வியாழன், 26 ஆகஸ்ட், 2010

RENAMING OF SRILANKA

சிறிலங்காவின் பெயரை ஈழம்
என்று மாற்றக் கோரிக்கை

அக்காலத்தில் இலங்கையில் வசித்த நாகரும் இயக்கரும் எலு வென்று இக்காலத்தில் பிழைபட வழங்கும் ஈழு என்ற நிறைவற்ற பாஷையே பேசி வந்தார்கள்.அதனால் இலங்கைக்கு ஈழம் என்றும் ஈழமண்டிலம் என்றும் பெயர் உண்டானது.

ஈழம், சீழம் என மருவிச் சிஹழம் சிங்களம் என மாறிற்று. சீழம் என்னும் பெயரில் இருந்தே சீழம்தீப் சேரன்டீப் என்னும் அராபிய நாமங்களும் சிலாங், சிலோன் என்னும் மேலைத்தேயததவரிட்ட பெயர்களும் வந்தன்.

 சிஹ வென்னும் பாலி மொழிச்சொல் சிங்கம் என்னும் பொருள் உடையதானபடியால் சிஹழம் சிங்களமாக மருவிற்று. இத்தகவல் திரு.சி.இராசநாயக முதலியார் எழுதிய யாழ்ப்பாணச்சரித்திரம் நூலின் பக்கம் 12ல் உள்ளது

எனவே ஒருலட்சம் தமிழரை கொன்று குவித்து ஒன்றுபட்ட இலங்கைகுள் வாழச் சொல்லும் சிஙகள அரசு வரலாற்றுப்பிழையை திருத்தி சிறிலங்கா என்ற பெயரை எந்த மூலச்சொல்லில் இருந்து அந்தச் சொல் பிறந்த்தோ அந்த மூலச்சொல் ஆன ஈழம் என்ற பெய்ரையே சூட்ட வேண்டும் என திராவிடப் பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் ஒன்றுபட்ட நாடு வேண்டுமானால் சிறிலங்காவின் பெயரை ஈழம் என்ற பழைய பெயரையே சூட்டுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்


 

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தமிழ்மாமணி விருது

புதுச்சேரி அரசு முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரின் தந்தையாருமான் புதுச்சேரி விடுதலைப் போராட்ட வீரர் வெ.வெங்கடசுப்பா [ ரெட்டியாரின்] நூற்றாண்டு விழாவை 16.08.2010 அன்று செயராம் திருமண மண்டபத்தில் கொண்டாடியது.அதில் 2008-2009 ஆண்டுக்கான தமிழ்மாமணி விருதுகளை ஆறு தமிழ் அறிஞர்களுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர்.இக்பால் சிங் வழங்கினார். 91 வயது மூத்த தமிழறிஞரும் பாவேந்தரின் சீடருமான வைணவ வித்தகர் சித்தன் அவர்களும்,திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நாவலர்.நந்திவர்மன் அவர்களும், பேராசிரியர் திருமாவளவன் அவர்களும், புலவர் திருமேனி நாகராசன் அவர்களும்,பரிதி.வெங்கடேசன் அவர்களும், மா.தன.அருணச்சலம் அவர்களும் விருதுகளையும் 30,000 ரூபாய் பொற்கிழியையும் 3 பவுன் தங்கப்பதக்கமும் பெற்றுக்கொண்டனர்.

முதலமச்சர் வெ.வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.
கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர்  எம்.ஒ.எச்.ஷாஜகான் வரவேற்றார்.
சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர் இரா,சிவா, ஆர்,விசுவநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

47 கலைஞர்களுக்கு கலைமாமணி விருதும் 20,000 ரூபாய் பொற்கிழியும் 2 பவுன் தங்கப்பதக்கமும் வழங்கப்பட்டது.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தமிழ் மாமணி





தமிழ் மொழிக்காப்புக்காக 1965ல் மொழிப்போர் நடத்திய நந்திவர்மனை
2008-2009 ஆம் ஆண்டுக்கான தமிழ் மாமணி விருதுக்கு புதுச்சேரி அரச் தேர்வு செய்து அறிவித்துள்ளது என்பதை தெரிவித்து கடலடியில் தமிழர் நாகரிகம் நூலை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிடும் வாய்ப்பு உள்ளதால் எழுதத் தொடங்கி உள்ளேன். ஆகத்து 18 ல் என் 64 அகவை தொடங்கும் நாளுக்குள் எழுதி முடிக்க கருதுகிறேன்.

நந்திவர்மன்