாம் பார்க்கும் முகங்களா? நாடுகளின் தலைவர்களா? இல்லை இல்லை. அரசியல்வாதிகள் வெறும் பொம்மைகளே! பின்னால் இருந்து இயக்கும் பொம்மலாட்டக்காரர்கள் யார்? எவர்? என உலகமே அறியாது.

மக்கள் தேர்வு செய்யும்அரசுகள், பெரும் வணிகக் குழுமங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், வங்கி அதிபர்கள், இராணுவம் என இந்தக் கூட்டுச் சக்திகளே நாடுகளை இயக்குகின்றன என்பது பொதுவான கருத்தாகும். சதிகள் பற்றிய செய்திகளைச் சொல்லும் Conspiracy books திடுக்கிடும் பல தகவல்களை சொல்கிறது.

 செல்வாக்கு மிக்க பலம் பொருந்திய பல இரகசியக் குழுக்கள் காலங்காலமாக மன்னர்களையும் அரசுகளையும் பின்னிருந்து இயக்கி வந்துள்ளதை இந்த இணையதளம் பட்டியல் இடுகிறது Who really runs the World ? என்ற நூல் தாம் பர்னெட் மற்றும் அலெக்சு கேம்சு இணைந்து எழுதிய நூல் ஆகும்.இந்நூலோ உலகை உண்மையில் தங்களது சுயநல நோக்கத்துக்காக பின்னிருந்து ஆளுவது 200 பன்னாட்டு நிறுவனங்களே என்று “பகீர்” தகவலை தருகிறது.

உலகம் யாருடைய உடைமை என்ற நூல் கேவின் கே ஹில் எழுதியது. இந்நூல் உலகின் 197 நாடுகளிலும் 66 சுயாட்சிப் பகுதிகளிலும் யார்? எவர்? நில உடைமையாளர்களாக உள்ளனர் என விரிவாகவே பட்டியல் இடுகிறது.

உலகில் 26பெரும் நிலச்சுவான்தார்கள் உள்ளனர்.அய்ரோப்பாவின் நிலங்களில் 60சதவிகிதம் செல்வச்சீமான்கள் கையில் உள்ளது. ஓவ்வோராண்டும் 48000 மில்லியன் யுரோ வேளாண் ஊக்கத்தொகை இந்தச் சீமான்களுக்கே போகிறது. இப்படி விவரிக்கும் அந்நூல் உலகின் “நெம்பர் ஓன்” நில உடைமையாளராக சுட்டிக்காட்டுவது யாரைத் தெரியுமா? பிரிட்டன் நாட்டு அரசியார் ராணி எலிசபெத்தையே! அரசியாருக்கு உலகெங்கும் 6600 மில்லியன் ஏக்கர் நிலம் சொந்தம் சட்டப்படி சொந்தம். அந்தந்த நாட்டுச் சட்டப்படி சொந்தம். இந்த நிலத்தை மதிப்பிடுவது சிரமமே! ஓவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாக மதிப்பு இருக்கும். ஏக்கர் ஒன்று 5000 டாலர் என வைத்துக் கொண்டால் 33,000,000,000,000 (33 டிரில்லியன் டாலர்) மதிப்பு சொல்லலாம்! கனடாவில் மட்டும் 2467 மில்லியன் ஏக்கர். ஆசுதிரேலியாவில் 1900 மில்லியன் ஏக்கர். பப்புவா நியு கினியாவில் 114 மில்லியன் ஏக்கர் நியுசிலாந்தில் 66 மில்லியன் ஏக்கர்.

ஒரே ஒரு அரசியாருக்கு இவ்வளவு நிலம் சொந்தமா? இதை யாரும் பேசாமல், மறைந்த மூப்பனாருக்கு எவ்வளவு சொந்தம் என்பதையே தமிழ்நாட்டில் பேசினார்கள். வெளி உலக விவகாரம் தெரியாத காரணத்தால்தானோ? எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்று பொதுவுடமை பேசும் நண்பர்களுக்கு பிடித்தமான ரஷ்யநாடு தான் உலகின் இரண்டாவது நில உடைமையாளர். ரஷ்ய அரசுக்குச் சொந்தமாக 4219 மில்லியன் ஏக்கர் உள்ளது. சௌதி அரேபியா அரசர் அப்துல்லாவுக்கு 553 மில்லியன் ஏக்கரும் தாய்லாந்து மன்னர் பூஜ்பாலுக்கு 126 மில்லியன் ஏக்கரும் மொராக்கோ நாட்டின் அரசர் முகம்மதுவுக்கு 113 மில்லியன் ஏக்கரும் ஓமன் நாட்டு-சுல்தான் குவாபூசுக்கு 76 மில்லியன் ஏக்கரும் சொந்தமாக உள்ளன. 2007 பிப்ரவரி 27ல் எடுக்கப்பட்ட கணக்கு இது.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கூறி மக்களாட்சி நாடுகளில் மக்களை எமாற்றுகிறார்களே! எவரும் ஒழிந்து விட்ட மன்னராட்சியில் மன்னர்களுக்கா இவ்வளவு நிலங்கள் உடைமை என்று கேட்பதில்லையே ஏன்? இந்த மன்னர்களும் மக்களுக்கு நிலங்களை பகிர்ந்தளிக்க மனம் வராமல் இன்னும் பேராசைக்காரர்களாக இருக்கிறார்களே! இது நியாயம் ஆகுமா?

உலகின் நிலங்களில் 1ஃ6 ஆறில் ஒரு பங்கு அரசியார் எலிசபெத்துக்குச் சொந்தம். அதே போல் 2000 மில்லியன் ஏக்கர் அதாவது உலக நிலங்களில் 1ஃ16 பதினாறில் ஒரு பங்கு பெரும் நிலச்சுவான்தார்களிடம் உள்ளது.

இந்நூல் போலவே பல திடுக்கிடும் தகவல்களை உலக சோஷலிச இயக்கம் அள்ளித் தருகிறது.

உலகில் பத்து கோடா கோடீசுவரர்களிடம் 133 மில்லியன் டாலர் சொத்து உள்ளது. உலகின் வளர்ச்சி குறைந்த நாடுகள் அனைத்தின் தேசிய வருவாயை விட 1.5 மடங்கு (ஒன்றரை பங்கு கூடுதல்) இந்த 10 பேரிடம் மாட்டிக் கொண்டுள்ளது. இது 10 ஆண்டு முன்பு ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வெளியிட்ட புள்ளி விவரம்.

உலக மக்கள் தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ஒரேயொரு டாவருக்கும் குறைவாக வறுமையில் வாடும்போது 10 செல்வந்தர்கள் பன்னீரில் குளிக்கிறார்கள்.

1990 ல் இருந்ததைவிட இன்று 54 நாடுகள் ஏழ்மையடைந்துள்ளன. ஆப்ரிக்காவில் சகாரா பாலைவனத்தை ஒட்டியுள்ள 20 நாடுகளும் கிழக்கு அய்ரோப்பாவில் 17 நாடுகளும் இலத்தீன் அமெரிக்காவில் 6 நாடுகளும் கிழக்காசியாவில் பசிபிக் பகுதியில் 6 நாடுகளும் அரபு நாடுகளில் 5 நாடுகளும் முன்பை விட வறுமையில் வாடுகின்றன. முன்னேற்றப்படிகளில் கீழிறங்கி உள்ளன.

உலகை மாற்ற வல்ல 50 உண்மைகள் என்ற நூலை ஜெசிகா வில்லியம்சு எழுதினார். இதில் இன்னமும் உலகில் 27 மில்லியன் அடிமைகள் உள்ளனர் என்கிறார் அவர். ஆபிரகாம் லிங்கன் வந்ததும் அடிமைத்தளை அகன்றது என்று படித்தோம். இன்னமும் அடிமைத்தனம் நிலவும் அவலம் நீடிக்கிறதே! ஓவ்வொரு நிமிடமும் உலகெங்கும் கார்கள் மோதி 2 பேர் உயரிழந்த வண்ணமுள்ளனர். கென்யா நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் தன் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு லஞ்சமாக செலவழிக்கிறது என்று அதிர்ச்சித் தகவல்கள் நீளுகின்றன.

அமெரிக்காவில் மத்திய வங்கி 1900 ல் ஜியார்ஜியா மாகாணத்தில் உள்ள ஜெகிள் தீவுகளில் சில வங்கி அதிபர்கள் கூடி ரகசியமாக முடிவெடுத்ததால் உருவானது. அதை வங்கி என்று சொல்லாமல் வார்த்தை ஜாலம் காட்டி குநனநசயட சுநளநசஎந ளுலளவநஅ என்று பெயரிட்டு அமெரிக்கர்கள் கண்ணை ஏமாற்றினார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்த வங்கிகள் மூலமாக பணத்தை உலகின் எந்தப் பகுதிக்கும் கொண்டு சென்று லாபமீட்டினர். பதுக்கி வைத்தனர். சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவித்தனர். தங்கள் சட்டைப் பைக்குள் அரசியல் தலைவர்களை தூக்கி வைத்துக்கொண்டு நாடுகள் மக்கள் நலம் நாடாமல் தங்கள் நலன் பேணுமாறு பார்த்துக் கொண்டனர்.

இந்த வணிகச் சூதாடிகளும் வங்கிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அணிந்து கொண்டுள்ள இன்னொரு முகமூடிதான் சர்வதேச நாணய நிதியம்! இந்த நிதியம் வளரும் நாடுகளுக்கு கடன் தருகிறது. கடனோடு கடுமையான நிபந்தனைகளும் விதிக்கிறது. வணிக நலனுக்காகவே செயல்படும் இந்த நிதியத்தின் அடிமைகள்தான் இந்தியாவையும் ஆளுகிறார்கள்! இவர்கள் பொம்மைகள்! சர்வதேச நாணய நிதியமே பொம்மலாட்டக்காரன். பன்னாட்டு நிறுவனங்களின் பகல் கொள்ளை! உலகில் ஏழைகளுக்கு என்றும் விடிவே இல்லை!.

நந்திவர்மன்!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

RENAMING OF SRILANKA

சிறிலங்காவின் பெயரை ஈழம்
என்று மாற்றக் கோரிக்கை

அக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கும் ஈழு என்ற நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள்.அதனால் இலங்கைக்கு ஈழம் என்றும் ஈழமண்டிலம் என்றும் பெயர் உண்டானது.

ஈழம், சீழம் என மருவிச் சிஹழம் சிங்களம் என மாறிற்று. சீழம் என்னும் பெயரில் இருந்தே சீழம்தீப் சேரன்டீப் என்னும் அராபிய நாமங்களும் சிலாங், சிலோன் என்னும் மேலைத்தேயததவரிட்ட பெயர்களும் வந்தன்.

 சிஹ வென்னும் பாலி மொழிச்சொல் சிங்கம் என்னும் பொருள் உடையதானபடியால் சிஹழம் சிங்களமாக மருவிற்று. இத்தகவல் திரு.சி.இராசநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் நூலின் பக்கம் 12ல் உள்ளது

எனவே ஒருலட்சம் தமிழரை கொன்று குவித்து ஒன்றுபட்ட இலங்கைகுள் வாழச் சொல்லும் சிஙகள அரசு வரலாற்றுப்பிழையை திருத்தி சிறிலங்கா என்ற பெயரை எந்த மூலச்சொல்லில் இருந்து அந்தச் சொல் பிறந்த்தோ அந்த மூலச்சொல் ஆன ஈழம் என்ற பெய்ரையே சூட்ட வேண்டும் என திராவிடப் பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் ஒன்றுபட்ட நாடு வேண்டுமானால் சிறிலங்காவின் பெயரை ஈழம் என்ற பழைய பெயரையே சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்


 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தமிழ்மாமணி விருது

புதுச்சேரி அரசு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரின் தந்தையாருமான் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் வெ.வெங்கடசுப்பா [ ரெட்டியாரின்] நூற்றாண்டு விழாவை 16.08.2010 அன்று செயராம் திருமண மண்டபத்தில் கொண்டாடியது.அதில் 2008-2009 ஆண்டுக்கான தமிழ்மாமணி விருதுகளை ஆறு தமிழ் அறிஞர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.இக்பால் சிங் வழங்கினார். 91 வயது மூத்த தமிழறிஞரும் பாவேந்தரின் சீடருமான வைணவ வித்தகர் சித்தன் அவர்களும்,திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நாவலர்.நந்திவர்மன் அவர்களும், பேராசிரியர் திருமாவளவன் அவர்களும், புலவர் திருமேனி நாகராசன் அவர்களும்,பரிதி.வெங்கடேசன் அவர்களும், மா.தன.அருணச்சலம் அவர்களும் விருதுகளையும் 30,000 ரூபாய் பொற்கிழியையும் 3 பவுன் தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

முதலமச்சர் வெ.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.
கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர்  எம்.ஒ.எச்.ஷாஜகான் வரவேற்றார்.
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா,சிவா, ஆர்,விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

47 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும் 20,000 ரூபாய் பொற்கிழியும் 2 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தமிழ் மாமணி





தமிழ் மொழிக்காப்புக்காக 1965ல் மொழிப்போர் நடத்திய நந்திவர்மனை
2008-2009 ஆம் ஆண்டுக்கான தமிழ் மாமணி விருதுக்கு புதுச்சேரி அரச் தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பதை தெரிவித்து கடலடியில் தமிழர் நாகரிகம் நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் வாய்ப்பு உள்ளதால் எழுதத் தொடங்கி உள்ளேன். ஆகத்து 18 ல் என் 64 அகவை தொடங்கும் நாளுக்குள் எழுதி முடிக்க கருதுகிறேன்.

நந்திவர்மன்

புதன், 2 ஜூன், 2010

தமிழ் ஈழத்தை

தமிழ் ஈழத்தை ஏற்க முடியாது. போரின் மூலம் இனப்பூசலுக்கு தீர்வு காண இயலாது என்று அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க துணைச் செயலாளர் தாமசு பிக்கரிங் அவர்களும் ;இந்திய அயலுறவுத் துறை செயலாளர் இலலித் மான்சிங் அவர்களும் கூட்டாக கொள்கை முடிவை குவலயத்திற்கு ;அறிவித்துள்ளார்கள் (24.5.2000). தமிழ் ஈழத்தை இந்தியா ஒரு நாளும் ஏற்காது. இலங்கையின் அரசமைப்பு;ச சட்டத்துக்கு உட்பட அரசியல் தீர்;வை மட்டுமே இந்தியா ஏற்கும் என கிளிப்பிள்ளைகள் போல் சொன்னதையே திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலங்கையில் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு தீர்வு காண இயலுமா? என ஆராய்வது அறிவுடையோர் கடமையாகும். .கூட்டாட்சி நாடாக இலங்கை மாறிட இலங்கை அரசமைப்புச் சட்டம் இடம் தருகிறதா? மாநில சுயாட்சி இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு வாங்க முடியுமா? என்று பார்த்தால் இடமில்லை என்பதும் முடியாது என்பதும் விடையாகக் கிடைக்கும்.

1978 ஆண்டு அரசமைப்புச் சட்ட விதி  சிறிலங்கக் குடியரசு ஒரு ஓராட்சி நாடு என்கிறது. அதே சட்டவிதி 76 பாராளுமன்ற எந்த விதத்திலும் தன் சட்டமியற்றும் அதிகாரத்தை விட்டுத் தராது. சட்டமியற்றும் அதிகாரம் படைத்த எந்த அமைப்பையும் ஏற்படுத்தாது. இவ்விரு பரிவுகளும் அரசியல் சட்டத்தில் ;இடம் பெற்றுள்ளவரை மாநிலங்களுக்கு சுயாட்சி என்பதும் மத்திய கூட்டாட்சி என்பதும் நடைமுறைச் சாத்தியமல்ல.

அரசியல்சட்டத்திற்கு உட்பட்டு அமைதியான தீர்வு காண எத்தனையே முயற்சிகள் தோற்றுள்ளன ஈழத்து காந்தி என்றழைக்கப்பட்ட செல்வநாயகம் -டட்லி சேன நாயகாவிடம் அளித்த நான்கு கோரிக்ககைளை மீண்டும் இங்கு நினைவுபடுத்திக் கொண்டாலே போதுமானது

1. இப்போதுள்ள ஒற்றையாட்சி அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக கூட்டாட்சி அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் பேசும் பகுதிகளின் சுயாட்சியை அங்கீகரித்தல்.
2. நாட்டின் ஆட்சி மொழித் தகுதியில் தமிழுக்கும் சிங்களத்துடன் சரியாசனம் அளித்து 1956க்கு முந்தைய நிலைக்கு திரும்புதல். 
3. இலங்கையில் வசிக்கும் இந்திய வமிசாவழித் தமிழர்க்கு குடியுரிமை அளித்தல்.
4. பாராம்பரியத் தமிழர் வாழிடங்களில் திட்டமிட்டச் சிங்களவக் குடியேற்றங்களை நிறுத்திக்கொள்ளல்.

இந்தக் கோரிக்கைகளை அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல என்றுமே எந்தச் சிங்கள அரசும் ஏற்காது. ஆக அமெரிக்காவும்ää நார்வேயும் இந்தியாவும் தலைகீழாக நின்றாலும் கூட சிங்கள போரினவாத அரசு ஒரு போதும் தமிழர் உரிமைகளை தரப்போவதில்லை. தமிழர் மட்டும் அல்ல அமெரிக்கர் விரும்பினால் கூட இலங்கை அரசு அவர்களுக்கு சமஉரிமை தரமாட்டார்கள். ஏனெனில் சிங்களவர்கள் முதன் முதலில் கத்தோலிக்கர்களையே குறிவைத்து தாக்கினார்கள் என்பதை அமெரிக்காவும்ää நார்வேயும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

கத்தோலிக்கர் எதிர்ப்பு கலவரங்கள் :

புத்தமத குருவான அனகாரிக தர்மபாலர் பிரிட்டீ~hரைப்பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

றூநn வாந யnஉநளவழசள ழக வாந pசநளநவெ hழடனநசள ழக ழரச டிநடழஎநன ளைடயனெ றநசந சரnniபெ யெமநன in வாந கழசநளவ ழக டீசவையin றiவா வாநசை டிழனநைள pயiவெநனஇ யனெ டயவநச ழn றாநn வாநசை யnஉநளவழசள hயன பழநெ ரனெநச வாந iஅpநசயைட சரடந ழக சுழஅந யனெ ளழஅந ழக வாநஅ றநசந டிநiபெ ளழடன யள ளடயஎநள in வாந அயசமநவ pடயஉந ழக சுழஅநஇ ழரச யnஉநளவழசள றநசந யடசநயனல நதெழலiபெ வாந கசரவைள ழக வாந படழசழைரள யனெ pநயஉநகரட உiஎடைளையவழைn றாழளந ளநநனள றநசந ளழறn டில வாந ளஉழைளெ ழக வாந ளுயமலயாழரளந 540 டீ.ஊ....

என்று சிங்கள வம்சத்தைப்பற்றி பெருமையோடு பேசுகிறார். தர்மபாலர் டீரனனாளைஅ றயள வாந சநடபைழைn ழக வாந ளவயவந in ஊநலடழn டமைந வாந ஊhரசஉh ழக நுபெடயனெ in வாந டீசவைiளா ஐளடநள....

எனவே கத்தோலிக்கர்கள் ஒன்று புத்த மதத்தை தழுவவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் ஊட்டிய வி~மப்பிரச்சாரம் கலவரத்தில் முடிந்தது.

தமிழர் - சிங்களவர் இனமோதல்கள் 1983 முதல் உச்சகட்டமடைந்ததாகக் கூறுவதில் முழு உண்மை இல்லை. குமாரி செயவர்த்தனா எழுதிய சிறிலங்காவில் இன மற்றும் வர்க்க மோதல்கள்என்ற நூல் சிறிலங்காவின் அண்மைக்கால வரலாற்றில் ஏற்பட்ட முதல் கலவரங்கள் கொழும்புவை அடுத்துள்ள கோட்டஏனா பகுதியில் சிங்கள பௌத்தர்களுக்கும்ää கத்தோலிக்கர்களுக்கு இடையே 1883 நடந்தவைதான்
என்று கூறுகிறது. கத்தோலிக்கர்களே பௌத்தச் சிங்கள மதவாதிகளின் முதல் இலக்காக இருந்ததை வரலாறு நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

இதனை அடுத்து பம்பாயிலிருந்து வந்துள்ள வணிகர்களையும் தென்னிந்திய சிறு வியாபாரிகளையும் குறிவைத்து பௌத்த மதத் தலைவர் அனகாரிக தர்மபாலா கடும் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டார்.

வுhந ஆராயஅஅநனயளெஇ யn யடநைn pநழிடநஇ றாழ in வாந நயசடல pயசவ ழக வாந niநெவநநவொ உநவெரசல றநசந உழஅஅழn வசயனநசளஇ டில ளூலடழஉமயைn அநவாழனள டிநஉயஅந pசழளிநசழரள டமைந வாந துநறள. வுhந யடநைn ளுழரவா ஐனெயைn ஆராயஅஅநனயn உழஅநள வழ ஊநலடழnஇ ளநநள வாந நெபடநஉவநன டைடவைநசயவந எடைடயபநசள றiவாழரவ யலெ நஒpநசநைnஉந in வசயனநஇ றiவாழரவ யலெ மழெறடநனபந ழக யலெ மiனெ ழக வநஉhniஉயட iனெரளவசல யனெ ளைழடயவநன கசழஅ வாந றாழடந ழக யுளயை ழn யஉஉழரவெ ழக hளை டயபெரயபநஇ சநடபைழைn யனெ சயஉநஇ யனெ வாந சநளரடவ ளை வாந ஆராயஅஅநனயn வாசiஎநள யனெ வாந ளழn ழக வாந ளழடை பழநள வழ வாந றயடட....

றூயவ வாந புநசஅயn ளை வழ வாந டீசவைiளாநச வாயவ வாந ஆராயஅஅநனயn ளை வழ வாந ளுinhயடநளந. ர்ந ளை யn யடநைn வழ வாந ளுinhயடநளந டில சநடபைழைnஇ சயஉந யனெ டயபெரயபந. ர்ந வசயஉநள hளை ழசபைin வழ யுசயடியை.

இந்த வெறுப்பு நவீன இந்தியாவில் தென்னிந்தியர்களுக்கு எதிராக சிவசேனை கட்டவிழ்த்துவிட்ட கலவரங்கள் போல 1915ல் இலங்கையில் கலவரம் ஏற்படவும் சிறு வியாபாரிகளாக தென்னிந்திய முஸ்லீம்கள் ஏராளமாக அக்கலவரங்களில் மடியவும் காரணமாயிற்று.

1930ல் மூன்றாவது குறி திருவிதாங்கூரிலிருந்தும் கொச்சினில் இருந்தும் அங்கு சென்று குடியேறிய 30ää000க்கும் மேற்பட்ட மலையாளிகள் மீது வைக்கப்பட்டது. ஷவிரையா என்ற ளசிங்கள இதழில் நமது கேரளப் பொதுவுடமைத் தலைவர் ஏ.கே. போபலனிடம் பயிற்சி பெற்று தொழிற் சங்கவாதியாக இலங்கையில் வளர்ச்சி பெற்ற அ.ஈ. குணசே சிங்கா அவர்களே மலையாளிகளுக்கு எதிரான வி~மப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார் என்பது வேதனை தரவல்ல தகவலாகும்.

தோட்டத் தொழிலாளராகப் பிழைப்பு தேடி தென்னிந்தியாவில் இருந்து அங்கு சென்ற தமிழர்களுக்கு எதிராகப் பகை கக்கிய அனகாரிக தர்மபாலர் 1902ல் பிரிட்டிசார் தீணடத் தகாதவர்கள் இந்த மண்ணில் குடியேற அனுமதிப்பதா? என்று கண்டனம் செய்கின்றார். ஆக பூர்வீக குடிகளான தலித் மக்கள் மீது - ஆதி திராவிடர் மீது - இந்துமதவாதிகளுக்கு மட்டுமல்லää பௌத்த மதவாதிகளுக்கு கூட வெறுப்புணர்ச்சி ஓங்கி இருந்ததை இந்தக் கூற்று வெளிப்படுத்துகின்றது. 1920ல் அனைவருக்கும் வாக்குரிமையை பிரிட்டிசார் வர்ங்கும் முன்பாக இந்தத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக படுமோசமான சூழ்நிலையில் பரிதாபத்துக்கு உரியவர்களாக வாழ்ந்த போதே பௌத்த சிங்களவர்கள் வெறுப்பைக் கக்கி இவர்களை விரட்டியடிக்க வரிந்துக் கட்டிக்கொண்டு நின்றார்கள். .இந்த வெறுப்பின் வெளிபாடுதான் இந்த வமிசாவழித் தமிழர் நாடற்றவர்களாக்கப்பட்டு பண்டமாற்று வியாபாரம் போல பணயக் கைதி பரிமாற்றம் போல சிறிமாவோ சாசுதிரி ஒப்பந்தத்தால் சூறையாடப்பட்டு சின்னாபின்னமாகும் வரை நீடித்தது.

ஆக கத்தோலிக்க கிறித்துவரைää வடஇந்திய வியாபாரிகளைää தென்னிந்திய முசலீம்களைää மலையாளிகளைää தமிழகத்திலிருந்து குடியேறிய தலித் சகோதரர்களை படிப்படியாக விரட்டி அடிக்க வெறி கொண்டு அலைந்த சிங்கள மதவாதக் கும்பல்கள் அடுத்த இலக்காக இலங்கையின் புhவிக குடிகளான தமிழர்களை ஆக்கிக் கொண்டார்கள் என்பது வரலாறு.

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் மூலம் தமிழர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பறிப்பு :

சிங்கள குடியேற்றம் மூலம் தமிழர் மரபு வழி தாயகம் தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றதிற்கு அனுப்ப முடியாத நிலமை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நாகநாதன் பாராளுமன்ற உரையில் இலங்கையில் காட்டு விலங்குகளையும் பறவைகளையும் பேணிக்காப்பதற்கு காட்டுப்பகுதிகள் நிலையாக ஒதுக்கப்படுகின்றன. ஆனால் காட்டு விலங்குளிலும் பறவைகளிலும் கீழாக மதிக்கப்படும் இலங்கைத் தமிழரின் மரபுவழி தாயகமோ திட்டமிட்டு அரசாங்கத்தினால் பறிக்கப்படுகின்றது. இதனால் தமிழர் இந்நாட்டில் தொடர்ந்து வாழமுடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கூறுவதில் இருந்து புலனாகும் 1921ம் ஆண்டில் வடகிழக்கு மாகாணங்களில் இருநத சிங்கள மக்களின் மொத்த எண்ணிக்கை 11ää040 ஆகும் 1946இல் இவர்களின் தொகை. ஏறக்குறைய நான்கு மடங்கால் பெருகி 37ää 159ஆக விளங்கியது. இதன் விளைவாக 1950ம் ஆண்டு முடியுமுன் தமிழ் ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிங்களப் பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கு அனுப்பும் அளவிற்கு சிங்களப் மக்களின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் பெருகியது. 1971ன் குடித்தொகையின் படி வடகிழக்கு மாகாணங்களில் குடியேறிய சிங்களவர்களின் எண்ணிக்கை 2ää36ää869 இலட்சமாக அல்லதுரு 1921ன்னுடன் ஒப்பிடுகையில் 21மடங்காக நினைக்க முடியாதளவிற்கு மிகப்பெருகி விட்டதுää ஏற்கனவே அம்பாறைத் தொகுதியை அபகரித்து கிழக்குமாகாணத்தின் ஒரு முக்கிய பகுதியை விழுங்கி ஏப்பம் இட்டது சிங்கள அரசு.

இந்த சிங்களமயமாவதை சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களே கண்டித்துள்ளனர். சுpங்கள தேசிய கொடி உருவாக்கப்பட்டபோது 1951ல் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள். டாக்டர் என்.எம் பேரெரா அந்த கொடியை சிறுபான்மை மக்கள் மீது இழைக்கப்பட்ட மோசடி என்றார் ஐவ ளை ய கசயரன pநசிநவசயவநன ழn வாந அiழெசவைநைள. வுhநல (ளுinhயடநளந) யசந பழiபெ வழ hயஎந வாந டுழைn குடயப யனெ வாநளந ளவசipநள யசந கழச வாந ழரவஉயளவள (ர்யளெயசனஇஎழட9இ உழட 1565-1684) 1955ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என சட்டம் கொண்டுவரும் பொழுது பாராளுமன்றத்தில் 19.10.1955இல் ஒரு திருத்த தீர்மானத்தை பேரெரா கொண்டுவந்தார் சிங்களத்தோடு தமிழும் சமதகுதி படைத்த ஆட்சி மொழியாக இருக்கவேண்டும் என்ற அவரது தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது அப்போது அவர் சொன்னார் தமிழர்கள் ஒரு போதும் சிங்கள மொழியை ஏற்கப்போவதில்லை உங்கள் திணிப்பு தொடர்ந்தால் வன்முறையும் உள்நாட்டு போருமே மூலும் தமிழர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் அவரின் எச்சரிக்கையை சிங்கள பேரினவாத அரசு ஏற்கவில்லை அவரது வாக்கு பலித்துவிட்டது பாராளுமன்றத்தில் சிங்கள உறுப்பினருள் வெறி பிடித்தவர்களும் இருந்தார்கள் திரு சகாரா பலனசூரியா என்ற எம்.பி. பேசுகையில் பாக்சலசந்திக்கப்பால் தமிழ் மொழி பேசக்கூடியவர்கள் நான்கு கோடிபேர் இருக்கிறார்கள். அவர்கள் தமிழை பயன்படுத்தி கொள்ளட்டும் இலங்கை தமிழர்கள் தமிழை கைவிட்டுவிட்டு சிங்களவருடன் இரண்டறக் கலக்கட்டும் என்றார். அதற்கு பதிலடியாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சி. சுந்தரலிங்கம்

நாங்கள் சிங்களத்தை கற்கும் முன்னால் ஆயதத்தை பயன்படுத்த கற்றுக் கொள்வோம் என்றார்.இவர்கள் விடுதலை புலிகள் அல்ல தமிழ் மிதவாத கட்சிகளை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள். இன்னும் சொல்லப்போனால் தனித்தமிழீழத்தை பிரகடனம் செய்தவன் இந்திய கைகூலியான வரதராசா பெருமாளே. தமிழீழத்தை பிரகடனம் செய்து விட்டு இந்தியாவுக்குள் அடைக்கலம் புகுந்த வரதராசபெருமாளுக்கு இந்தியா ஆதரவு அளித்த போது தமிழீழத்தை இந்தியா ஏற்றுக்கொண்டதாக பொருள்படும். ஆக மிதவாத பாராளுமன்ற உறுப்பினர்கள் முதற்கொண்டு இந்திய கைகூலி வரை தமிழீழம் மட்டுமே தீர்வு என்று 40 ஆண்டுகளுக்கு மேலாக கூறிவந்துள்ள நிலையில் இந்தியா இன்று சிங்கள பேரினவாதிகளுக்கு பின் பாட்டு பாடுகிறது. ஏன்?

சிங்களபேரினவாதிகள் இலங்கையை தங்களுக்கு மட்டுமே உரிய நாடு என்று நம்புகிறார்கள். தங்கள் இனம் மட்டுமே அந்த நாட்டில் வாழ வேண்டும்ää தங்கள் மதம் மட்டுமே அனைவராலும் பின்பற்றபட வேண்டும். தங்கள் மொழி மட்டுமே அனைவராலும் பேசப்படவேண்டும் என்று இனவெறியர்களாகää மதவெறியர்களாக மொழிவெறியர்களாக பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் சிங்களவர்கள் இன சிக்களுக்கு நியாயமான தீர்வு வழங்குவார்கள் என்று இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்பார்த்து ஏமாறப்போகிறார்கள்.

சிங்களவரின் மதவெறியும் பேரினவாதமும் :

சிங்களவரின் புனித நூலான மகாவம்சம் போதி ஞானம் அடைந்த ஒன்பதாம் மாதத்தில் இலங்கைக்கு புத்தர் வந்ததாக கூறுகிறது. இதைப் பற்றி மகாவம்ச வரிகளை படித்தாலே சிங்களவர்கள் எத்தகைய வெறியர்கள் என்பது வெளிப்படும்.

தமது மார்க்கம் பிற்காலத்தில் புகழுடன் திகழப்போகும் இடம் இலங்கை என்பது அவருக்கு அப்பொழுதே தெரிந்து இருந்தது. அப்போது இலங்கையில் யட்சர்கள் நிரம்பி இருந்தனர் அவர்களை அங்கிருந்து விரட்ட வேண்டும் என்பது அவருக்கு தெரியும் என புத்தருடைய வேலைதிட்டத்தை மகாவம்சம் வரையறைசெய்கிறது ஒரு நாட்டு குடிமக்களை அங்கிருந்து விரட்டி அடித்து விட்டு புத்தர் யாருக்கு உபதேசம் செய்தார்? இதற்கு மகாவம்சமே பதில் அளிக்கிறது.

புத்தர் மகாவம்ச கதைப்படி வானவெளியில் இருந்து புயலையும் இருளையும் உண்டாக்கி யட்சர்களை அச்சம் ஊட்டினார். மிரண்டு போன யட்சர்களிடம் இங்கே நான் உட்காருவதற்கு ஒரு இடம் கொடுங்கள் என்று வேண்டினார். யட்சர்கள் இறைவனே எங்கள் தீவு முழுவதும் வேண்டுமானாலும் தருகிறோம் என்று கூறினார்கள் பிறகு யட்சர்களுடைய பயத்தையும்ää குளிரையும்ää இருட்டையும் போக்கிய புத்தர் யட்சர்கள் அளித்த தோலின் மீது அமர்ந்து கொண்டு கிரீத்வீபாம் எனப்படும் தீவை (அனேகமாக நிக்கோபார் தீவாக இருக்கலாம்) அருகில் வரவழித்தார் யட்சர்களை அங்கு போய் தங்க செய்தார் யட்சர்கள் அங்கு போய் தங்கியதும் அந்த தீவை பழைய இடத்திற்கே போக செய்தார்.

இப்படி இலங்கையின் பூர்வக் குடிமக்களை விரட்டியடித்துவிட்டு கருணையின் வடிவமான புத்தரே நடந்துக் கொண்டதாக நம்புகிறவர்கள் எப்படி தமிழர்களோடு ஒரே அரசமைப்பு சட்டத்தின் கீழ் ஒரே நாடாக வாழ முடியும்?

பிறகு புத்தர் செய்தது என்ன?தேவர்கள் வந்து கூடினர் தேவர்கள் கூட்டத்தில் புத்தர் தமது தர்மத்தை போதித்தார். கோடிக்கணக்கான சீவர்கள் மதம் மாறினார்கள். கணக்கற்றவர்கள் திரிசரணம் அடைந்து சீலத்தை அடைந்தனர் எனமகாவம்சம் கூறுவது ஆழ்ந்த பொருள் உடையது இலங்கைக்கு போன புத்தர் பூனல் அணிந்தவரா என்ற ஐயப்பாடு இந்த வரலாற்றால் தோன்றுகிறது.

புத்தமத வெறியராக விலங்கிய அனகாரிக தர்மபாலர்(1864-1933) சிங்களர்களைப் பற்றி பேசுகிறபோது நாம் வங்க நாட்டுக்கும் கலிங்கத்துக்கும் இடையே உள்;ள லடா என்ற நாட்டில் இருந்து 2400 ஆண்;டுகளுக்கு முன்னால் இலங்கைக்கு வந்து அனுராதபுரத்தில் குடியேறினோம் என்பதை ஒப்புக்கொள்கிறார் ஆனால் எவ்வளவு நாகரிகமற்;ற காட்டுமிராண்டிகள் சிங்களவர்களிடன் மூதாதையர்கள் என்பதை தர்மபாலர் கூறமாட்டார். ஆனால் அவர்களின் புனித நூலான மகாவம்சம் கூறும்.

வங்க அரசனுக்கும் கலிங்க அரசக்குமாரிக்கும் பிறந்த பெண் காமவெறிக்கொண்டவளாக வீட்டை விட்டு வெளியேறினாள். மாறுவேடத்தில் வணிகர்கள் குழுவோடு சென்ற அரசகுமாரி லால நாட்டு காட்டில் சிங்கம் ஒன்று கண்டு காமுற்றது அந்த சிங்கத்திற்கும் அரசகுமாரிக்கும் சிம்மபாகு என்ற மகனும் சிம்மசீவளி என்ற மகளும் பிறந்தனர். மகன் பிறந்து 16 ஆண்டுகள் ஆகும் வரை சிங்கத்தால் குகையில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள் அங்கு இருந்து தப்பினர் இவர்கள் தப்பியதால் சினம் கொண்ட சிங்கம் அக்கம் பக்கத்து ஊர்களை தாக்கியது. அந்த சிங்கத்தின் தலையை வெட்டி வருவோருக்கு மூவாயிரமும்ää ஆட்சியில் பங்கும் தருவதாக அரசன் அறிவித்தான். அது கேட்டு சிம்மபாகு தன் தந்தையான சிங்கத்தை கொன்று அதன் தலையோடு வங்க நாட்டு தலைநகருக்கு வந்தான் அவனுக்கு அளிக்கப்பட்ட ஆட்சி தன் தாயின் புதுக் கணவனுக்கு பரிசாக அளித்துவிட்டு மீண்டும் லாலா நாட்டுக்கு திரும்பி சிம்மபுரம் என்ற நகரை அமைத்து தன் தங்கையான சிம்மசீவளியை திருமணம் செய்து கொண்டு 16 முறை இரட்டை குழந்தைகளாக 32 பிள்ளைகளை பெற்றான். இவர்களின் மூத்தவன் தான் சிங்களவம்சத்தின் முன்னோடியான விசயன்.
விசயனுடைய கொடும்செயல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் சிம்மபாகுவிடம் முறையிட அரசன் விசயனையும் அவனுடைய கூட்டாளிகளான 700 பேர்களையும் பாதி தலைமயிரையும் சிரைத்துவிட செய்து ஒரு கப்பலில் ஏற்றி துறத்தி அடித்தான். அப்படிப்பட்ட விசயன் தான் இலங்கைக்கு வந்து அங்கு இருந்த ஒரு யட்சனியை வசப்படுத்தி அவள் துணையோடு யட்சர்கள் அனைவரையும் கொன்று குவித்த பிறகு அரசுக் கட்டிலில் ஏற உயர் குலமங்கை ராணியாக வேண்டும் என்ற உடன் பாண்டிய மன்னனுக்கு தூது அனுப்பினான் அதன்படி பாண்டிய மன்னன் நூற்றுக்குமேற்பட்ட தமிழ் பெண்களையும் தனது மகளையும் இலங்கைக்கு அனுப்பி வைத்தான் பாண்டியன் மகளை விசயன் மணந்தான். ஏனைய பெண்களை அவனின் அமைச்சர்களும் அதிகாரிகளும் மணந்தனர். இப்படி தமிழ் கலப்பால் உருவான இனம் தான சிங்கள இனம். இருந்தபோதிலும் சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்று பெருமையோடு அழைத்து கொள்கிறார்கள். அதை நம்பி சில ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர்களும் மத்திய ஆட்சியில் உள்;ள அதிகாரிகளும் ஆரியரான சிங்களவர்களை ;ஆதரிப்போம் திராவிடரான ஈழத்தமிழ்களை ஒழிப்போம் என்று கூச்சல் இடுகிறார்கள். சிங்களவர் மலைச்சாதியினர் அவர்களின் சிம்மபுரம் இன்று ஒரிசா மாநிலத்தில் உள்ள ராயகடா மாவட்டத்தில் உள்;ள சிங்கபுர் என்ற ஊராகும் அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களை ஆரன்ய பிராமின் என்று அழைத்து கொள்கின்றனர். இந்த காட்டுவாசிகள் எப்படி பிராமிணர்களாக முடியும்? இந்த வரலாற்று உண்மை புரியாமல் சிங்களவன் ஆரியன் என்று நம்பி அவர்களுக்கு ஆதரவாக இந்தியாவில் இருந்து குரல் கொடுப்பவர்களை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.

புத்தமத போதகரான அனகாரிக தர்மபாலர் கூறிய சில கருத்துக்களை இங்கே நிணைவுகூறுவது சிங்கள ஆதரவாகவர்களின் பித்தம் தெளிய சிரியான மருந்தாகும்

பிராமணியம் என்பது இருபிறப்பாளரான மூன்று சாதியினருக்கு மட்டுமே உரியது. பிராமணர்களுக்கு தங்களின் மந்திரங்களை பற்றி அகந்தை உள்ளது பிராமண முனிவர்கள் சுயநலத்தில் சிறந்தவர்கள். அவர்களுக்கு இருந்த ஆன்மீக சக்தி கடவுள்களுக்கே அச்சம்முட்ட கூடியது. அவர்களுக்கு கோபம் வரும் பொழுது சபிப்பார்கள். துருவாசரும் பிருகுவும் விட்னுவையும் சிவனையும் சபித்தார்கள். பிராமணர்களுக்கே எல்லா அதிகாரமும் இருக்குமா று சாதிய கட்டமைப்பை பிராமண முனிவர்கள் வகுத்தார்கள் அவர்கள் குடித்தார்கள். மாட்டிறைச்சி தின்றார்கள். ஏனைய மூன்று சாதிகளிலும் பெண்எடுத்தார்கள். தங்கள் பிராமண பொண்களை மற்;ற மூன்று சாதிகள் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி தடுத்தார்கள் பிராமண பெண்ணுக்கும் பிராமணர் அல்லாத ஆணுக்கும்
பிறக்கும் பிள்ளையை சண்டாளன் என்றார்கள் எனறேல்லாம் தர்மபாலர் பிராமணர்களை சாடிவிட்டு புத்த சங்கம் அனைத்துலக சகோதரத்துவத்தை வலியுறுத்துவதாக பெருமைபடுகிறார்.

டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந வாசநந வறiஉந-டிழசn உயளவநள. வுhந டீசயாஅiளெ றநசந pசழரன ழக வாநசை அயவெசயள. வுhந டீசயாஅin சiளாளை றநசந பசநயவ in வாநசை ளநடகiளாநௌள. வுhநல hயன ளிசைவைரயட pழறநச நஎநn வழ கசiபாவநn வாந பழனள் வாநல உரசளநன வாந டயவநச றாநn வாநல றநசந யபெசல. ஐவ ளயனை வாயவ வாந சiளாளை னுரசடிhயளய யனெ டீhசபைர உரசளநன டிழவா ஏiளாரெ யனெ ளூiஎய. வுhந சiளாi புயரவயஅய உரசளநன ஐனெசய. வுhந டீசயாஅin சiளாளை ழசபயnளைநன வாந உயளவந ளலளவநஅ எநளவiபெ யடட pழறநச in வாந டீசயாஅiளெ. வுhநல ழசபயnளைநன யniஅயட ளயஉசகைiஉநள. வுhநல னசயமெ றiநெஇ யவந டிநநக யனெ வழழம றழஅநn கசழஅ வாந ழவாநச வாசநந உயளவநள. ஐவ றயள வாநசை pசiஎடைநபந. வுhநல அயனந டயறள pசழாiடிவைiபெ வாந வாசநந உயளவநள கசழஅ வயமiபெ டீசயாஅin றழஅநn. வுhநல டயனை னழறn வாந சரடந வாயவ வாந ளைளரந ழக ய டீசயாஅin றழஅநn டில ய ழெn-டீசயாஅin hரளடியனெ ளை வழ டிந சநஉழபnளைநன யள ய ஊhயனெயடய......

வுhந டீhமைமார ளுயபொய டிநஉயஅந ய ரniஎநசளயட டிசழவாநசாழழனஇ யனெ வாந சநகரபந ழக வாந hiபா யனெ வாந டழற. யுடட யுளயை hநயசன வாந டயற ழக உழஅpயளளழைnஇ வாந சநடபைழைn ழக றளைனழஅ றயள pசநயஉhநன வழ யடடஇ யனெ வாந னூயஅஅய ழக முயசரயெ யனெ Pசயபயெ றயள யஉஉநிவநன டில அநn யனெ புழனள. துநாழஎயாஇ யுடடயாஇ ஏiளாரெஇ ளூiஎயஇ முயடiஇ னுரசபயஇ துநளரள றநசந யெஅநள ழெவ லநவ hநயசன in வாந உiஎடைளைநன றழசடன. வுhந நுரசழிநயn சயஉநள றiவா வாந நஒஉநிவழைn ழக சுழஅயளெ யனெ புசநநமள றநசந வாநn in ய ளவயவந ழக டீயசடியசiஉ pயபயnளைஅ. வுhந யnஉநளவழசள ழக வாந டீசவைiளா றநசந வாநn டiஎiபெ யெமநன in வாந கழசநளவ. வுhந ழேசனiஉ சயஉநள றநசந ளவடைட ளயஎயபநள........

ஏகோவா அல்லா விட்ன சிவன் காளி துர்கா இயேசு போன்ற பெயர்களேல்லாம் நாகரிக உலகத்தில் கேள்விபடாத காலத்தில் புத்தமத ஒன்றே எங்கும் பரவியிருந்தது இனறைய பிரிட்டிசார் மூதாந்தையர்கள் காடுகளில் நிர்வாணமாக அலைந்து கொண்டுயிருந்தார்கள். நார்திக் இனத்தவரோ காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள். கொலைகார இசுலாமிய கூட்டங்களோ அப்போது பிறக்கவே இல்லை. காந்தகாரில் ஆப்கானித்தானில் காபுல் பள்ளதாக்கில் துருக்கியில் எங்கும் புத்தமமே பரவியிருந்தது. இரண்டு நூற்றாண்டுகள் கழித்து புத்த தர்மத்தின் அழிவுக்கு இந்தியாவில் சில புதிய நிலைமைகள் உருவாயின. குமரில பட்டர் தனது புதிய கோட்பாட்டை மக்களிடடம் பரப்பினார் இது பிக்குகளின் செல்வாக்கை குலைத்தது அவரது வாரிசாக மலையாள பார்ப்பணன் சங்கரன் வந்தான். தனது சொந்த ஊரை விட்டு துறத்தியடிக்கப்பட்டு சங்கரன் சபல்புர்க்கு ஓடி வந்து புத்தமடாலயத்தில் சேர்ந்து புத்தமதம் பற்றி பயின்றார். அதன் விளைவாக புதிய மொந்தையில் பழைய கள்ளைதருவதை போல ஆதிசங்கரர் தன் கருத்துக்களை பரப்பியதாக அனகாரிக தர்மபாலர் வரலாறு எழுதுகிறார்.

வுhந னநளவசரஉவiஎந hழசனநள ழக ஐளடயஅ hயன வாநn ழெவ டிநநn டிழசn. டீரனனாளைஅ றயள வாநn கடழரசiளாiபெ in புயனெயாயசஇ யுகபாயnளைவயnஇ முயடிரட ஏயடடநல யனெ வுரசமளைவயn. வுறழ உநவெரசநைள டயவநச ய நெற கயஉவழச உயஅந iவெழ நஒளைவநnஉந in ஐனெயை றாiஉh hநடிநன வழ னநளவசழல வாந iனெiஎனைரயடவைல ழக வாந டீரனனாய னூயசஅய. முரஅயசடைய டிநபயn வழ pசநயஉh hளை நெற னழஉவசiநெ றாiஉh றநயமநநென வாந pழறநச ழக வாந டீhமைமரள. ர்ளை ளரஉஉநளளழச றயள வாந ஆயடயடியச டீசயாஅin ளுயமெயசய. னுசiஎநn ழரவ கசழஅ hளை யெவiஎந டயனெஇ லழரபெ ளுயமெயசய உயஅந வழ துரடிடிரடிழசந யனெ றயள யனஅவைவநன வழ ய அழயௌவநசல றாநசந hந டநயசவெ டீரனனாளைஅ. ர்யஎiபெ ளவரனநைன வாந ருpயniளாயனளஇ hந பயஎந ய நெற iவெநசிசநவயவழைn வழ வாந டயவவநச. ர்ந pழரசநன நெற றiநெ iவெழ ழடன டிழவவடநள....................

ஐளடயஅஇ டீசயாஅயniஉயட சவைரயடளைஅ யனெ ஊhசளைவயைnவைல யசந வாந வாசநந கழசஉநள வாயவ யசந யவ றழசம வழனயல in ஐனெயை. டீசயாஅயளெ வாசழரபா ளாநநச ளநடகiளாநௌள சநதநஉவநன வாந ழெடிடந யுசலயn னூயசஅய கசழஅ வைள யெவiஎந ளழடை யனெ ஐனெயை கநடட. டீசயாஅயnளைஅ ளை ழடெல கழச வாந hiபா உயளவந. ஐளடயஅ யனெ ஊhசளைவயைnவைல யசந டிழவா னநளவசரஉவiஎந.......

இந்த புத்தமத வெறியர் கூறியது ஏதோ ஒருவரின் பிதற்றல் அல்ல. அனைத்து சிங்கள தலைவர்களும் இந்த மத வெறி பிடித்தவர்களே. அதற்கு ஆதாரங்களை அடு;க்கடுக்காக தரவுள்ளோம்.

தி இந்து பத்திரிக்கையின்; நிர்வாக ஆசிரியர் திருமதி. மாலினி பார்த்தசாரதி அவர்களுக்கு இந்த வரலாற்றை உரிமையோடு நினைவு ஊட்டி இந்த சிங்கள பௌத்த வெறியர்களுக்கா நீங்கள் பக்கம் பக்கமாக வரிந்து கட்டிக் கொண்டு வாதாடுகிறீர்கள் என்று திராவிடப் பேரவை கேட்கிறது .

இசுலாம்ää பிராமணியம்ää கிறித்துவம் ஆகிய மூன்று நீரோட்டங்கள் தான் இன்று இந்தியாவில் உள்ளன. பிராமணர்கள் தங்கள் சுயநலத்தால் உன்னதமான ஆரிய தர்மத்தை கைவிட்டுவிட்டார்கள். பிராமணியம் உயர்சாதியினருக்கு மட்டுமே சொந்தமானது. இசுலாமும்ää கிறித்துவமும் அழிவும் பாதையில் மக்;களை இட்டுசெல்பவை. எனனறேல்லாம் தர்மபாலர் பிரச்சாரம் செய்கிறார். இந்த போதனைகளை உண்மை என ஏற்றுக்கொண்டுள்ள சிங்கள மதவாதியர் பௌத்தமதத்தை அரசமதமாக அரசமைப்பு சட்டத்தை திருத்தி ஒருமத நாடாக இலங்கையை மாற்றிய பிறகும் அந்த அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரசியல் தீர்வு காண வேண்டும் என இந்து ஏடு முதல் இந்திய ஆட்சியர்வரை கூறுவது எப்படி நியாயமாகும்

மகாவம்சம் இலங்கைக்கு புத்தர்வந்த போது அங்கிருந்த யட்சர்களை நிக்கோபர் தீவுக்கு துரத்திவிட்டு தேவர்களை குடியமர்த்தியதாக கூறுகிறதே? அந்த தேவர்கள் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்?

அதற்கு பிறகு சிங்கத்திற்கு பிறந்த அண்ணனும் தங்கையும் கூடி பெற்றேடுத்த முதல் குழந்தையான விசயன் இலங்கைக்கு வந்து பாண்டிய மன்னன் மகளை மனந்து சிங்கள கலப்பினத்தை உருவாக்கினான் என அதே மகாவம்சம் கூறுவது உண்மையானால் தேவர்களை அதாவது ஆரியரை அதாவது பிராமணரை அடித்து விரட்டிவிடடோ கொன்று குவித்துவிட்டோ சிங்கள கலப்பின அரசு இலங்கையில் உருவாகியிருக்க வேண்டும். இந்த காட்டுமிராண்டி கலப்பினத்தையா ஆரியர் என்று எண்ணிக்கொண்டு ஆதரிக்கிறீர்கள்?

தீர்வுக்கு என்ன வழி?

இலங்கையின் இனச்சிக்கலுக்கு தீர்வுகாண இதுவரை முன்மொழியப்பட்ட சமாதான யோசனைகள் ஏன் தோல்வி அடைந்தன என்பதை எண்ணிப்பார்க்காமல் மீண்டும் மீண்டும் சமாதானம்ää சமாதானம் என்று பேசுவதும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேரினவாத இலங்கை அரசு படைபலத்தை திரட்டி ஒவ்வொரு முறையும் தமிழர்களதமிழர்கள் மீது கடும் தாக்குதல்கள் தொடுப்பதும் காலங்காலமாக நடந்து வருகிறது. எனவே தமிழர்கள் குறைந்தபட்சம் எதை எதிர்பார்த்தார்கள் என்பது இந்திய ஆட்சியாளர்களுக்குத் தெரிய வேண்டும்.

1. கூட்டாட்சி முறை அரசை உருவாக்க தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும்.

2. மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வை அளிப்பதற்கு தடையாக உள்ள அரசியல் சட்டத்தின் 76வது பிரிவு நீக்கப்பட வேண்டும்.

3. இலங்கையின் ஆட்சி மொழிகளாக நாடு முழுவதும் ஒரே மாதிரியாக சிங்களமும்ää தமிழும் இருக்கும்வண்ணம் அரசமைப்புச் சட்டத்தின் 18வது பிரிவு திருத்தப்பட வேண்டும்

4. அரசமைப்புச் சட்டத்தில் இலங்கை புத்தமத நாடாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது திருத்தப்பட வேண்டும். அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது பிரிவு திருத்தப்பட்டு இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அறிவிக்கப்பட வேண்டும்.
--------------------------------------------------------------------------------

இந்த நான்கு யோசனைகளும் எந்த காலத்திலும் சிங்களவரால் ஏற்கப்படாது என்பதுதான் கடந்தகால சரித்திரம்.23முறை உடன்பாடுகள் ச்சுக்கள் நடந்து தோல்வியில் முடிந்திருக்கின்றன.

--------------------------------------------------------------------------------

13-7-1985ல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் ஏனைய தீவிரவாத இயக்கங்களும் முன்வைத்த கோரிக்கைகள் 4.
1. தமிழர்களை இலங்கையில் தனித் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும்.
2. தமிழர் தாயகம் அடையாளம் காணப்பட்டுää அதனுடைய எல்லைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

3. தமிழ் தேசத்தினுடைய சுய நிர்ணய உரிமை தமிழர்களின் பிறப்புரிமை என்பது ஏற்கப்பட வேண்டும்.

4. முழு குடியுரிமைக்கும் ஏனைய அடிப்படை ஜனநாயக உரிமைகளும் இலங்கையை தங்கள் தாயகமாக ஏற்றுக் கொண்ட அனைத்து தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

என்றுதான் தமிழர் கட்சிகள் கோரின.

"றுந hயஎந னநஅயனெநன யனெ ளவசரபபடநன கழச யn iனெநிநனெநவெ வுயஅடை ளுவயவந யள வாந யளெறநச வழ வாளை pசழடிடநஅ யசளைiபெ ழரவ ழக வாந னநnயைட ழக வாநளந டியளiஉ சiபாவள ழக ழரச pநழிடந... ர்ழறநஎநசஇ in எநைற ழக ழரச நயசநௌவ னநளசைந கழச pநயஉநஇ றந யசந pசநியசநன வழ பiஎந உழளெனைநசயவழைn வழ யலெ ளநவ ழக pசழிழளயடள in மநநிiபெ றiவா வாந யடிழஎந pசinஉipடநள வாயவ வாந ளுசi டுயமெய புழஎநசnஅநவெ அiபாவ pடயஉந டிநகழசந ரள.

இவ்வாறு தமிழர்கள் கோரினாலும் இன்றுவரை இலங்கை அரசுகள் கொள்கையளவில் இதனை ஏற்கவில்லை.

குடியரசு தலைவர் சந்திரிகா குமாரதுங்காவின் தூதர்களுக்கும் விடுதலைப்புலிகளின் ஆதராவாளர்களுக்கும் பேச்சுக்கள் நடந்த சமயத்தில் இலங்கையில் இருந்து வெளிவருகிற ஷஷதி ஐலேண்டு பத்திரிகை 6-3-95

ஐn நயசடல ஆயசஉh வாந டுவுவுநு சநவைநசயவநன வைள சநயனiநௌள வழ யடியனெழn வாந னநஅயனெ கழச ய ளநியசயவந ளுவயவந யனெ டளைவநன குழரச Pசinஉipடநள றாiஉh அரளவ டிந யனனசநளள டில யலெ உழகெடiஉவ சநளழடரவழைn pசழிழளயட கழசஅரடயவநன டில வாந புழஎநசnஅநவெ ழக ளுசi டுயமெய. வுhநல யசந

1. வுhந pசழடிடநஅ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன ய ய யெவழையெட ளைளரந.

2. வுhந வுயஅடை pநழிடந அரளவ டிந யஉஉநிவநன யள ய யெவழையெட நவெவைல.

3. வுhந வசயனவைழையெட hழஅநடயனௌ ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன.

4. வுhந சiபாவள யனெ ளழஎநசநபைவெல ழக வாந வுயஅடைள ளாழரடன டிந யஉஉநிவநன.

இந்த குறைந்தபட்ச கோரிக்கைகளும் இலங்கை அரசால் ஏற்கப்படவில்லை.

ஒவ்வொரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினரும் சிங்கள வெறியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இலங்கையின் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட பேச்சுகளே சான்றாக திகழ்கின்றன. விடுதலைப்புலிகள் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாகாத காலகட்டத்திலேயே முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொடுமையான தாக்குதல்களை பாராளுமன்றத்திலேயே சிங்கள வெறியர்கள் நடத்தி இருக்கிறார்கள். இது பதிவு செய்யப்பட்ட பாராளுமன்ற ஆவணங்களிலேயே இருக்கிறது. வேறெந்த நாட்டிலாவது இதுபோல் எவரும் பேச முடியாது. பாராளுமன்ற மரபுகள் அதற்கு அனுமதிக்காதுää ஆனால் சிங்கள வெறியர்களின் பாராளுமன்றம் அனைத்து மரபுகளையும் மண்ணோடு மண்ணாக்கிய மதவெறியர்களின் கூடாரம். கீழே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சும்ää ஒரு குடியரசுத் தலைவரின் பேச்சும் சிங்களரின் வெறித்தனத்திற்கு எடுத்துக்காட்டுகளாக தரப்படுகின்றன.

னு.ஆ. ஊhயனெசயியடயஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச முரனெயளயடந - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981

"ழேறஇ ளுசை... றாயவ ளாழரடன றந னழ வழ வாளை ளழ உயடடநன டநயனநச ழக வாந வுயஅடைள? ஐக ஐ றநசந பiஎநn வாந pழறநசஇ ஐ றழரடன வநை hiஅ வழ வாந நெயசநளவ உழnஉசநவந pழளவ in வாளை டிரடைனiபெ யனெ hழசளநறாip hiஅ வடைட ஐ சயளைந hiஅ வழ hளை றவைள. வுhநசநயகவநச டநவ யலெடிழனல னழ யலெவாiபெ hந டமைநள - வாசழற hiஅ iவெழ வாந டீநசைந (டயமந) ழச iவெழ வாந ளநயஇ டிநஉயரளந hந றடைட டிந ளழ அரவடையவநன வாயவ ஐ னழ ழெவ வாiமெ வாநசந றடைட டிந டகைந in hiஅ. வுhயவ ளை றயச."

பு.ஏ.Pரnஉhinடையஅநஇ ளுinhயடய டீரனனாளைவ ஆ.P. கழச சுயவnயிரசய - in ளுசi டுயமெய'ள Pயசடயைஅநவெஇ துரடல 1981.

"ளுinஉந லநளவநசனயல அழசniபெஇ றந hயஎந hநயசன in வாளை hழழெரசயடிடந ர்ழரளந யடிழரவ வாந எயசழைரள வலிநள ழக pரniளாஅநவெ வாயவ ளாழரடன டிந அநவநன ழரவ வழ வாநஅ (வுயஅடை Pயசடயைஅநவெயசல டநயனநசள).

வுhந ஆP கழச Pயயெனரசய (னுச நேஎடைடந குநசயெனெழ) ளயனை வாநசந றயள ய pரniளாஅநவெ னரசiபெ வாந வiஅந ழக வாந ளுinhயடநளந மiபௌஇ யெஅநடலஇ வறழ யசநஉயரெவ pழளவள யசந நசநஉவநனஇ வாந வறழ pழளவள யசந வாநn னசயறn வழறயசன நயஉh ழவாநச றiவா ய சழிநஇ வாநn வநை நயஉh ழக வாந கநநவ ழக வாந ழககநனெநச வழ நயஉh pழளவ யனெ வாநn உரவ வாந சழிந றாiஉh சநளரடவ in வாந வநயசiபெ யியசவ வாந டிழனல. வுhநளந pநழிடந யடளழ ளாழரடன டிந pரniளாநன in வாந ளயஅந றயல..

...ளழஅந அநஅடிநசள ளரபபநளவநன வாயவ வாநல ளாழரடன டிந pரவ வழ னநயவா ழn வாந ளவயமந் ளழஅந ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநசை pயளளிழசவள ளாழரடன டிந உழகெளைஉயவநன் ளவடைட ழவாநச அநஅடிநசள ளயனை வாயவ வாநல ளாழரடன டிந ளவழழன யவ வாந புயடடந குயஉந புசநநn யனெ ளாழவ. வுhந pநழிடந ழக வாளை உழரவெசல றயவெ யனெ வாந பழஎநசnஅநவெ ளை pசநியசநன வழ iகெடiஉவ வாநளந pரniளாஅநவெள ழn வாநளந pநழிடந."

து.சு.துயலயறயசனநநெஇ ளுinhயடய டீரனனாளைவ Pசநளனைநவெ ழக ளுசi டுயமெய - னுயடைல வுநடநபசயிhஇ 11வா துரடல 1983

"ஐ யஅ ழெவ றழசசநைன யடிழரவ வாந ழிinழைn ழக வாந வுயஅடை pநழிடந... ழெற றந உயnழெவ வாiமெ ழக வாநஅஇ ழெவ யடிழரவ வாநசை டiஎநள ழச வாநசை ழிinழைn... வாந அழசந லழர pரவ pசநளளரசந in வாந ழெசவாஇ வாந hயிpநைச வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hநசந... சுநயடடல கை ஐ ளவயசஎந வாந வுயஅடைள ழரவஇ வாந ளுinhயடய pநழிடந றடைட டிந hயிpல."

ஒரு நாட்டினுடைய குடியரசுத் தலைவரே நாட்டினுடைய குடிமக்களை பட்டினிபோட்டுக் கொல்வேன் என்று வெறித்தனமாக பேசியுள்ளார். இந்த வெறி அனைத்து சிங்களவர்களின் மனதிலும் குடியிருக்கிறது. இந்த வெறுப்பைப் போக்க உலகில் இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே சிங்களவர்களும் தமிழர்களும் சேர்ந்து ஒரே நாட்டில் வாழ வேண்டும் என்று சொல்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

1948ல் சோல்பரி அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பிரிட்டானியர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்தபோது இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பெரும்பான்மை உறுப்பினர்கள் இந்திய வமிசாவழி தமிழர்களின் வாக்குரிமையை பறித்து சட்டமியற்றினார்கள். தலைமுறை தலைமுறையாக அங்கே வாழ்ந்து வாக்களித்து வந்த மக்கள் வாக்குரிமை இழந்தார்கள். இதன்விளைவாக பாராளுமன்றத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் பாதியாக குறைந்தது. தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன.

1956ல் சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்டது. தமிழர்கள் தங்களுடைய மொழி பண்பாட்டு உரிமைகள் காப்பாற்றப்பட ஆட்சி மொழிச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு முறையிட்டார்கள். அந்த பிரிவி கவுன்சில் ஆட்சி மொழிச்சட்டத்தை மறு பரிசீலனை செய்யுமாறு இலங்கையின் உச்ச நீதிமன்றத்திற்கு ஆணையிட்டது. இலங்கை அரசோ பிரிவி கவுன்சிலுக்கு மேல்முறையீடு செய்கிற வழிகளை அடைத்தது. இவ்வாறு தொடங்கி தமிழர் மொழியுரிமையும் வாழ்வுரிமையும் போராட்டங்கள் பல்வேறு மிதவாத தலைவர்களாலே முன்னெடுத்துச் செல்லப்பட்டு அந்த தலைவர்களுக்கும் இலங்கை அரசுக்கும் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மீண்டும் மீண்டும் நிறைவேற்றப்படாததால் அனைத்து தமிழர் கட்சிகளும் திரு. எஸ்.வி.ஜே.செல்வநாயகம் தலைமையில் கூடி தங்கள் முதல் தேசிய மாநாட்டில் 1976ல் பின்வஐம் பிரகடணத்தை வெளியிட்டனர்.

"வுhந ஊழnஎநnழைn சநளழடஎநள வாயவ வாந சநளவழசயவழைn யனெ சநஉழளெவைரவழைn ழக வாந குசநநஇ ளுழஎநசநபைnஇ ளுநஉரடயசஇ ளுழஉயைடளைவ ளவயவந ழக வுயஅடை நுநடயஅ டியளநன ழn வாந சiபாவ ழக ளநட-னநவநசஅiயெவழைn inhநசநவெ வழ நஎநசல யெவழைn hயள டிநஉழஅந iநெஎவையடிடந in ழசனநச வழ ளயகநபரயசன வாந எநசல நஒளைவநnஉந ழக வாந வுயஅடை யெவழைn in வாளை உழரவெசல"

ஆக தமிழீழ கோரிக்கை விடுதலைப்புலிகளால் முன்மொழியப்பட்ட கோரிக்கை அல்ல. மிதவாத தலைவர்களால் ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாநில சுயாட்சியாவது பெற்றுவிட முடியாதா என்று முயன்று தோற்ற தலைவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை என்பது வரலாறு. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவில் செல்லப்பிள்ளையான வரதராஜப்பெருமாள் இலங்கையை விட்டு ஓடிவருவதற்கு முன்னால் தனித்தமிழீழத்தை பிரகடணம் செய்துவிட்டு ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலம் தேடிக் கொண்டார். அவரை இந்திய அரசும் பல ஆண்டுகள் பாதுகாத்து பராமரித்தது என்பதும் வரலாறு.

இந்தியாவும் பாக்கிஸ்தானும் ஒரே நாடாக இருப்பது எப்படி நடைமுறைச் சாத்தியமில்லையோää இஸ்ரேலும் பாலஸ்தீனமும் ஒரே நாடாக இருப்பது எப்படி இயலாதோ அவ்வாறே தமிழீழமும்ää சிங்கள நாடும் ஓரமைப்புக்குள் ஒருநாடாக ஒற்றுமையுடன் வாழ முடியாது என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு. இன்னும் சொல்லப்போனால் வெள்ளையர் வருவதற்கு முன்னாள் போர்ச்சுகீசியரிடம் 1621ல் யாழ்பாண தமிழ் அரசு வீழ்ச்சி அடைவதற்கு முன்னால் இலங்கையில் தமிழர்களுக்கு என்று யாழ்பாண அரசும்ää சிங்களவருக்கென்று கண்டி அரசும் தனித்தனி அரசுகள்தான் இருந்து வந்துள்ளன. இராவணன் இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தன் என்பதும் வரலாறு. அந்த ராவணின் ஆட்சிக்குட்பட்ட இலங்கையில் தமிழ்க்கல்வியினுடைய நிலையினைப்பற்றி புலவர் குழந்தை இராவண காவியத்தில் எழுதுகிறார்.

ஏடுகை யில்லா ரில்லை  இயலிசை கல்லா ரில்லைப்

பாடுகை யில்லா ரில்லை பள்ளியோ செல்லா ரில்லை

ஆடுகை யில்லா ரில்லை அதன்பயன் கொள்ளா ரில்லை

நாடுகை யில்லா ரில்லை நற்றமிழ் வளர்ச்சி யம்மா.

தமிழென திருகட் பார்வை தமிழென துருவப் போர்வை

தமிழென துயிரின் காப்புத் தமிழென துளவே மாப்புத்

தமிழென துடைமைப் பெட்டி தமிழென துயர்வுப் பட்டி

தமிழென துரிமை யென்னத்  தனித்தனி வளர்ப்பர் மாதோ.

நாடெலாம் புலவர் கூட்டம் நகரெலாம் பள்ளி யீட்டம்

வீடெலாம் தமிழ்த்தாய்க் கோட்டம்  விழவெலாந் தமிழ்க்கொண் டாட்டம்

பாடெலாம் தமிழின் தேட்டம்  பணையெலாந் தமிழ்க்கூத் தாட்டம்

மாடெலாந் தமிழ்ச்செல் லாட்டம் வண்டமி ழகத்து மாதோ.

இப்படித் தமிழ் வளர்த்த ஈழம் உலகில் மீண்டும் தமிழ் வளர்க்க தனி நாடாக மலரும்நாள் என்னாளோ? என்ற ஏக்கம் உலகத்தமிழர்களிடத்திலே உள்ளது. தமிழீழத்தை தவிர தீர்வுக்கு வேறு வழி இருப்பதாக எமக்குத் தெரியவில்லை ஒருக்கால் இந்திய ஆட்சியாளர்களுக்கு யாராளும் தீர்க்க முடியாத இந்த இனச்சிக்கலை தீர்க்க வழி தெரியுமானால் அல்லது வழி இருக்குமானால் அதை வெளிப்படையாக இந்த நாட்டவருக்கு இந்திய அரசு சொல்ல வேண்டும். இனச்சிக்கலுக்கு சிங்களவர்கள் வைத்திருக்கிற ஒரே தீர்வு அந்நாளில் இட்லர் யூதர் அனைவரையும் கொன்று குவித்தானே அதுபோல் தமிழர் அனைவரையும் கொன்று குவிப்பது ஒன்றே சிங்களவர் கொள்கை என்பது வரலாற்றுப் படிப்பினை.

ஈழத்தமிழரும் கோழைத்தமிழரும்!

நீரோடை நிலங்கிழிக்க நெடு மரங்கள் நிறைந்து பெருங்காடாக்கப் பெருவிலங்கு வேரோடி வாழ்ந்திருந்த பாழ்நிலமாம் ஈழத்தைப் பண்படுத்திப் பழனங்களாகவும்ää பசுமை குலுங்கிடும் சோலைகளாகவும் மாற்றிக் காட்டிய தமிழன் வாழ்நிலம் இன்றி வதைபடுகிறான். வந்தேறு குடிகளான சிங்களவரிடம் உதைபடுகிறான். பாடு பெருக்கிப் பசுமைதுலக்கிய தமிழன் வீடுவாசல் மாடு மனை துறந்து வேட்டையாடும் விலங்கு மனத்தினரால் விரட்டப்படுகிறான். வேற்றினத்து வீணர்களால் மிரட்டப்படுகிறான். பொற்புடைத் தமிழினப் ப10ங்கொடியர் கற்பினுக்கே இழுக்கு அழுக்கு மனத்தினரால் நேரிடுகிறது. போரிடும் பரம்பரை புலிகள் பூனைகளாய் பொறுமையோடு விழிநீரைப் பெருக்கும் நிலை நீடிக்கிறது. எட்டி உதைக்கப்படும் தமிழனுக்காக இங்கிருந்து குரல் கொடுத்தால் தலையில் குட்டி உட்கார் என்று கூறுவோரே கோலோச்சுகின்றார். வேல்பாய்ச்சிய இதயவடுவதனில் நெருப்பள்ளிப்போடும் நீசரே இங்கு நாடாள்கின்றார். கோடிக்குலம் படைத்துப் பல்சமயக்கூறு அமைத்து ஓடிப்பொருள் திரட்டி உண்டுடுத்தி வாழ்வதுவோ மெத்தச் சிறப்பென்று மேலான வாழ்வென்று இங்குள்ள தமிழர் சோம்பிக்கிடக்கின்றார். முத்தைத் துகள் மூடுவதாலே முத்தொளி சாம்புவதில்லை. ஆனால்ää கத்துக்கடல் தாண்டி நாடுபலவென்ற தமிழர் உள்ளமோ கேடொன்று தமிழினத்துக்கெனில் கூம்புகின்றதே ஒழிய குமுறவில்லை. கொடுமையை வீழ்த்துகின்ற கொடுவாளாய் கூனற் பகை மாய்க்க அடுபோர்க் களமேகும் வேகம் பிறப்பதில்லை. வீரமும் இருப்பதில்லைää நெஞ்சில் ஈரமும் இருப்பதில்லை....

(கலைஞர் மு.கருணாநிதி அவர்களை ஆசிரியராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வமான வாரஏடான நம்நாடு
ஏட்டில் 05-02-1978ல் புதுவை நந்திவர்மன் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகள்.)

 4-06-2000



திங்கள், 31 மே, 2010

பூம்புகார் கடலடி ஆய்வு முடிவுகளைப் போற்றுவோம் - குமரிக் கண்ட ஆய்வுக்கு குரல் கொடுப்போம்

- நந்திவர்மன்  


திராவிட மொழிகள் பற்றிப் பிற நாட்டார் ஆய்வுகள் செய்யத் தொடங்கி நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்தவவைகளைச் சற்றுத் திரும்பிப் பார்ப்போமாக!

A Comparative Grammar of the Korean Language and the Dravidian Language of India என்ற நூல் 1905 ல் சியோல் நகரில் தி மெதடிசுடு பப்ளிசிங் அவுசு வெளியிட்ட நூலாகும். பி.ஒமர் அல்பர்ட்டு இந்நூலெழுதி நூற்றாண்டு ஆகிறது. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றி மட்டுமே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். கொரிய மொழிகளுக்கும் திராவிட மொழிகளுக்கும் ஒப்பிலக்கணம் உண்டு என உணர நூறாண்டு ஆகி விட்டது.

The Genealogy of the Japanese Language: Tamil and Japanese என்ற தலைப்பில் “சப்பானிய மொழியின் மரபியல்: தமிழும் சப்பானியமும்” என்ற நூலெழுதிய சுசுமோ ஓனோ பற்றி நமது ஊடகங்களில் செய்தி வந்ததுண்டா? “சப்பானிய மொழி திராவிட மொழியே” என்று டாக்டர் பொற்கோ, நந்தன் (1998 சூலை) இதழில்தான் எழுத முடிந்தது. இதுபற்றி ஆங்கில ஏடுகள் ஏன் வெளியிடுவதில்லை? வெளியிடாத அந்த ஏடுகள் ஏன் தமிழின் பெருமைமிகு வரலாற்றை மறைக்கப் பார்க்கின்றன என நாம் எண்ணிப் பார்த்தோமா? அவற்றின் உள்நோக்கம் உணர்ந்த பிறகாவது நம்மிடமுள்ள தொலைக்காட்சி ஊடகங்களை உண்மையை வெளிக்கொணர நாம் பயன்படுத்தினோமா?

திராவிட மொழிகள் பேசுவோர் 20 கோடியாகும். ஊரல் இன மொழிகளான அங்கேரியன் 1.40, ஃபின்னிசு 0.50, எசுதோனியன் 0.10, மார்த்வின் 0.30 என சுமார் 2 கோடி முப்பது லட்சம் பேராவர். அல்டாய்க் மொழிகளைப் பேசுவோர் பட்டியலில் துருக்கி 4.50, பிற துருக்கிய இன மொழிகள் 5.50, மங்கோலியன் 0.50, எனச் சுமார் 10 கோடியே ஐம்பது இலட்சம் பேருள்ளனர். சப்பானிய மொழி பேசுவோர் 12 கோடியும் கொரிய மொழி பேசுவோர் 6 கோடியும் உள்ளனர். பெருநாட்டில் கொசுவா மொழி பேசுவோர் 1.20 கோடியாவர். ஆக மிக நெருங்கிய ஒற்றுமை கொண்ட ஒட்டுநிலை மொழிகளை (Agglutinative Languages) பேசுவோர் 50 கோடிக்கும் மேலாவர். இம்மொழிகள் பற்றி வெளிவந்துள்ள நூற்களைச் சற்று எண்ணிப் பாருங்கள்.

1. A Comparitive Grammar of the Dravidian: Languages: A Robert Caldwell (1856)

2. Attinites Des Langues Dravidianness et des langues oural - Altaiques: C. Schoebel: 1873

3. Dravidisch and Uralisch in Zeitschrift fur Indologies and Iranistik: Oho Schrader (1925)

4. Dravidian studies IV : The body in Dravidian and Uralian: T. Burrow (1943-46)

5. Dravidian and Uralian: A Peep into the Prehistory of Language Families: Two lectures on the Historicity of Language Families: M Andronay (1968) அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு.

6. Dravidian and Uralian : The Lexical Evidence (1968)

7. The Dravido - Altaic Relationship: Some Views and Future Prospects (1987) (செக்கோசுலாவியா)

8. Dravidian Linguistics an Introduction: V. Kamil Zvelebil (1990) புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

9. 1000 Duraljan Etyma : An Extended study in the lexical similarities in the Major Agglunitative Languages (2000) பின்லாந்து

10. Migration and Diffusion (வியன்னாவிலிருந்து வெளியான தொகுதி 1-3, சூலை செப்டம்பர் 2000) இதழில் பக்கங்கள் 62க்கம் 80க்கும் மிடையே பின்லாந்தின் உக்ரோ மொழி பேசுவோருக்கும் பாசுக்கு மொழி பேசுவோருக்கும் இடையே உள்ள ஒற்றுமைக் கூறுகள், கி.மு. 7000 அளவில் திராவிட மொழிகளுக்கும் சப்பானிய மொழிகளுக்கும் இடையே நிலவிய ஒற்றுமைப் பண்புகள் பற்றி பேராசிரியர் Bemon Zoigniew, Szalek எழுதியுள்ளனர்.

தமிழ்ச் சொற்கள்’ என்ற நூலில் இவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழில் எழுதப்பட்ட இந்த நூலை எத்தனைத் தமிழாசிரியர்கள் வாங்கிப் படித்திருப்பர்? எத்தனை பேர் படித்ததை வகுப்பறைகளில் மாணாக்கர்களுக்குப் போதித்திருப்பர்? மாலை வேளைகளில் ஒலிப்பெருக்கி பிடிக்க வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் அரைத்த மாவை மீண்டும் அரைப்பது போல இளவயதில் மனப்பாடம் செய்த சில பாடல்களையே திரும்பத் திரும்பக் கூறுவதால்விளைந்த பயனென்னா? அதற்குப் பதில் தமிழில் உள்ள இதுபோன்ற நூலில் சொல்லப்பட்ட சில செய்திகளையாவது வெளியில் பரப்புரை செய்ய முன்வருவாராயின் உலக முதன்மொழி தமிழென்ற உண்மை ஒவ்வொரு தமிழனுள்ளத்திலும் பதியாதா? தமிழின் பெருமையை நிலைநாட்ட உலகெங்கிலும் எடுத்து வைக்கப்படும் வாதங்களை விடாமல் கூர்ந்து கவனித்துக் குறித்து வைத்துக் கொண்டு உரிய முறையில் பதிவு செய்பவர்கள் சிலர் உளர். அவர்களுள் பி. இராமநாதன் க.மு.ச.மு.தனியிடம் பெறுகிறார். ‘சிந்துவெளித் தொல் தமிழ் நாகரிகம்’ பற்றி தமிழிலும் A New Account of the History and Culture of the Tamils” என ஆங்கிலத்திலும் அவரெழுதிய நூல்களை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ளது. அவரை எத்தனை மேடைகளில் தமிழறிஞர்கள் ஏற்றி இருப்பார்கள்? நம்மால் முடியாத பணியை நம்மில் ஒருவன் ஆற்றுங்கால் உவந்து அவன் அறிவுழைப்பைப் போற்றும் அறவுணர்ச்சியும் தமிழார்வலர்களிடையே அற்றுப் போய்விட்டதா?

நம்மவர் சோம்பலை நன்குணர்ந்து பெருந்தமிழ் அறிஞர் இரா. மதிவாணன் நூல்களைப் படிக்காத சோம்பேறிகளும் உரித்த வாழைப்பழத்தை உண்பதுபோல எளிதாக எடுத்தாளட்டும் என தமிழைப் என தமிழைப் பற்றியும் தமிழ்ப்பண்பாடு பற்றியும் தகைசால் அறிஞர்கள் கூறியதை திரட்டி ஆங்கிலத்தில் Quotations on Tamil and Tamil Culture” என நூலாக்கியுள்ளார். இருமொழி அறிந்தோர் அதைத் தமிழாக்கலாமே! அன்றி புதுப்புது மேற்கொள்களைத் திரட்டி புது நூலியற்றலாமே! அதுவும் இயலாததாயின் மேற்கோளாகவாவது பயன்படுத்தி தமிழின் பெருமையை நிலை நாட்டலாமே! ‘கல்தோன்றி மண்«£ன்றாக் காலத்தே’ என்ற ஒரு வரியை மட்டும் ஆயிரமாண்டுகள் சொல்லிச் சொல்லித் தமிழின் பெருமையை விளக்கிக் கொண்டிருக்கப்போகிறோமா? புதிய அறிவியல் செய்திகள், ஆய்வுகள், அறிஞர் முடிவுகள் துணையோடு நம் தொன்மையை நிறுவத் துடிப்புடன் பாடாற்றாமல், சோம்பிக் கிடக்கும் தமிழறிஞர் தமிழின் அக புறப்பகைவர்களின் தமிழழிப்பு பணி தொடர்வதை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?

செய்தித்தாள்களைப் படிக்கும் தமிழறிஞர்கள் தாங்கள் எழுதிய கட்டுரை வெளிவருமாயின் அதை மடுமே படிக்கும் இயல்பினராக உள்ளனர். தமிழுக்கு ஏற்றம் தரும் செய்திகளைப் படிப்பதுமில்லை. பரப்புவது மில்லை என்பது என் குற்றச்சாட்டு. எடுத்துக்காட்டாக ஒரு செய்தி.

பூம்புகார் அருகே 9500 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய நகரம்: விஞ்ஞானி தகவல்: - தினமணி டிசம்பர் 4 2002.

‘பெங்களூர் மிதிக் சொசைடியில் நடைபெற்ற 9500 ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய நகரம் என்ற கண்காட்சியில் கடலில் மூழ்கிய நகரங்கள் பற்றிய வீடியோ படம் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ படத்தை எடுத்த கிரகாம் குக் கூறியதாவது:- கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின. பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார். வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”

இதை படித்தவர்கள் என்ன செய்தீர்கள்? கிரகாம் குக் பற்றி நமது மேடைகளில் பள்ளி வகுப்புகளில் நீங்கள் பேசினீர்களா? அறிவியல் அடிப்படையில் பூம்புகார் 9500 ஆண்டு பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்ட பின்னராவது ஈராயிரம் ஆண்டுக ள் ஈராயிரம் ஆண்டுகள் என அடிக்கடி நமது பழமை பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு பத்தாயிரமாண்டு நாகரிகம் படைத்தவர்கள் என்று பேசத் துவங்கினீர்களா? உங்கள் மூளை ஈராயிரமாண்டுகள் வரை மட்டுமே சிந்திக்கமா? உறைந்து போய் விட்டதா? புதிய உண்மை மெய்பிக்கப்பட்டவுடன் நமது பாட நூற்களில் எற்றப்பட்டிருக்க வேண்டாமா? காம்பே நகரம் கண்டுபிடிக்கவுடன் இந்தியாடுடே அட்டைப்படக்கட்டுரை வெளியிட்டது? பூம்புகார் பற்றிய உண்மைகள் வெளிவந்ததும் ஊடகங்கள் அதைப் பெரிதாக வெளியிடவில்லை. தமிழினம் பற்றிய அக்கறையுள்ள தொலைக்காட்சிகளுமில்லை.

தமிழறிஞர்கள் நடத்தும் சிற்றிதழ்களாவது பதிவு செய்ய வேண்டாமா? பூம்புகார் பற்றி மேலும் ஆய்வு தேவை என்று தமிழறிஞர்கள் குரல் எழுப்பியதுண்டா? சென்னையில் உள்ள தேசிய கடற்பொறியியல் ஆய்வு நிறுவனம் தானே இந்த ஆய்வில் ஈடுபட்டது? தமிழகத்தில் உள்ள அரசு அமைப்பு கடலில் மூழ்கிய தமிழக நகரங்களை, தமிழனின் பிறந்தகமாம் குமரிக் கண்டத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஏன் எந்த அரசியல் கட்சியும் குரல் கொடுக்கவில்லை? நமது 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடுவணரசை வற்புறுத்திப் பாராளுமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? அறிவியல் அடிப்படையில் நம் நாகரிகச் சிறப்பு அவனியில் மெய்ப்பிக்கப்பட மாற்றார் முன் மறுக்க வொண்ணாச்சான்றுகளை நிறுத்த ஏன் நாம் துடிப்பதில்லை?

கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும்.

‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது. இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள்.

இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது. தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார். (தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர்)

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன”

என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். இதுபற்றி ஆய்வுகளும் தேவை.

தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை. இது அறிஞர் முடிவு. நம் கைவசமுள்ள மறுக்க முடியாத ஆதாரம். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி மூத்தகுடி எனப்புறப்பொருள் வெண்பாப் பாடலை இலக்கியச் சான்றாகச் சொல்லும்போது உலகம் ஏற்க மறுக்கும். அறிவியல் சான்றாக நமது பாறைகளை அவர்கள் முன் நிறுத்துங்கள். வாயடைத்துப் போகும் ஆரியம்! நம் வரலாறு உலகில் நிலை நாட்டப்படும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தில் உதித்த தமிழர்களிடம் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியம் இல்லை. ஆயின் என்சைக்ளோ பீடியா அப் ராக்சு அண்டு மினரல்சு என ஆங்கில மொழயில் கலைக்களஞ்சியம் உள்ளது. தமிழன் கல்லைப் பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்க வேண்டாமா? அன்றி ஆங்கிலக் கலைக்களஞ்சியத்திலாவது பழமைமிகு தமிழகப் பாறைகள் பற்றிய உண்மைச் செய்திகளைச் சேர்க்க உழைக்க வேண்டாமா? தமிழ்க்குடியின் தொன்மை உலக அளவில் நிலைநாட்ட ஒரு சிறு துரும்பும் யார் ஆண்டாலும் தமிழகத்தில் அசைக்கப்படுவதில்லையே ஏன்?

பசுமைக்குடில் தாக்கம், பனிப்பாறை உருகுதல் இவற்றால் கடல் மட்டம் உயர்வது மட்டுமல்ல கடல் அலைகள் கொந்தளிப்பு எழுந்து பேரலையாகி நகரங்களை விழுங்கும் செயலை Tsunami என ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். சப்பானிய தீவுக்கூட்டங்களிலும் ஆசுதிரேலியத் தீவுக்கூட்டங்களிலும் ‘சுநாமி கண்காணிப்பு மையங்கள்’ ஏற்படுத்தப்பட்டு கடல் கண்காணிப்படுகிறது. இதுபற்றி நேஷனல் ஜியாக்கிரபிக் சேனல் பல செய்திகளை வெளிக்கொணர்கிறது. தமிழகக் கடற்கரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதில்லை. பிறநாடுகளில் நடக்கும் அறிவியல் செய்திகளை தமிழ் மக்களுக்குச் சொல்ல, தமிழில் சொல்ல ஒரு தொலைக்காட்சி அலைவரிசை வேண்டாமா? வரலாற்றுணர்வில்லாத தமிழர்களுக்கு உணர்வு ஊட்ட வரலாற்று அலைவரிசை தொடங்க உலகத் தமிழர் ஒருவர்கூட முன் வராதது ஏன்? தமிழக, புதுவை அரசுகளாவது முனைய வேண்டாமா?

இலங்கையும் தமிழகமும் அடிக்கடி இணைந்து பிரிந்ததால் பாக் நீரிணைப்பகுதியில் கடலடியில் மணல்திட்டுகள் காணப்படுகின்றன. அதை அனுமன் கட்டிய பாலமென நம்மை முட்டாளாக்க நடந்த முயற்சியை முறியடிக்க அறிவியல் உண்மைகளை முன்நிறுத்தும் ஆற்றலை தமிழ்ச்சமுதாயம் பெற வேண்டாமா?

புதுவை கடலால் சூழப்பட்டிருந்தது மெய்ப்பிக்கப்பட்ட நிலையில் புதுவையை ஓட்டியுள்ள கடலடியில் National Institute of Oceano-Graphy மூலமும் பூம்புகாரை கண்டெடுத்த கிரகாம் குக் மூலமும் ஆய்வு நடத்த வேண்டியது புதுவை அரசின் கடமையாகும். தமிழகமாளும் அரசுகளையும் அவற்றின் குரலை மதிக்காத, நடுவணரசையும், குமரிக்கண்ட ஆய்வு நிகழ்த்துமாறு செய்விக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.



நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை, புதுச்சேரி, இந்தியா

Copyright © 2008 thamizhkkaaval.net.