ஞாயிறு, 30 மே, 2010

நேதாஜியின் மரண மர்மங்கள்


பிரபாகரன்  உயிரோடு இருக்கிறார். போரில் கொல்லப்படவில்லை என அழுத்தந்திருத்தமாக சொல்லி வருகிறார்கள். அதுபோலவே நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை. உயிருடன் இருக்கிறார் என்ற சர்ச்சையும் பல ஆண்டுகள் நடந்தது. மத்திய அரசுக்கு மண்டைக் குடைச்சல் தந்தது.
நேதாஜி துவக்கிய கட்சி அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகும். அதன் இணைய தளத்தில் நேதாஜியின் ஒன்றுவிட்ட சகோதரர் சுபத்ரா போஸ் இந்திய பாராளுமன்ற மக்களவையில் பேசிய பேச்சின் பதிவு இருக்கிறது. அதிலிருந்து சில….

“1945 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இரண்டாம் உலகப் போர் ஆசியாவில் முடிவுக்கு வந்த நேரம். ஹிரோ~pமா நாகசாகி என்ற நகரங்கள் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதால் ஜப்பான் சரணாகதி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. நேதாஜியும் தோல்வியை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர் முன்னே இரண்டு வழிகள் இருந்தன. ஆங்கிலோ – அமெரிக்கப் படைகளிடம் சரணடைவது அல்லது இன்னொரு நாட்டுக்கு தப்பிச்சென்று அடைக்கலம் தேடி அங்கிருந்து விடுதலைப் போரை தொடர்வது. சரணாகதி அடைவது என்பது நேதாஜியின் சுபாவத்திலே இல்லை. பின்வாங்கி பாங்காக் வந்த நேதாஜி சோவித் யூனியனுக்கு தப்பிச் செல்ல எண்ணினார். ஜப்பான் அரசும் அவருக்கு ர~;யா தப்பிச் செல்ல உதவுவதாக வாக்களித்திருந்தது. ஜப்பான் மீது அணுகுண்டு வீசப்பட்டவுடன் ர~;யாவும் ஜப்பான் மீது போர் தொடுப்பதாக அறிவித்து விட்டது. இதனால் வாக்களித்தப்படி ஜப்பான் நடந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வட சீனாவில் உள்ள மஞ்சு10ரியாவுக்கு நேதாஜியை இட்டுச் செல்ல ஜப்பான் ஒப்பியது.

சீனா ஜெனரல் ~pயாங்-கே-n~க் ஆட்சியில் இருந்தாலும் மஞ்சு10ரியா கம்யூனிஸ்டு சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. எனவே தாமே ர~;யாவுக்குள் சென்று விடவும் அவர் திட்டமிட்டார். ஜப்பானிய உதவியுடன் நேதாஜியும் அவர் நணபர்கள் சிலரும் சைகோன் வந்தடைந்த போது அனைவரையும் ஒன்றாக அழைத்துச் செல்ல இயலாது. நேதாஜியுடன் ஒருவர் மட்டுமே மஞ்சு10ரியாவுக்கு அழைத்துச் செல்ல முடியும். மற்றவர்களை அடுத்த விமானத்தில் அனுப்புவதாக ஜப்பான் கூறியது. கர்னல் ஹபியூர் ரகுமானை மட்டும் தன்னுடன் இட்டுச் செல்ல நேதாஜி தீர்மானித்தார்.

• நேதாஜி விமான விபத்தில் மறைந்ததாகச் சொல்லப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து பிரிட்டனில் காபினட் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் 25 அக்டோபர் 1945 ல் அமைச்சரவை இயற்றிய தீர்மானங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டி~; அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் - வால்யூம் ஐஏ நூலில் இந்தியாவில் ஒரே எதிரியாக நேதாஜி வருணிக்கப்பட்டார். அவருக்கு என்ன தண்டனை விதிப்பது என்பது விவாதிக்கப்பட்டது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வந்து என்ன தண்டனை அளிப்பது என அமைச்சரவை விவாதித்துள்ளது. ஆக நேதாஜி இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம் கழித்து பிரிட்டி~; அரசின் அமைச்சரவை நேதாஜியை கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க முடியும்?

