திங்கள், 27 ஜூன், 2011

புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்

புதுவையில் ஏன் வளரவில்லை? 


 1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.

அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது.

காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம்.

புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது.

காமராசர் சந்திப்பு

பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.

எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று.

பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார்.

அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.

கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார்.

நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.

கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.

என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.

முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!  அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.  

அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக