ஞாயிறு, 12 ஜூன், 2011

ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில்




கனடா நாட்டு பாராளுமன்றத்துக்கு 30 மே 2011 அன்று தேர்வு பெற்ற தமிழ்ப்பெண் ராதிகா சித்சபை ஈசன் கனடா நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழில் பேசிய செயல் உலகத் தமிழர்கள் உள்ளங்களில் மகிழ்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் 23 திசம்பர் 1981ல் பிறந்து 5 வயதில் கனடாவில் குடியேறிய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தையார் பணியிடத்தில் விபத்து காரணமாக ஊனமுற்றார்.நர்சிங் கல்வியை இதனால் பாதியில் நிறுத்திய இவரது தாய் கொடவுன் ஒன்றில் கடும் வேலைகளை செய்து இவரை படிக்க வைத்தார்.

டொரண்டோ பல்கலையில் முதலில் படித்தார்.அங்கு தமிழ் மாணவர் மன்றத் துணைத் தலைவியாக இருந்தார்.கார்லெடன் பல்கலையில் பி.காம் படித்து குயின்ஸ் பல்கலையில் தொழில் உறவுகளில் முதுகலை பட்டம் பெற்று 2004 ஆம் ஆண்டில் புதிய குடியரசுக்கட்சியில் உறுப்பினராகி ஸ்கார்ப்ர்ரோ-ரப் ரிவர் தொகுதியில் இருந்து 40 சதவிகித வாக்கு பெற்று பாராளுமன்றத்துக்கு தேர்வு பெற்ற ராதிகா தன் கன்னிப்பேச்சை கனடா பாராளுமன்றத்தில் தமிழில் நிகழ்த்தியதற்கு திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் தமிழ்மாமணி நந்திவர்மன் பாராட்டுகளை மடல் மூலம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக