வெள்ளி, 15 ஜூன், 2012

பல நாடுகளில் டெசோ வேண்டும் :சண்டே இந்தியனில் நந்திவர்மன்

நந்திவர்மன்,பொதுச்செயலாளர்,திராவிடப் பேரவை



பல ஆண்டுகளாக இணையத்தில் அகில இந்திய டெசோ என்ற பிளாக்கை நடத்திவருகிறேன். இந்திய மண்ணில் புலம்பெயர்ந்த திபெத் அரசு தர்மசாலாவில் இயங்குகிறது. திபெத்திய பாராளுமன்றம் உள்ளது. 2009&ல் இத்தாலியப் பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 267 திபெத்திய ஆதரவுக் குழுக்கள் பல நாடுகளில் செயல்படுகின்றன. 267வது குழுவாக இலங்கையிலேயே ஆதரவுக்குழு இயங்குகிறது.

அதுபோல கலைஞர் மீண்டும் புத்துயிர் ஊட்டிய டெசோ தமிழ்நாட்டில் மட்டுல்ல, உலகின் பல நாடுகளிலும் உருவாக வேண்டும். 1998&ல் டெல்லியில் தோழர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனைத்துலக ஈழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தினார். 2006&ல் ஆல் இந்தியா டெசோ என்று உருவாக்கி ஈழப்பிரச்னை பற்றி கண்திறப்புக் கருத்தரங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டோம். நடக்கவில்லை. கடந்த முறை டெசோ தொடக்க மாநாட்டில் மதுரையில் பேசிய கலைஞர் உலக நாடுகளுக்கெல்லாம் ஈழப்பிரச்னையை கொண்டு செல்வோம் என்றார். மீண்டும் புதுப்பிக்கப்படும் டெசோ குறைந்த பட்சம் டெல்லியிலாவது மாநாட்டைக் கூட்டவேண்டும். தமிழ்நாட்டுக் குள்ளேயே மாநாடுகள், போராட்டங்கள் என்று சுருக்கிக்கொள்வது ஈழப் பிரச்னையை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புரியவைக்காது.

சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய ஒன்றியங்கள் உடைந்தபோது 1994 அளவில் 19 புதிய நாடுகள் பிறந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா &இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. இந்த நிகழ்வுகளின்போது ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள நாடுகள் ஹெல்சிங்கி மாநாடு கூட்டி புதியதாக உருவாகும் நாடுகளை அங்கீகரிக்க வழிமுறைகள்/வரையறைகள் வகுத்து அதன்படி மேற்சொன்ன நாடுகளை அங்கீகரித்தனர்.

அதே அளவுகோள்படி, 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளுக்கு சுதந்தரம் கிடைக்கச் செய்த ஐக்கிய நாடுகள் முன், உதாரணப்படி தமிழ் ஈழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க உலகின் பல நாடுகளில் டெசோ அமைப்பு உருவாக வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்றப் பிறகு ஜனநாயக வழிமுறைகளை ஏற்று மக்கள் தேர்வு செய்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசையும் இந்தியாவில் இயங்கும் புலம்பெயர்ந்த திபெத்திய அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க டெசோ வாதாட வேண்டும்.

பொது வாக்கெடுப்பு மூலம் நியூஸிலாந்தின் கடைசிக் காலனியான 644 பேர் வாழக்கூடிய அடோல் ஆல் அட்டாஃபுக்கு சுயாட்சி வழங்கிய ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கும், திபெத்துக்கும் வழங்குமாறு டெசோ வலியுறுத்தவேண்டும். கலைஞரின் முயற்சி தமிழ்நாட்டுடன் நிற்கக்கூடாது. அவர் மேற்கொண்டிருக்கும் இந்த டெசோ இப்போதைக்கு காலத்தின் தேவை என்றுதான் நான் கருதுகிறேன். 2009 காலகட்டத்தை மறந்துவிட்டு அடுத்து நடக்கவேண்டியதை யோசியுங்கள்!

சனி, 28 ஏப்ரல், 2012

அகுச்தீன் பெனுவா விடும் அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்


கல்லூரியில் படித்த காலத்துக்கு பிறகு 43 வருடங்கள் புதுவை வந்தால் என்னைச் சந்தித்ததே இல்லை அகுச்தீன் பெனுவா, மார்ச் 2012 இல் சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசினோம்.

1967 ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார். 1968 இல் தாகூர் கலைக் கல்லூரி மாணவர் மன்றம் தொடங்க தமிழக கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வந்தார். அப்போது மாணவர் தலைவர் அகுச்தீன் பெனுவா.

2012 மார்ச்சில் என்னிடம் கதை விட்டார் தனித் தமிழ்நாடு கிடைத்தால் நீ தான் பிரான்சுக்கு தமிழ் நாட்டின் தூதுவர் என அண்ணா இவரிடம் சொன்னதாக முதல் புளுகு மூட்டையை என்னிடம் அவிழ்த்தார்.

 தி.மு.க கேட்டது திராவிட நாடு .அதுவும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது 1962 ல் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் வீடு இருந்தால் தான் ஓடு மற்ற முடியும், நாடு இருந்தால் தான் தனி நாடு கேட்க முடியும்,எனவே தி.மு.க பிரிவினைக் கோரிக்கையை கைவிடுகிறது என அண்ணா பேசினார்.

 தி.மு.க வை ஒடுக்க பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு அரசு கொண்டு வந்ததும் அப்போதுதான். சி.பா.ஆதித்தனார் தான் தனித் தமிழ் நாடு கேட்டவர்.

அண்ணா கேட்காத தமிழ் நாடு பற்றி அண்ணா 1968இல் அண்ணாவையே சந்திக்காத பெனுவாவிடம் கூறினாராம். இந்த வரலாற்றுப் பொய்களுக்கு நான் தலை ஆட்டத்தால் எங்கள் நட்பில் முதல் விரிசல் ஏற்பட்டது. வி.எம்.சி. ராஜா எங்களோடு இருந்தவர். நாவலரை அழைக்க உடன் சென்றவர். அவரும் நானும் சாட்சி, நடக்காத ஒன்றை இட்டுக் கட்டி பீற்றிக் கொள்ளும் இந்த குணம் பெனுவாவின் இன்றைய சரிவுக்கு முதல் காரணம் .


என வரலாறு திறந்த புத்தகம். எனக்கு விருது கொடுக்க சென்னை வரச் சொல்லிவிட்டு நான் ஒரு ஒசி காரில் சென்னை போனால் அந்தக் காரில் இவருக்கு வேண்டிய அம்மையாரை அழைத்து வரவில்லை என்பதையே பெரிய கொலைக் குற்றம் போல ஊரில் பேசிப் பேசி என் நட்பு நானே முறித்துக் கொள்ளும் நிலைமை உருவாக்கியவர்.

எம்.ஜி ஆரையே என சுயமரியாதை பெரிதென்பதால் துச்சமென நினைத்தவன். அண்ணா தி.மு.க தோற்றமும் நந்திவர்மன் வெளியேற்றமும் என்றத் தலைப்பில் என இணைய தளத்தில் அந்தக் காலப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளே சாட்சி.


அவரே தவறு உணர்ந்து எஸ்.டி. சோமசுந்தரத்தை என்னிடம் அனுப்பி மீண்டும் வருக என் எம். ஜி. ஆர் கேட்டதற்கு வாழ நாள் முழுதும் அவர் வீட்டு படியை மிதிக்க மாட்டேன் என்றவன் நான்.

பணக்காரனின் ரகசிய வாழ்க்கைக்கு எடுபிடியாக இருக்கும் அவசியம் எனக்கு எந்த வயதிலும் ஏற்பட்டதில்லை. ஏற்படாது.

பெனுவா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் புளுகு மூட்டைகள் தேர்தலில் விவாதிக்கப்படும் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், தமிழில்.

நந்திவர்மன்















புதன், 25 ஏப்ரல், 2012

செம்பியனின் ஈழாயணம்



அன்புள்ள நண்பர்களுக்கு



காலையில் உங்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பிய சில மணித்துளிகளில் தொலைபேசியில் விருபா இணையதளத்தில் தமிழ் நூற்களை பதிவு செய்யும் அரும்பணி ஆற்றும் குமரேசன் தொடர்பு கொண்டார். நன்றி. அவர் புதுவை வரும் போது என் இல்லத்தில் ஒரு கலந்துரையாடல் நடக்க உள்ளது. முன்கூட்டிய தெரிவிப்பேன்.

பாவலர் செம்பியன் காவியம் படைத்தாக வேண்டும்.தமிழுக்காக அவர் இப்பணி மேற்கொள்ள சில ஆண்டு முன்பு சொன்ன யோசனையை செயல் வடிவத்தில் கொண்டு வந்தாக வேண்டும். மீண்டும் மீண்டும் மகாபாரதப் போரும் இராமயணப் போரும் தான் தமிழ்க் காவியத்தின் கதைகளா ? கருப்பொருளாக ஈழப் போர் அமைதல் வேண்டும். பிரபாகரன் வீழ்ச்சியும் இனப்படு கொலையும் காவியமாக கம்பரின் யாப்பு போல பிசிறு தட்டாமல் இலக்கியம் யாக்கவல்ல பாவலர் செமபியனால் பாடப் பட வேண்டும். இதற்கான கருப்பொருள் வரலாற்றுச் செய்திகளை மறவன் புலவு அவர்களும் ஆவரங்கால் அவர்களும் காசி ஆனந்தனும் இன்னும் பிற ஈழப் புலவர்களும் தருதல் வேண்டும். இணைய இதழ் புதுவையிலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டால் திங்கள் தோறும் செம்பியனின் ஈழாயணம் அதில் இடம் பெறுதல் வேண்டும்.

நிதி திரட்டவோ கேட்கவோ போவதில்லை. தனித்தமிழ் நாளேடு தொடங்க மறைந்த இலக்கணச் சுடர் திருமுருகன் திரட்டிய நிதி செல்வந்தரிடம் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்து அறக்கட்டளை அமைத்து பொருளாளரிடம் அளித்தர்ர். பொருளாளர் இயற்கை எய்தி விட்டார். நிதி அம்போ , அந்த தவறு நேரக் கூடாது என்பதால் நிதி திரட்ட போவதில்லை. அவ்வப்போது ஆகும் செலவு அவ்வப்போது உள்ளவர்களால் சொந்தப் பணத்தில் இருந்து பகிர்ந்து கொள்ளப் படும்.

அறிஞர் அண்ணா சொன்னது போல என் உயரம் நான் அறிவேன்.தங்கப்பா எனும் நிறைகுடமே அடக்கமுடன் தன்னைப் பற்றி பாட்டு எழுதிள்ள நிலையில் தருக்கும் செருக்கும் கொள்ளாதோர் கூடுவோம். ஊர் கூடி தேர் இழுப்பது போல , அடுத்தவர் முதுகில் ஏறி தன்னை முன்னிலைப் படுத்தாமல் தமிழை முன்னிலைபடுத்த சிந்திப்போம்.

சைவ சிந்தாந்தங்கள் பால் ஈழ நாட்டு புலவர்க்கு ஈடுபாடு மிகுதி. புதுவையில் பிரஞ்சு அரசு ஆற்றிய பணியை இணையத்தில் தொடர்வோம்.

 நான் நாத்திகன். ஆயின் என் கொள்கையை பிறர் மீது திணிக்கதவன்.

கருத்துப் பரிமாற்றம் நிகழவும் கூடும் போது கூடுதலாக உங்கள் யோசனைகள் அமையவும் என் அறுவை தொடர்கிறது.

நந்திவர்மன்

இதழ் தொடங்க நினைத்தேன்





அன்புள்ள நண்பர்களுக்கு

சிங்கை வாழ் தமிழர்கள் தேவநேயப் பாவாணர் நூல்களை இணையதளத்தில் ஏற்றிய செய்தியை http://www.devaneyam.net/ சில திங்கள் முன் புதுவை வந்த நண்பர் கவி சொல்லி மகிழ்வித்தார்.
ஆபிரகாம் பண்டிதர் நூலையும் இணையத்தில் ஏற்ற வேண்டும். முனைவர் மதிவாணனின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியையும் இணையத்தில் ஏற்றி ஆக வேண்டும். பெருஞ்சித்ரனார் மருமகனும் புதுவைக்கே பெருமை தேடித் தந்தவருமான ப.அருளியின் அறிவியல் கலைச் சொல் அகரமுதலியையும் ஏற்றியாக வேண்டும்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் உருப்படியான தமிழ்ப் பணிகளையும் பதிவு செய்தாக வேண்டும். இணையத்தில் http://www.tamilnation.org/ இருந்த இடத்தை நிரப்பி அதன் பணிகளை தொடர்ந்தாக வேண்டும்.

இதற்காகவே இணைய இதழ் தொடங்க நினைத்தேன். இணையத்தில் பதிவு செய்யும் நண்பர் நினைத்தால் வருவார், காணாமல் போவார், இதுவே இதழ் தொடங்கும் முன் குறித்த நேரத்தில் இதழ் வெளிவருமா என்ற கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பழங்காலச் சித்த மருத்துவர்கள் செய்முறைகளை அடுத்த தலைமுறைக்கு சொல்லாமல் மறைத்தது போல இணைய வழி எழுதத் தெரிந்த சிலர் பரந்த மனம் இல்லாமல் அவர்களை பற்றிய பதிவுகளுக்கே வழி தேடுகிறார்கள்.

எழுதத் தெரிந்த இணையத்தை பயன்படுத்த தெரியாத பாவாணரும் மதிவாணனும் சாத்தூர் சேகரனும் இன்னும் பல அறிஞர்களும் உலகுக்கு தெரியக் கூடாது என நினைக்கும் தன்னல நினைப்பினர் தவிர யார் வேண்டுமானாலும் வடமொழிக்கு வால் பிடிக்காத தமிழை சாதியால் கூறு போட்டு வட்டாரத்தால் பிளந்து நவீனப் போர்வையில் மரபு இலக்கியங்களை அழிக்க தந்திரமாக காரியமாற்றுவோர் தவிர்த்து, உண்மைத் தமிழறிஞர் பதிவுகளுக்கு இடமளிக்கும் இதழாக வருதல் வேண்டும். கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விருபா குமரேசனோ வேறு நண்பர்களோ இணைய இதழில் பதிவுகளை ஏற்றித் தர அணியமானால் விரைவில் எதோ ஒரு பெயரில் இதழ் வெளி வரும்.


நந்திவர்மன்