திங்கள், 14 நவம்பர், 2011

காங்கிரஸ் ஆரம்பிக்க வைத்த அண்ணா தி.மு.கழகம்

அம்மா தி.மு.க அறியாத எம்.ஜி.ஆரை பகடைக்காயாக்கி


எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சி அல்ல அண்ணா தி.மு.கழகம். முன்பு காங்கிரஸ் ஈ.வெ.கி.சம்பத்தை முன்னிறுத்தி உடைத்தது போலவே, மீண்டும் தி.மு.கழகத்தை பிளக்க சதித்திட்டம் தீட்டிய காங்கிரஸ் எம்.ஜி.ஆரை கருவியாக்கி தி.மு.கழகத்தை உடைத்தது. புதுவை துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டி காங்கிரஸ்காரரான் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்தில் ஊடுருவி முதலமைசரானதால் கொந்தளித்த என்னிடம் அண்ணா பெயரில் கட்சித் தொடங்கச் சொன்னார். அக்டோபர் 16 1972 ல் அறிவித்தேன்.அனகாபுதூர் ராமலிங்கம் சென்னையில் அறிவிக்க இரண்டும் அக்டோபர் 18- 1972ல் தினமணிச் செய்தி ஆனது.

கட்சி துவக்கிய என்னை பாண்டிய நெடுஞ்செழியன் ஆராயாமல் கோவலனை கொலைக்களம் அனுப்பியது போல அமெரிக்க உளவாளி என் அபாண்டம் சுமத்தி நீக்கியபோது நவசக்தி நாளேடு இரண்டு தலையங்கங்கள் தீட்டியது. அதில் ஒன்று மேலே. முழு வரலாறும் செய்திகளும் கீழுள்ள சங்கிலியை சொடுக்கினால் அறியலாம்.



நந்திவர்மன்



சனி, 12 நவம்பர், 2011

வியாழன், 3 நவம்பர், 2011

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா

அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் இவ்வளவு பெரிய நூலகம் முன் சின்னஞ் சிறிய அண்ணா சிலை வைத்து அண்ணாவுக்கு அவமரியாதை செய்தார் கலைஞர் எனவே அவர் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை நீக்கிவிட்டு வானுயர்ந்த சிலையை அண்ணாவுக்கு அமைத்து அவர் பெயரை போட்டுக் கொள்ளுமாறு சசிகலாவாவது அறிவுரை சொல்லக் கூடாதா .....

அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்