• பிரிட்டி~; இந்திய அரசு பிரிட்டனில் உள்ள அரசுக்கு 23 அக்டோபர் 1945 ல் அனுப்பிய கடிதத்தில் நேதாஜியை கைது செய்தால் நாடே கொந்தளிக்கும் “அவர் எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும். அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்” என்று எழுதி இருந்தது.

• 1946 அக்டோபர் 30 ல் இடைக்கால அரசின் அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் மங்கள் சிங் என்று உறுப்பினர் கேள்விக்கு பதிலளிக்கையில் நேதாஜி உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்று கூற முடியாத நிலையில் உள்ளதாகச் சொன்னார். அகில இந்தியப் பார்வார்டு பிளாக் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் தேவப்பிரதா பிஸ்வாஸ் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினர் பரூண் முகர்ஜி அவர்களும் புதுச்சேரிக்கு வந்திருந்த போது பேட்டி கண்டோம்………. விபரங்கள் இனி.

21.1.1967 ல் நேதாஜியின் பிறந்த நாள் வருவதற்கு இரண்டு நாள் முன்பே முன்னாள் மத்திய அமைச்சர் பேராசிரியர் சமர் குகா பிறந்த நாள் வாழ்த்து கூறி நேதாஜிக்கே எழுதிய மடலில் சு10ரியன் உதிப்பதற்காக எல்லோரும் காத்துக் கொண்டுள்ளோம் என நேதாஜியின் மீள்வருகை பற்றி சு10சகமாக குறிப்பிட்டார் ஜாதவ்பூர் பல்கலைக் கழகப் பேராசியர் இந்த முன்னாள் அமைச்சர் ஏனோதானோ அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நேரு 1964 ல் மறைந்த பிறகு நேதாஜி தன்னை வெளிப்படுது;திக் கொள்ள சிந்திதிருக்கக் கூடும் என்பதற்கு பேராசிரியரின் கடிதமே சாட்சியமாகும்.

• ஜஸ்டிஸ் முகர்ஜி கமி~ன் அறுபதாண்டுகள் சஸ்பென்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்த நீதி விசாரணைக் கமி~ன் என்ற இடத்தில் 18 ஆகஸ்ட் 1945 ல் விமான விபத்து நடக்கவே இல்லை. எனவே விபத்தல் நேதாஜி இறந்தார் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று தீர்ப்பளித்தது.

14.5.1999 ல் இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்.கே.முகர்ஜி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டது. 1) நேதாஜி உயிருடன் உள்ளாரா? இறந்து விட்டாரா? 2) அவர் இறந்திருந்தால் விமான விபத்தில் இறந்தாரா? 3) ஜப்பானியக் கோவிலில் உள்ள சாம்பல் நேதாஜி எரியூட்டப்பட்ட சாம்பலா? 4) வேறெங்கே அல்லது வேறெந்த விதத்தில் நேதாஜி இறந்தார்? எப்படி இறந்தார்? எந்த இடத்தில் இறந்தார்? 5) அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் எங்கே இருக்கிறார்? இந்த வினாக்களுக்கு விடை தேட அமைக்கப்ட்ட நீதி விசாரணைக்கு அரசு எந்த ஒத்துழைப்பம் தரவில்லை. பல்வேறு இடையூறுகளுக்கிடையே கமி~ன் 8 நவம்பர் 2005ல் தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது.

 மார்ச் 23 – 2000 அன்று இந்தியப் பிரதமர் அலுவலகத்திற்கு கமி~ன் நோட்டீஸ் அனுப்பியது. கோப்பு எண்.12 (226) 56-Pஆ) கமி~னுக்கு தரப்பட வேண்டுமென அரசை கமி~ன் கேட்டது. நேதாஜி மறைந்த சு10ழ்நிலை பற்றிய விசாணைகள் அடங்கிய அந்த ஃபைல் காணவில்லை அழிக்கப்ட்டு விட்டதென கமி~னுக்க பிரதமர் அலவலகத்தில் இயக்குநர் பொறுப்பில் இருந்த ஒரு பெண்மணி மே 2 2000ல் பதிலளித்தார். கமி~னும் விடாக்கண்டனாக மீண்டும் மே 23 2000 அன்று அந்த இயக்குநருக்க “ அந்த கோப்பின் உள்ளடக்கம் என்ன? எந்தச் சு10ழ்நிலையில் அந்த கோப்பு அழிக்கப்பட்டது? என்ற வினாக்களை தொடுத்தது. அந்தப் பெண் இயக்குநர் பதிலளிக்கும் முன் முந்திரிக்கொட்டை போல முந்திக்கொண்டு உள்துறை அமைச்சகத்தில் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான இயக்குநர் ஏ.கே.பைடாண்டி சு10ன் 22 2000த்தில் கமி~ன் முன் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.

நேதாஜி மறைவு பற்றிய கோப்புகளோ இந்திய தேசிய ராணுவம் பற்றிய கோப்புகளோ கேட்டு பல துறைகளுக்கு வினாக்கள் வருவதால் சம்மநதப்பட்ட இலாக்காக்கள் பதில் தாக்கல் செய்வதில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே காபினாட் செயலகத்திலோ இண்டலிஜென்ஸ் பீரோவிலோ “ ரா” (சுயுறு) அமைப்பிடமோ நேதாஜி தொடர்பான எந்தத் தகவலுமில்லை என்று கமி~ன் முன் மேற்சொன்ன துறைகளுக்காக இவரே பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

முழுப்பூசணிக்காயை உள்துறை அமைச்சக இயக்குநர் சு10ன் 22 2000ல் சோற்றில் மறைக்கப்பார்த்தார் மே 23 2000ல் கமி~ன் கேட்ட கேள்விக்கு பிரதமர் அலுவலக இயக்குநர் சு10லை 2004ல் பதில் அளித்தார் கோப்பு எண்.12 (226) 56-Pஆ) நேதாஜி மறைந்த சு10ழ்நிலைகள் பற்றிய விசாரணைகள் தொடர்பான அட்டவணை ஃ காபினட் முடிவுகள் அடங்கியது வழக்கமாக பழைய கோப்புகளை அழிக்கும் நடைமுறைப்படி 1972 ல் அழிக்கப்பட்டுவிட்டன என பதில் அனுப்பினார். காபினட் செயலகத்தில் காபினட் முடிவுகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படும் அங்கிருந்து தகவல் பெற்றுக் கொள்ளூறு கமி~னுக்கு பதில் அனுப்பினார்.

உடனே கமி~ன் பிரதமர் அலுவலகத்தையும் உள்துறை அமைச்சக செயலாளரையும் நேதாஜி சுபா~; சந்திர போஸ் தொடர்பாக கோப்புகளை அழிக்கப் பிறப்பிக்கப்பட்ட ஆணையை கேட்டது. என்னென்ன கோப்புகள் அழிக்கப்பட்டன என்றும் பட்டியல் கேட்டது. இதற்கு பதில் அளித்த பிரதமர் அலுவலக இயக்குநர் செப்டம்பர் 21 2000த்தில் பைல்களை அழிப்பது தொடர்பான எந்த ஆணையையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

இப்படி கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் அம்பலமாகும் என்பது போல் முன்னுக்குப்பின் முரணாக மத்திய அரசு இலாக்காக்களே உளறிக் கொட்டி உண்மையை யூகிக்குமாறு செய்துவிட்டன.

கோஸ்லா கமி~ன் விசாரணை நடைபெற்று வநத சமயத்திலேயே 1972 கோப்புகள் அழிக்கப்பட்டன அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சமர் குகா சனவரி 3 1974 ல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்திக்கு கடிதம் எழுதி கோப்பு அழிக்கப்பட்டதை விசாரிக்குமாறு கோரினார். இதற்கு பதில் அளித்த இந்திராகாந்தி அந்தக் கோப்பில் புதிதாக எதுவுமில்லையென்று மழுப்பினார்.

ர~;ய உளவுத்துறையான முபுடீ அமெரிக்க உளவுத்துறையான ஊஐயு போல உலகெங்கும் ஒரு காலத்தில் பேசப்பட்டது. கேஜிபியின் முன்னாள் உளவாளி வாசிலி மித்ரொகின் கேஜிபியும் உலகமும் என்ற தலைப்பில் பரபரப்பான புத்தகம் வெளியிட்டார். வுhந முபுடீ யனெ வாந றுழசடன நூலாசிரியர் வாசிலி மித்ரொகினுக்கு நேதாஜிக்கும் ர~;யாவுக்கும் இருந்த தொடர்புகள் தெரியும். அவர் முகர்ஜி கமி~ன் முன் ஆஜரான முக்கிய சாட்சியமான புரபிராய் என்ற பெண்மணிக்கு தன் ஆவணக்காப்பகத்தில் இருந்து முக்கிய தகவல்களை தந்து உதவினார் இதற்காக ர~;யாவுக்கே சென்றது முகர்ஜி கமி~ன். மாஸ்கோவில் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் இர்க்ஹீட்ஸில் ஒம்சுக்கில் நேதாஜி பற்றிய பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை தேடிச் சென்றது முகர்ஜி கமி~ன்.

முகர்ஜி கமி~ன் முன் நான்கு பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார் சாட்சியான புரபிராய்ää ர~;யாவில் உள்ள ஃபெடரல் செக்யூரிட்டி பீரோவில் உள்ள ஆவணங்கள்ää கிரெம்ளின் நகரில் இருந்த குடியரசுத் தலைவரின் ஆவணக்காப்பக ஃபைல்கள்ää ராணுவ உளவுத் தகவல் ஆவணக்காப்பக கோப்புகள் என்ற இந்த 3 இடங்களிலும் நேதாஜி பற்றிய பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் என ரகசிய முத்திரை குத்தப்பட்ட ஆவணங்களை பார்ப்பதற்கு முகர்ஜி கமி~னை ர~;யா அனுமதிக்குமா? என்ற கவலையை புரபி ராய் வெளிப்படுத்தி இருந்தார். மூன்றரை ஆண்டுகள் போராடி அனமதி வாங்கி முகர்ஜி கமி~ன் ர~;யா சென்றது. ஓம்சுக் நகர் வழியாகத்தான் மஞ்சு10ரியாவில் இருந்து நேதாஜி ஊடுருவினார் என்பார்கள். இர்க்~Pட்சில் இருந்த முள்வேலி முகாம் போன்ற முகாமில்தான் நேதாஜி இருந்தார் என்றும் செய்திகள் உலவின. கமி~ன் கண்டறிந்தது அறிக்கையில் உள்ளது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பொதுச்செயலாளர் தேவபிரதாபிஸ்வாஸ் பேட்டி :

இது பற்றி அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ பிரதா பிஸ்வாஸிடம் கேட்டோம்.

1. நேதாஜி ஆகஸ்ட் 18 – 1945 ல் தாய்பேய் விமான நிலையத்திலோ அதற்கு அருகாமையிலோ நடந்த விமான விபத்தில் இறக்கவில்லை. முகர்ஜி கமி~ன் முன்பு அமெரிக்க உளவுத்துறையால் தாக்கல் செய்யபட்ட பிரமாண பத்திரத்தில் இதனை உறுதிபட அமெரிக்கா தெரிவித்துவிட்டது.

2. தாய்வான் நாட்டு அரசும் தன் நாட்டு எல்லைக்குள் அன்று அப்படி எந்த விபத்தும் நடக்கவில்லை என்று கூறி விட்டது.

3. ஜப்பான் அரசும் சுபா~; சந்திரபோஸ் என்ற பெயரிலோ இச்சிரோ உக்குடா (நேதாஜிக்க சு10ட்டிய புனை பெயர்) என்ற பெயரிலோ எவரும் இறந்து சுடுகாட்டில் எரிக்கப்படவில்லை என்று தெரிவித்துவிட்டது. ஜப்பானிய கோவில் ஒன்றில் வைக்கப்பட்ட அந்த சாம்பல் மற்றும் எலும்புகளை டிஎன்ஏ பரிசோதனை நடத்தவிடாமல் தடுத்து குழப்பியதும் உலகுக்கே தெரியும்.

4. முகர்ஜி கமி~ன் அறிக்கையும் ஆகஸ்ட் 18 1945 ல் நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அரசுக்கு அறிக்கை அளித்துவிட்டது.

இதில் வேடிக்கை என்னவன்றால் இந்திய அரசு எந்தவித காரணமும் கூறாமல் தானே நியமித்த முகர்ஜி கமி~ன் அறிக்கையை ஏற்க முடியாது என்று நிராகரித்ததுதான் என்றார் தேவபிரதா பிஸ்வாஸ்.

• நேதாஜி பற்றிய உண்மைகளை எப்படி உலகம் தெரிந்து கொள்வது? புpரபாகரன் பற்றிய உண்மைகளை இறுதிப்போரில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றிய உண்மைகளை உலகம் அறியவிடாமல் இலங்கை அரசு நடந்து கொள்வது போல இந்திய அரசு நேதாஜி வி~யத்தில் நடந்து கொண்டதா என்று கேட்டோம்.

“ பிரபாகரன் அறையில் நேதாஜியும் படமும் புலியின் படமும் இருக்கும் என ஈழம் பற்றிய நினைவுகளில் ஆழ்ந்த தேவபிரதா பிஸ்வாஸ் அறையில் இருந்த புலி பொம்மையை டேபிளில் வைத்து புலியோடு சேர்த்து படமெடுக்க சொன்னார்.

“நேதாஜி தொடர்பான ஏராளமான ஆவணங்களை பிரதமர் அலுவலகமும் உள்துறை அமைச்சகமும் வெளியுறவு அமைச்சகமும் அழித்து ஒழித்து விட்டார்கள். இதை நீதிபதி முகர்ஜி கமி~னே சொல்லியுள்ளது. எல்லா ஆதாரமும் அழிந்து விட்டதா? என்று கேட்டோம். இல்லை! சுமார் 800 ஃபைல்கள் ரகசிய ஃபைல்கள் ஊடயளளகைநைன குடைந என்று முத்திரை குத்தப்பட்டு மத்திய அரசிடம் உள்ளன. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகள் மட்டுமே ஊடயளளகைநைன குடைந ஆக வைத்திருந்து னுந - ஊடயளளகைநைன குடைந என ஆய்வாளர்களுக்காக பொது ஆவணமாக அறிவிப்பார்கள். இந்தியாவிலும் அப்படித்தான். ஆனால் இந்த 800 ஃபைல்களையும் நிரந்தரமாக ஊடயளளகைநைன குடைந ஆக இந்திய அரசு வைத்துள்ளது. இது பகிரங்கப் படுத்தப்பட்டால் நேதாஜிக்கு நேர்ந்தது என்ன என உலகம் அறிந்து கொள்ளும்” என்றார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

இதை யாரும் பார்க்க முடியாதா? என்று கேட்டோம். மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் பரூண் முகர்ஜி “எனக்கு காட்டினார்கள் ஆனால் அதைப் பற்றி பேசவோ – மேற்கோள் காட்டவோ கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டு காட்டினார்கள்” என்றார். அதிர்ந்து போனோம்!

நேதாஜி உயிருடன் இருந்தர் என நீங்கள் சொல்லி வந்தீர்கள்? அரசு இறந்து விட்டதாகத்தானே கூறி வந்தது என்று கேட்டோம்.

மறைந்த பிறகு நாட்டின் உயர் தலைவர்களை கௌரவிக்கும் பாரத ரத்னா வருதை நேதாஜிக்கு மத்திய அரசு அளித்தது. அது பற்றி உச்ச நீதிமன்றத்தில் சர்ச்சை எழுந்தது. அங்கே நேதாஜி இறந்ததை நிருபிக்கமுடியாமல் மத்திய அரசு பின்வாங்கியது. அதுமட்டுமல்ல கொடுத்த பாரத ரத்னாவையேதிரும்ப பெற்று ஜகா வாங்கியது என்று போட்டு உடைத்தார் தேவப்பிரதா பிஸ்வாஸ்.

நேதாஜி 1985 ல் இறந்தாரா?

பைசியாபாத்தில் 1985ல் இறந்த பகவான்ஜிதான் நேதாஜியா? பகவான்ஜி பார்ப்பதற்கு நேதாஜி போலவே இருந்தார். நேதாஜி போலவே பேசினார். அந்த வயதில் அவரது உயரமும் தோற்றமும் ஒத்திருந்தது. நேதாஜியின் குடும்பப் புகைப்படங்களும் அந்த துறவி வீட்டில் அகப்பட்டன. பல் இடுக்கும் ஒத்திருந்தது. வயிற்றின் கீழே இருந்த தழும்பும் ஒத்திருந்தது. டீ. லால் என்ற ஆராய்ச்சியாளர் இருவருடைய எழுத்தும் நடையும் ஒத்துள்ளன என்றார். இந்துஸ்தான் டைம்சு நாளேடு இந்த ஆய்வுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

2001ல் இது பற்றி புலனாய்வு செய்தவர்கள் ஆகஸ்ட் 18 – 1945 ல் நேதாஜி விமான விபத்தில் கொல்லப்பட்டதாக ஜப்பானியர் உதவியுடன் கட்டுக்கதை திட்டமிட்டே கட்டப்பட்டது. பின் தொடரும் நேச நாடுகள் படைகள் பிடியில் இருந்து தப்பிக்கவே இக்கதை அவிழ்த்து விடப்பட்டது. நேதாஜி சோவியத் யூனியனுக்குள் நழுவிச் சென்றிருக்கலாம் என்று செய்திகள் அடிபட்டது.

பைசியாபாத்தில் துறவி ஒருவரே நேதாஜி என்ற கிசு கிசு கிளம்பும் வரை இப்படியே உலகம் நினைத்தது. கும்நாமி பாபா என்று அறியப்பட்ட அந்தத் துறவி மிக மிக மர்மயோகியாகவே வாழ்ந்தார். திரைக்குப் பின்னிருந்தே மற்றவர்களை சந்தித்தார். வெளியே எங்கும் தலைகாட்டாமல் வாழ்ந்தார். அவர் மறைந்த பொழுது அவரே நேதாஜி என்று செய்திகள் பரவவே உத்திரப்பிரதேச நீதிமன்றம் அவருடைய உடைமைகளை சீல் வைத்து பைசியாபாத் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்குமாறு ஆணையிட்டது. திசம்பர் 22 2001 ல் முகர்ஜி கமி~னுக்காக சீல் உடைக்கப்பட்டது.

பகவான்ஜி ஒரு வங்காளிää ஆங்கிலம்ää இந்துஸ்தானிää சமஸ்கிருதம்ää ஜெர்மன் மொழியில் அவர் புலமை பெற்றிருந்தார். நேதாஜி அணிவது போலவே வட்ட வடிவ மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார் தங்க வாட்ச் அணிந்திருந்தார். 1945 ல் நேதாஜி மறைந்ததாக சொல்லப்பட்ட இடத்தில் அவரது மூக்குக் கண்ணாடியோ தங்க வாட்சோ அகப்படவில்லை.

நேதாஜியின் பெற்றோரின் அரிய புகைப்படங்கள் மட்டுமல்லää அவரது தந்தையார் பயன்படுத்திய குடையும் அங்கிருந்தது. இந்தத் துறவியின் சீடர்களாக இந்திய தேசிய ராணுவத்தின் உளவுப்பிரிவு தலைவராக செயல்பட்ட டாக்டர் பவித்ரா மோகன் ராய்ää லீலா ராய்ää சுனில் தாஸ்ää திரிலோக்நாத் சக்ரவர்த்தி ஆகிய நேதாஜியின் நெருங்கிய கூட்டாளிகள் இருந்தனர்.

ஓவ்வொராண்டும் நேதாஜியின் பிறந்த தினமான சனவரி 23 அன்று அவரது சீடர்கள் குறிப்பாக டாக்டர் பவித்ரா மோகன் ராய் பகவான்ஜியின் பிறந்த நாளை கொண்டாடினார்கள். நேதாஜியின் மூத்த சகோதரர் சுரே~; போசுக்கு 1971 ல் கோஸ்லா கமி~ன் விடுத்த சம்மனின் ஒரிஜினல் பகவான்ஜியின் உடைமைகளுடன் இருந்தது. 1985 ல் துறவியார் மறைந்த பொழுது கல்கத்தாவில் டாக்டர் பவித்ரா மோகன் ராய் சொன்னாராம். “நான் மட்டும் வாய் திறந்தால நாடே பற்றி எரியும்” என. இதுப்பற்றி தேவபிரதா பிஸ்வாஸிடம் கேட்டோம்.

நேதாஜி இன்று உயிருடன் இல்லை அவர்தான் நான் என்று பலர் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் அதை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. 1945 ஆகஸ்ட் 18 – ல் நேதாஜி இறக்கவில்லை. என்பது மட்டும் உறுதி என்றார் அவர் ர~;யா சென்றதாக சொல்கிறார்களே அவர் சென்ற இடம் மர்மமாகவே இருக்கிறதே இதுபற்றி உங்கள் கருத்து என்ன அவர் எங்கு சென்றிருக்க கூடும் என்று கேட்டோம் வியட்நாம் அப்பொழுது விடுதலை பெற்று விட்டது. வியட்நாம் அதிபர் ஹோசிமின்னுக்கும் நேதாஜிக்கும் நெருங்கிய நட்பு இருந்ததால் அவர்தான் நேதாஜியை பாதுகாத்திருக்க வேண்டும் என்றார்.

ஏன் நேதாஜி உயிருடன் இருந்தும் தலைமறைவாக இருந்தார்? விடை தெரியாத வினா? ஆனால் ஆந்நாளில் பி.டி.அய். செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் நேதாஜியின் மெய்க்காப்பளராக இருந்த உஸ்மான்பட்டேல் கூறியதாக ஒரு செய்தி ஆங்கில நாளேடுகளில் வெளிவந்தது. நேருää காந்திää ஜின்னா மூவரும் பிரிட்டி~; நீதிபதியிடம் உடன்பாட்டுக்கு வந்து நேதாஜி இந்தியாவுக்குள நுழைந்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்போம் என்று உறுதி அளித்ததாக நீதிபதி கோஸ்லா கமி~ன் முன் உஸ்மான் பட்டேலின் பிரமாண வாக்குமூலம். இவ்வளவு மர்மங்களா தலைசுற்றியது.

அகில இந்திய பார்வர்டு பிளாக் பொது செயலாளர் தேவப்பிரதா பிஸ்வாஸ் கூறினார் “நேதாஜி மர்மம் போலவே பிரபாகரன் மரணமும் மர்மமாகவே இருக்கும். பிரபாகரன் தேடப்படும் குற்றவாளி அல்ல அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குகிறோம் என்று உலக நாடுகள் அறிவித்தால் அவர் வெளியே வரக்கூடும். நேதாஜியை குற்றவாளியாக பிரிட்டி~; அரசு அறிவித்தது அதை இந்திய அரசு விளக்கிக்கொள்ளவில்லை

நேதாஜி வரலாறு மட்டுமல்ல இந்திய விடுதலைக்காக போராடிய இந்திய தேசிய இராணுவத்தின் வீரம் செறிந்த வரலாற்றை இந்திய அரசு வெளியிடவே இல்லை. ஏன் சுதந்திர போரின் உண்மை வரலாற்றை வெளியிட இந்திய அரசு மறுக்கிறது? நேருவின் அரசு இந்த வரலாற்றை எழுத இராதாவினோத்பால் என்ற அறிஞரை கேட்டுக்கொண்டது. அவரும் வரலாற்றின் கையெழுத்துப்படியை நேரு அரசிடம் ஒப்படைத்தார் அது புத்தகமாகி வெளியே வரவில்லை என்றார் தேவபிரதா பிஸ்வாஸ்.

பெரியார் வரலாற்றை தொகுத்து எழுதிட அறிஞர் நெ.து. சுந்தரவடிவேலு தலைமையில் எம்.ஜி.ஆர் அரசு குழு அமைத்தது. அந்த வரலாற்றை ஏழு ஆண்டுகள் அரம்பாடு பட்டு எழுதி கையெழுத்துப்படியை ஒப்படைத்தார்கள். அரசு செலவில் இல்லாமல் தன் சொந்த செலவில் வெளியிட நினைத்த எம்.ஜி.ஆர் ரூபாய் பத்து இலட்சம் பணமும் கொடுத்தார். ஹேப்பியாக இருக்கிறார் பணம் பெற்றவர் - கையெழுத்துப்படியையாவது அந்த புண்ணியவான் கலைஞர் அரசிடம் கொடுத்து எம்.ஜி.ஆர் ரின் ஆசையை நிறைவேற்றுவாரா? என நம்மனம் நினைத்தது.

தொலைபேசியை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிராம் பெல் என்று தான் நாம் இன்று வரை சொல்லி கொண்டு வருகிறோம். அவரல்ல அவருக்கு முன்பே இத்தாலியரான அந்தோணியோ மியூசி என அமெரிக்க நாட்டில் செனட் விவாதித்து வரலாற்றை அங்கு திருத்தி உள்ளது. நாம் பொய் வரலாற்றை திருத்தாமல் திரும்ப திரும்ப பழம்பாட்டை பாடிக்கொண்டிருக்கிறோம்.















:

1 கருத்து: