செவ்வாய், 18 ஜனவரி, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென் சூடான் தமது விடுதலை நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளது!

ஆக்கம்: ஊடக அறிக்கை

தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் (SPLM) அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும், பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் இது பற்றி வெளியிட்ட செய்தியில் "நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அங்கு அழைக்கப்பட்டிருப்பது, இந்த அரசாங்கத்துக்கான அங்கீகாரம் மட்டுமன்றி ஈழ விடுதலைப் போராட்டத்துக்கான அங்கீகாரமும் ஆகும். தென்சூடானியரின் விடுதலையைக் கொண்டாடுமாறு ஈழத்தமிழ் மக்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டிக்கொள்கிறது. விடுதலை பெற்ற தென்சூடானியரின் மகிழ்ச்சியை ஈழத்தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வதுடன், அந்த மகிழ்வில் இணைந்தும் கொள்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்;குமான உறவு புதியதல்ல. மே 2009ல் பிலடெல்பியா நகரத்தில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்காவிற்கான தமது செயலாளர் நாயகம் திரு டோமாக் வால் றுஆச் அவர்களை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. தென்சூடானின் விடுதலைப் போராட்டத்துக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் பற்றி அவர் பேசினார். மேலும் விடுதலைப்போராட்டங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றியும் ஈழத்தமிழ் மக்களுடனான தமது திடவொற்றுமையுணர்வினைக் குறிப்பிட்டும் அவர் உரையாற்றினார்.

வடக்கு சூடானிலிருந்து தெற்கு சூடானிய மக்கள் விடுதலை பெறுவதற்கான போராட்டத்தை சூடான் மக்கள் விடுதலை இயக்கம் முன்னின்று நடத்தி வந்துள்ளது. மக்களின் பேராதரவைப் பெற்ற அமைப்பான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் சுதந்திர தென்சூடான் அரசாங்கத்தினை அமைக்கவுள்ளது. அவர்கட்கென ஒரு தனிநாடு உதயமாவதன் மூலம் தென்சூடானிய மக்கள் நீண்டகாலமாக அனுபவித்த பேரளவிலான துன்பங்கள் தொலைந்து போகும். அவர்களது போராட்டத்தின் போது கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்கள் மடிந்துள்ளார்கள். பொதுமக்கள் மருத்துவ உதவியின்றியும், பட்டினியாலும், கூட்டாகப் படுகொலை செய்யப்பட்டும்; இறந்து போனார்கள். இவர்கட்கெனப் புதிய நாடொன்று பிறப்பதைக் காணும் இவ்வேளையில் ஈழத்தமிழர்கள் தாமும் ஆண்டுக்கணக்காக விடுதலையின் பெயரால் அனுபவித்து வரும் துயரங்களை நினைவுகூர்வதுடன், தென்சூடான் போலவே தமிழீழமும் விரைவில் விடுதலை பெறுமென நம்பிக்கை கொள்கிறார்கள்.

வாக்கெடுப்பு ஆரம்பித்த தினத்தன்று அமெரிக்கா அரசதலைவர் ஒபாமா அவர்கள் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையில் "இலட்சக்கணக்கான சூடானிய மக்கள் தமது விதியைத் தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். அரசதலைவர் ஒபாமா அவர்களின் இச்செய்தியை வரவேற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஈழத்தமிழர்களும் தமது விதியைத் தாமே தீர்மானித்துக் கொள்ளும் வாய்ப்பினைச் சர்வதேச சமூகம் அதேவகையில் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறது.

1977ல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கமைய இறைமையுள்ள தமிழீழத் தனியரசினை அமைப்போம் என்று வாக்குக்கேட்ட கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மையாக வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்கள் மிகத்தெளிவாகத் தமது விருப்பை ஏற்கெனவே உரத்துத் தெரிவித்துவிட்டார்கள். ஆயுதப்போராட்டம் சிறீலங்காவில் ஆரம்பமாவதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே ஈழத்தமிழர்கள்; தம் நிலைப்பாட்டினை இவ்வாறு அமைதியாகவே வெளிப்படுத்தினார்கள். புலம்பெயர்ந்த மக்கள் அண்மையில் பல்வேறு நாடுகளிலும் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் தமது தாயகத்தில் இறைமையுள்ள தனிநாடு ஒன்றை அமைப்பதற்கான தமது அரசியல் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். 2009இல் இறுதிப்போரின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலை தமிழருக்கெனத் தனியான நாடு உருவாகுவது மட்டுமே அவர்கள் உயிருடன் வாழ்வதை உறுதிசெய்யும் ஒரே தீர்வாகுமென்பதைத் தெளிவாக்கி தமிழரின் தனிநாட்டுக் கோரிக்கையினை மேலும் நியாயப் படுத்துகிறது.

அடக்குமுறை அரசுகளான சூடானின் ஆட்சியாளருக்கும் இன்றைய சிறீலங்காவின் ஆட்சியாளருக்கும், சீனாவே செல்வாக்கு மிக்க சர்வதேசப் பாதுகாவலராகச் செயற்பட்டு வருகிறது. சூடானின் அரசதலைவர் பஷீர் இனப்படுகொலைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை சிறீலங்கா அரசதலைவர் ராஜபக்ச இனப்படுகொலைக் குற்றவாளியாக சில காலத்தில் அறிவிக்கப்படவுள்ளார்.

திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் அவர்கள் தமது செய்தியில் "விடுதலை பெற்ற தென்சூடானிய மக்களுக்கும் அவர்களது சூடான் மக்கள் விடுதலை இயக்கத்துக்கும்;, நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் தமிழீழ மக்களும் தமது இதயம்நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள். விடுதலை பெறவென நீங்கள் ஆற்றிய தியாகங்களையெண்ணி நாம் சிரம்தாழ்த்துவதுடன் உங்களது துணிவையும் திடசங்கற்பத்தையும் நாம் பாராட்டுகிறோம். உங்களுக்கு மிகவும் வெற்றிகரமானதும் வளமிக்கதுமான எதிர்காலம் அமைய வேண்டுமென வாழ்த்துகிறோம்"என்று மேலும் தெரிவித்துள்ளார்.


பிரதமர் அலுவலகம்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


மூலம்: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - தை 18, 2011

பிரசுரித்த நாள்: Jan 18, 2011 10:42:35 GMT

சனி, 1 ஜனவரி, 2011

மலேசியாவும் பாக்கிஸ்தானும் பெட்ரோல் விலையை குறைக்கும்போது மக்கள் தலையில் சுமை ஏற்றும் இந்திய அரசு

காரைக்காலில் நந்திவர்மன் பேச்சு


காரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டக்குழு திங்கள் 28 அன்று உண்ணாவிரதம் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தியது. கோட்டுச்சேரி போராட்ட குழு அமைப்பாளர் சுரே~;ராஜன் தலைமை தாங்கினார். போராட்டக்குழு பொதுச்செயலாளர் அன்சாரிபாபு முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் சுப்பிரமணியன் தே.மு.தி.க மாவட்ட செயலாளர் அசனா, மலையபெருமாள் பிள்ளை, சின்னையா பிள்ளை, ஓ.எஸ். உதுமான் அய்யம்பெருமாள், ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர் இதில் கௌரவத் தலைவர் நந்திவர்மன் பேசியதாவது:

காரைக்கால் தனி ய+னியன் பிரதேசம் கேட்டுப் போராடுபவர்களுக்கு தேசியப்பார்வை உண்டு. குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் அல்ல நாங்கள் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கோபுரம் மீதேறி வைகுந்தம் போக வழிகாட்டுவான் என அறிஞர் அண்ணா நாட்டு வாட்டம் போக்கிட முடியாத காங்கிரஸ்காரர்களை அந்தக் காலத்தில் சாடுவார்.

இன்று பெட்ரோல் விலையை காங்கிரஸ் அரசு மத்தியில் எப்படி நிர்ணயம் செய்கிறது? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 58.90 ஆக வைத்து கொண்டால் பெட்ரோலின் அடிப்படை விலை 28.93 ஆகும். பிறகு எப்படி விலை ஏறுகிறது! இந்த ஆண்டு பிப்ரவரியில் இயற்கை எரிவாயு டீசல் பெட்ரோல் விலைகளை அரசு கட்டுபாட்டில் இருந்து விடுவித்தது.

 சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோலிய நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்து கொள்ள மன்மோகன் சிங் அரசு தாராளமயத்தை கடைப்பிடித்தது. பிப்ரவரி 27ல் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இறக்குமதி வரியும் எக்சைசு வரியும் விதித்தார். இன்று ஒரு லிட்டர் பெட்ரோலில் எக்சைசுவரி 14.35 ரூபாயாகும். கல்வி வரி 0.43 பைசா ஆகும். டீலர் கமி~ன் 1.05 ஆகும். குரூட் ஆயில் கஸ்டம்சு வரி ரூ. 1.1 ஆகும். பெட்ரோல் மீது கஸ்டம்சு வரி 1.54. ஏயுவு மதிப்பு கூட்டுவரி 5.5 போக்குவரத்து 6.00 ஆகிறது. ஆக இப்படித்தான் ரூ.58.90 ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிமேதாவிகள் இந்தியாவில் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.

2008ல் இந்தியாவில் 50.64 விற்றபோது ஆஸ்திரேலியாவில் ரூ. 31.99 கனடாவில் 31.42 பாகிஸ்தானில் 36.09, அமெரிக்காவில் 17.57, மலேசியாவில் 30.12 சௌதி அரேபியாவில் 5.71, ஐக்கிய அரபு எமிரேட்சில் 15.95, நியுசிலாந்தில் 32.28 கத்தாரில் 9.82, பஃரெயினில் 9.57 இந்திய ரூபாய் மதிப்பில் 1 லிட்டர் பெட்ரோல் கிடைத்தது. 2010ல் மலேசியாவில் ரூ. 30.12 ரூபாயில் இருந்து ரூ. 20.99 ஆக குறைக்கப்பட்டது. பாகிஸ்தானில் ரூ. 36.09 லிருந்து ரூ. 31.43 ஆக குறைக்கப்பட்டது.

இந்த நாடுகளின் நிதி அமைச்சர்கள் முட்டாள்களா? 1967ல் நாடெங்கும் காங்கிரஸ் எதிர்ப்பு அலைவீசி தமிழகத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது மேற்கு வங்கத்தில் அஜய் முகர்ஜி தலைமையிலான பங்களா காங்கிரஸ் வென்றது. அதில் பங்களா காங்கிரசின் பிரதிநிதியாக பங்கேற்றவர் பிரணாப் முகர்ஜி ஆவர் இப்போது காங்கிரசின் நிதி அமைச்சர்.காங்கிரசில் அறிவாளிகளே இல்லையா? அடிக்கடி காங்கிரசை விட்டு வெளியே சென்று குப்பை கொட்ட முடியாமல் மீண்டும் காங்;கிரசுக்கு திரும்பும் இந்த அறிவாளி மலேசியா போல பாகிஸ்தான் போல பெட்ரோல் விலையை ஏன் குறைக்கவில்லை?

இதில்தான் 2ஜி ஊழலைவிட பெரிய கேஜி ஊழல் வருகிறது. உலகப் புகழ்பெற்ற கதாநாயகி நீரா ராடியாவும் இந்துஸ்தான் டைம்சு ஆசிரியர் வீர் சங்வீயும் உரையாடியதை ழிநn ஆங்கில வார இதழ் வெளியிட்டது. அதை தினமணி 21 ஞாயிறு நவம்பர் 2010ல் முழுப்பக்கத்தில் பாதிபக்கம் வெளியிட்டது.

வீர்சங்கி சொல்கிறார் “நாட்டுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும் விதமாக அரிய வளங்களை ஊழல் செய்து வரைமுறை இல்லாமல் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால் இந்த நாடு உங்களை மன்னிக்காது என்று பத்திரிக்கையில் எழுதப்போகிறேன்.

நீரா ராடியா சொல்கிறார் : ஆனால் விர் அவருக்கு எரிவாவு எடுக்கும் அனுமதியை

அரசு வழநு;கி உள்ளது அதில் அவர் ஆயிரம் கோடி டாலர் செலவு செய்திருக்கிறார்.

வீர்சங்கி : சரி

நீரா ராடியா :அனில் அம்பானி ஒரு பைசா செலவு செய்யாமல் அதன் பலனை அனுபவிக்கப் பார்க்கிறார்

இது நீரா ராடியா டேப்பில் உள்ளது. இயற்கை எரிவாவு எடுக்க முகே~; அம்பானி 1000 கோடி டாலரை எங்கே கொடுக்கிறார்? அதன் தலமையகம் எங்கே உள்ளது? நம் மாநிலத்தின் ஒரு பகுதியான ஏனாமை மறந்து விட்டர்களா? அங்குதான்.

2009 ஏப்ரல் 2009-ல் முகே~; அம்பானி நிறுவனம் புதுச்சேரியை ஒட்டி (ஏனாம்) ஆழ்கடலில் இயற்கை எரிவாயுவு உற்பத்தியை தொடங்கியது என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். 2ஜி யை மிஞ்சும் கேஜி. கேஜி என்றால் கிரு~;ணா-கோதாவரி கடலில் கலக்கும் படுகை. இங்கு 44175 கோடியில் அதாவது கூ8875 டாலரில் முகே~; அம்பானியின் திட்டம் செயலாகிறது. இதற்காகத்தான் முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவிட்டதாக நீரா ராடியா டேப்பில் பேசியுள்ளார்.

ஆயிரம் கோடி பலரை யாருக்கு ரிலையென்சு செலவிட்டது? ஏன் செலவிட்டது? கேஜி டி6 பிளாக்கில் எரிவாயு எடுக்க அனுமதி பெறவா? எரிவாயுவுக்கு அரசுக்கு பிச்சைக்காரனுக்கு போடுவது போல் ராயல்டி தர அனுமதி பெறவா? நீரா ராடியாவுக்கே வெளிச்சம். ஆனால் 2009 ஏப்ரல் 2-ல் தொடங்கி 2010 மார்ச்சுக்குள் தீரூபாய் 1 மற்றும் 3 கிணறுகளில் இருந்து கிடைத்த வருவாய் மட்டும் 4000 கோடி டாலர் என ரிலையன்சின் வருடாந்திர கணக்கு கூறுகிறது.

இதற்காகத்தான் முகே~; அம்பானியின் சகோதரர் அணில் அம்பானியின் ரிலையன்ஸ் நேட்சுரல் ரிசோர்சஸ் லிமிட்டெட் உடன் மோதியது. உச்ச நீதிமன்றத்தில் சகோதரர்களின் நிறுவனங்கள் மோதிக் கொண்டன. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிரு~;ணன், சதாசிவம், பி. சுதர்சன் ரெட்டி அடங்கிய மூன்று நீதிபதிகள்.

இயற்கை வளங்கள் ஒரு நாட்டு அரசுக்கே சொந்தம். அதன் மீது தனியாரோ நிறுவனங்களோ உரிமை கொண்டாட முடியாது. எனத் தீர்ப்பளித்தனர். முகே~; அம்பானி 1000 கோடி டாலர் செலவு செய்து இயற்கை வாயு எடுக்கத் தொடங்கி விட்டார்.

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர்கள் குழு கேஜி படுகையில் சாமல்கோட்டில் உருவாகும் அணில் அம்பானியின் தொழிலகத்துக்கும் இயற்கை வாயு அளிப்பதை பரிசீலித்துக் கொண்டுள்ளனர்.

2ஜி வி~யம் போலத்தான் கே.ஜி விவகாரமும். எப்படி விலை நிர்ணயம் செய்தீர்கள்? உலகின் பிறநாடுகள் போல் அல்லாமல் குறைந்த ராயல்டிக்கு கம்பெனிகளுக்கு தாராளமயம் காட்டிவிட்டு பெட்ரோல் ஃ டீசல் ஃ எரிவாயு விலையை பாகிஸ்தானை விட கூடுதலாக ஃ மலேசியாவை விடக் கூடுதலாக விற்று மக்களை சுரண்டுவதுதான் மக்களாட்சியா? இந்தியாவில் நடப்பது மக்களாட்சி அல்ல பேயாட்சி என்பார் சண்டே இண்டியா ஆசிரியர் அரிந்தம் சொத்திரி. அமெரிக்காவில் நடப்பது மக்களாட்சி அல்ல கம்பெனிகள் ஆட்சி என அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் வாக்கு மூலமே வழங்கி விட்டார்.

1,76,000 கோடி 2ஜி ஊழலை மிஞ்சும் 3,00,000 கோடி ஊழல் பற்றி ஓரிசாவே அலறுகிறது. சட்டமன்றமே முடங்குகிறது. ஒரிசாவில் செயல்படும் 341 சுரங்கங்களில் 215 சுரங்கங்கள் அனுமதி இல்லாமல் எப்படி செயல்படுகின்றன என உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது பிஜீஜனதா தள ஆட்சியில் நடக்கிறது என்று மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது. இந்தியா முழுவதும் 15000 சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கங்கள் உள்ளன. 8700 சுரங்கங்களே சட்டபூர்வமாகச் செயல்படுகின்றன என மத்திய அரசு நிறுவனங்களே கண்டுபிடித்துள்ளன.

நாட்டில் 1.64 லட்சம் ஹெக்டேர் காடுகளை சுரங்கத்துக்காக மாற்றியுள்ளார்கள். இரும்புக்கனி சுரங்கங்களில் மட்டுமே 2005-2006 கணக்குப்படி ஓராண்டில் 77 மில்லியன் டன் தண்ணீர் செலவாகியுள்ளது. 3 மில்லியன் மக்களின் அன்றாடக் குடிநீருக்குத் தேவைப்படும் தண்ணீர் கபளீகரம் செய்யப்படுகிறது.

2006-ல் எடுக்கபட்ட கணக்குப்படி 1.84 மில்லியன் கழிவுகள் அந்த ஆண்டில் மட்டுமே சுரங்கங்கள் சுற்றுச்சூழலை பாதிக்க வெளியே கொட்டியுள்ளன. இதில் நிலக்கரி சுரங்கங்களே மிகுதியான கழிவுகளை வெளியேற்றுகின்றன. ஒரு டன் நிலக்கரி வெட்டி எடுக்க மூன்று அல்லது நான்கு டன் கழிவு வெளியாகும் இந்தோனிசியாவில் நிலக்கரி சுரங்கங்கள் எடுத்து வெட்டிக் கொண்டு வந்து காரைக்கால் மார்க் துறை முகத்தில் இறக்க திட்ட தீட்டியவர்களும் சிந்திக்க வேண்டும்.

கள்ளத்தனமாக செயல்படும் 15000 சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களால் தனியாருக்கு கொள்ளை லாபம். அரசுக்கும் வருவாய் இழப்பு, அந்த வருவாய் இழப்பை கணக்கிட 2ஜி இழப்பை கணக்கிட்ட கணக்கு தணிகை அதிகாரியை பணிக்கமர்த்தினால் எத்தனை இலட்சம் கோடி இழப்பு என்று சொல்வார். அதைக் கொள்ளையிட்ட அரசு கட்சி வித்தியாசமில்லாதது என்றும்; மத்தியில் ஆண்;ட ஃ ஆளும் அரசுகள்! பல மாநில அரசுகள்! பல கட்சிகளின் கீழுள்ள அரசுகள்!

இதில் கே.ஜி ஊழலில் புதுவை அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய மல்லாடியே வருவாய் துறை அமைச்சர்! கில்லாடிகளின் பலே கில்லாடி இவரே! காடு கெடுத்து நாடாக்கினார்கள் பழந்தமிழ் மன்னர்கள். காடழித்து கனிமம் தோண்டி இயற்கையை சூறையாடினார்களை இந்நாளைய ஆட்சியாளர்கள். சுரங்கத்துக்காக காடுகளை மாற்றித் தந்த மாநிலங்களில் ஆந்திரபிரதேசம் 13532 எக்டேர் ஃ அருணாச்சலம் பிரதேசம் 142 எக்டேர் அசாம் 87 எக்டேர் ஃ பீகார் 414 எக் இ சட்டிங்கார் 14,42 எக், கோவா 1282 எக், குசராத் 9664 எக், இமாச்சலப்பிரதேசம் 1228 எக், ஜார்கண்ட் 9059 எக், கர்நாடகா 7558 எக், கேரளா 29எக், மத்திய பிரதேசம் 10058 எக், மகாராட்டிரா 4057 எக், ஒரிசா 15397 எக், ராஜஸ்தான் 4996 எக், மேற்கு வங்கம் 277 எக், அந்தமான் 20 எக், நிகோபார் தீவுகள் 95,000 எக், இப்படி காடுகளை அழித்து சுரங்கங்களுக்கு வழிவிட்டவர்கள், சுரங்கங்கள் மூலம் அரசு கஜானாவை எப்படி நிரப்புகிறார்கள் தெரியுமா?

2000-01-ல் இந்தியா ஏற்றுமதி செய்த இரும்புக்கனியின் மதிப்பு ரூ.358 கோடி ஆகும். 2008-09-ல் இரும்புக்கனி ஏற்றுமதி 21,725 கோடியாக உயர்ந்தது. ஒரு டன் இரும்புக்கனி 6000-7000 ரூபாய் மதிப்பில் ஏற்றுமதியானது. கர்நாடக லோக் அயுக்தா நீதியரசர் சந்தோ~; ஹெக்டே அரசுக்கு ராயல்டியாக ரூ.16 முதல் ரூ. 27 வரையே கிடைப்பதை கண்டுபிடித்தார். 2004-ல் லோகிரேடு இரும்புக்கனிக்கு ரூ.4 ராயல்டி உயர்ரக இரும்புக்கனிக்கு 27ரூபாய் ஒரு டன்னுக்கு ராயல்டி என நிர்ணயித்த அரசு எது? இரும்புக் கனிக்கு ஏற்றுமதி வரி இ;லை என விலக்களித்த அரசு யாருடைய அரசு?

கர்நாடக அரசு கணக்குப்படி 1 டன் இரும்பு வெட்டி எடுக்க 150 ரூபாய் போக்குவரத்து 250 ரூபாய் அரசு ராயல்டி 27 ரூபாய்! ஏற்றுமதியானதோ டன் 7000 ரூபாய்! அரசுக்கு வெறும் 27 ரூபாய் வருவாய்.

மன்மோகன்சிங் குழுமத்தின் உறுப்பினர் மாண்டேக் சிங் அலுவாலியா தலைமையிலான திட்டக்குழு 2005-ல் ஏற்றுமதி விலையில் 10 சதவீதம் அரசுக்கு வரியாக கிடைக்க வேண்டும் என்றது. இதை ஏற்க மூன்றாண்டு யோசித்த மத்திய சுரங்கத்துறை அமைச்சரகம் 2009 ஆகஸ்டில் பரிந்துரையை ஏற்றது. ஏற்றுமதி விலையை நிர்ணயம் செய்ய இந்தியன் பீரோ ஆஃப் மைன்சு நிறுவனத்தை நியமித்தார்கள். அந்த அதிகாரிகளோ 1760 முதல் 1949 வரை தர வாரியாக நிர்ணயம் செய்தனர். 6000-7000 ஏற்றுமதி விலை! அதிகாரிகள் கண்ணை குருடாக்கிக் கொண்டு சொன்னார்கள் ரூ.1760 முதல் 1949 வரை என! இதில் 10 சதவிகித வரி விதிப்பாம் பிரணாப் முகர்ஜி எவ்வளவு பெரிய அறிவாளி பாருங்கள்! ஏற்றுமதி ஆகும் போது பில் ஆப் லேடிங் தருவார்கள். அதை வங்கிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் அளித்து லெட்டர் ஆஃப் கிரடிட்படி தமக்குரிய தொகையை பெறுவார்கள். அப்படி பெறும்போது 10 சதவீதம் வரி பிடித்தம் என்று நிர்ணயித்தால் அரசுக்கு பல்லாயிரம் கோடி வருவாய் வந்துவிடுமாம்! அது கூடாதாம் தனியாருக்கு கொள்ளை வாமம் சேருவதே எங்கள் கொள்கை என்று செயல்படும் மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி கம்பெனி பெட்ரோல் விலையை உயர்த்தும்! வெங்காய விலையை உயர்த்தும். கனிம ஏற்றுமதிக்கு வரி விதிக்காது எண்ணெய் இறக்குமதிக்கு வரி விதிக்கும்! 2 ஜி போல எல்லா அமைச்சகங்களும் எவ்வளவு ஆயிரம் கோடி வருவாயை அரசுக்கு கிடைக்க ஒட்டாமல் செய்திருக்கும்.

ஏனாம் - எண்ணெய் வளத்தைச் சுரண்டும் கம்பெனிகளின் கூடாரம். இதனால்தான் மாநில அந்தஸ்து கோரி எத்தனையோ முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய புதுவை மாநிலத்துக்கு இந்த முறை மாநில அந்தஸ்து கிடைத்த விடக்கூடாது என அரசமைப்புச் சட்ட விதி 74 பிரிவை மீறி காபினட்முடிவை எதி;ர்த்து இந்தியப் பிரதமர்க்கு கடிதம் எழுதினார். இந்திய அரசியல் சட்ட 164(3) விதிப்படி இந்திய அரசியல் சட்டத்தை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்த மல்லாடி கிரு~;ணாராவ் பிரான்சு சென்று 21-27 செப்டம்பர் 2009க்குள் பிரான்சு அதிபர் அலுவலகத்தில் புதுவைக்கு மாநில அந்தஸ்துகொடுக்கக்கூடாது என்று இருநாட்டுப் பிரச்சினையாக மாற்றினார். புதுவை மாநில அந்தஸ்து பெற வேண்டும். அப்போதுதான் கோவா முன்உதாரணத்தை பின்பற்றி காரைக்கால் தனியூனியன் பிரதேசமாக முடியும். மாகே அதே அரபிக்கடலில் உள்ள லட்சத்தீவுகளுடன் சேரலாம். ஏனாமில் இருந்து ஸ்ரீ கிரு~;ணா கமி~னில் மனு அளித்தவர்கள் ஏனாமை தெலுங்கானாவில் சேர்க்கக் கோரியுள்ளனர். ஏனாமை தன் கைக்குள் வைத்துக் கொண்டு ரிலைன்சின் முகவராக செயல்பட்டு சம்பாதிப்பது தடைப்படும் என்பதாலேயே கடந்த வருடம் குளிர் காலக் கூட்டத்தொடரில் நிறைவேறும் என்று சொன்ன மாநில அந்தஸ்து மசோதாவை மல்லாடி முடக்கியுள்ளர். இவ்வாறு நந்திவர்மன் காரைக்காலில் பேசினார்.