வியாழன், 15 அக்டோபர், 2015

மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும்.



1978 ல் ஆமதாபாத் மாவட்ட தி.மு.கழகச் செயலாளர் மறைந்த செந்தமிழ்ச் செல்வனின் அழைப்பில் அங்கு சென்று இலக்கியக் கூட்டங்களிலும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவிலும் பேசி விட்டு இனி அரசியலே வேண்டாம் என்று துறவு பூண்டு கரும்பளிங்கு /வண்ணப் பளிங்கு ஏற்றுமதியில் ஆறு கூட்டு -இரண்டு தனிஉரிமை நிறுவனங்கள் நடத்தி இழப்புகள் ஏற்பட்டு எந்தையார் இறப்புக்கு மீண்டும் புதுவை வந்து ஒதுங்கி இருந்த என்னை நியூ டைம்ஸ் ஒப்செர்வர் எம்.பி.ஜான் அவரது ஆங்கில வார ஏட்டுக்கு இணையசிரியனாக பொறுப்பு அளித்த போது தமிழக முன்னாள் அமைச்சர்கள் ஜி. .விசுவநாதன் , அழகு திருநாவுக்கரசு , எஸ்.ஆர்.இராதா ஆகியோர் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்பு துவக்கி அண்ணா தி.மு.கழகத்தை  துவக்கிய என்னை தஞ்சாவூரில் ஆளுநர் சென்னா  ரெட்டி, மூப்பனார் கலந்து கொண்ட விழாவுக்கு  பேச அழைத்து மீண்டும் அரசியல் சாக்கடையில் இறக்கி விட்டனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மன்றங்களின் கூட்டமைப்புக்கு கூட்டம் நடத்த    தடைகள் இருந்ததால் புதுவையில் நடத்தும் பொறுப்பு என்னிடம் தந்தனர் . புதுவை கம்பன் கலை அரங்கத்தில் 1994 மே அன்று நடந்த கூட்டத்தில் நான் பேசுகிறேன். என் இருக்கையில் என் தங்கை பத்மாவதி தேவகுமாரனின் மகள்கள் கனிமொழி-கயல்விழி உள்ளனர். நடிகர் பெயரிலான மன்றப் பொறுப்பு வேண்டாம் என்றதால் எனக்காக திராவிட இளைஞர் பேரவை என்று உருவாக்கி என்னை அமைப்பாளனாக  அறிமுகம் செய்தனர். இக்கூட்டமே 1978 முதல் எந்த அரசியலும் வேண்டாம் என்று துறவு பூண்டு இருந்த என்னை மீண்டும் அரசியலில் 1994 ல் தள்ளிய கூட்டமாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக