admk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
admk லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!



அண்ணா உருவாக்கிய புதிய கோட்பாடு!

(நம்நாடு வார ஏட்டில் 10.11.1977 ல் நந்திவர்மன் எழுதியது)

வாக்காளர்கள் நல்ல தீர்ப்பு வழங்க தவறி விட்டாலும் அறிஞர்களும் வரலாற்று ஆசிரியர்களும் தி.மு. கழகத்திற்கு நற்சான்று நல்கத் தவறினாரிலர் கொள்கைச் சிறப்பால் குவலயத்தில் குன்றாப் புகழை குறைவில்லாமல் கொண்ட தி.மு.கழகத்தை - தென்னக அரசியல் கட்சிகள் பற்றிய எழுதிய James Watch... என்ற சுவீடன் நாட்டு ஸ்டாக்ஹோம் பல் கலைக்கழக அரசியல் விற்பன்னா "Faction & Front" என்ற நூலில் பெருமையோடு குறிப்பிட்டிருக்கிறார். அதே நேரத்தில் காட்டிக் கொடுத்த நடிகர் கட்சியைப் பற்றி எழுதுகையில் One - Man Show என்று வர்ணித்துள்ளார். ஒரு மனிதனே இணையாக நடிக்கப் பெண்ணில்லாமல் துணைப் பாத்திரங்களேற்க நடிகர் இல்லாமல் - வில்லனாக ஒரு முளைத்து அவனை வீழ்த்தும் காட்சி இல்லாமல் படம் முழுவதும் ஒருவரே காட்சி தந்தால் யாரால் ஏற்பதற்கு இயலும்? ஒரு வரும் காண விரும்பாரன்றோ! திரைப்படத்திலேயே ஒரு மனிதன் மட்டும் தோன்றுவது சரியாகாது எனில் அரசியல் கட்சியில் One - Man Show மக்களால் வெறுக்கப்படுமே தவிர வரவேற்கப்பட மாட்டாது.
காணச் சகிக்காத காட்சி One - Man Show திரையில்! இப்படிக் நாணத்தக்கதாக முடிவை மேற்சொன்ன நூலாசிரியர் One - Man Show என்று சொல்வது நாணத்தக்க ஒன்று - அந்தக் கட்சியில் உள்ளோர்க்கு!.
பேணத் தக்கதல்ல இந்த ஒரு மனித ஆதிக்கம்! எதிர் காலத்தில் இது மிகவும் பாதிக்கும் என்ற உணர்வு மெல்ல நடிகர் கட்சியிலே கூட முளைவிட்டுக் கொண்டிருக்கிறது. நியமனப்பொதுக் குழு -நினைத்தால் மாறும் மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள்! தேர்தலே நடத்தாமல் கட்சிப் பொறுப்பில் தன்னைத் தானே திணித்துக் கொண்ட நடிகர்! அவர் விரும்பினல் ‘தலைவர்களை‘ இறக்குமதி செய்து கொள்ள அவரே அவர்க்களித்துக் கொண்ட உரிமம் இவை கேளிக்குரியவை என்று தெரிந்தும் - ‘பச்சை‘யாகப் புரிந்தும் பதவி மேலுள்ள ஆசையால் ஒட்டிக்கொண்டிருப்போர் உதடுகளால் போற்றித் திருஅகவல் பாடிக் கொண்டிருந்தாலும் மனம் பொருமி உள்ளத்தால் திட்டிக்கொண்டிருக்கிறார்கள்! One - Man Show சுவை குன்றினல் அவை- சட்டப் பேரவையும்- காலியாகலாம்!
குறுகிய நோக்கங்கட்காக கோப தாபங்கட்காக- கொள்கை ஏதும் அறிவிக்காமலே தொடங்கப் பெற்ற நடிகர் கட்சி எப்படி நல்லறிவாளர் பாராட்டைப் பெற முடியும்? கொள்கை அறிவித்த பின்பு நடிகர் தந்த குழப்ப உரைகளைக் கேட்டு அறிஞர்கள் குறுநகையல்ல குலுங்கக் குலுங்கச் சிரிக்காமல் எப்படி இருந்திட முடியும்?
‘அண்ணா இசம் என்ற சொல்லை நடிகருக்கு முன்பாகவே புதுவை அ.தி.மு.க. தன் கொள்கைப் பிரகடனத்தில் கையாண்டது. 1973 மர்ச் 22ம் தேதிய இந்தியன் எக்ஸ்பிரஸ்8-ஆம் பக்கம் 1-ஆம் பத்தியில் தெளிவாக வெளியான கொள்கை அறிவிப்பு தனைப்பொருள் புரியமால் திருடியநடிகர் செப்டம்பரில் தன் கொள்கையாக அதனைப் பிரகடனப்படுத்திக் கொண்டார்? எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்- பாடியவன் பாட்டைக் கெடுத்தான் என்பது போல் நாட்டைக் கெடுக்க வந்த நடிகர் திருடிக்கொண்ட சொற்றொடராம் அண்ண இசத்திற்கு அளித்த சுய விளக்கம் அதனை கேலிக்குரியதாக்கி விட்டது ‘காரீயமும் வெள்ளீயமும் கலந்தது காந்தீயம்’ என்று கூட நடிகர் விளக்கம் நல்க முற்பட்டிருப்பார்! நல்லவேளை காந்தியம் தப்பிற்று. அண்ணா இசம் அகப்பட்டது. கம்யூனிசமும் கேப்ரி விசலிசமும் சோஷலிசமும் தனித்தனிப் பிழிந்து வடித்தொன்றய்க் கூட்டிய சாறே, அண்ண இசமேன நடிகர் உளறி வைத்தார்!
அண்ணாவின் பொருளாதாரக் கொள்கை என்ன என்பதை முதலில் குறிப்பிட்ட அரசியல் அறிஞர் James Watch தமது நூலின் அழகுற வடித்துள்ளார்.
அண்ணா சமுதாயத்தை இரண்டாகப் பிரிக்காமல் மூன்றாகப் பிரிப்பதாக அந்த அறிஞர் கூறுகிறார். முத்தமிழ் வித்தகர் என்பதால் அண்ணா மூன்றாகப் பிரித்தாரிலர். முப்பால் கற்றவர் என்பதாலும் அன்று, வலது-இடது என்று மட்டும் அரசியல் இயக்கங்களைப்பகுப்பதில்லை. (Centrist) நடுவிலுள்ளோர் என்றும் பகுப்பதுண்டு. தி.மு. கழகம் ஒரு Centrist Party வலதுசாரி கட்சியோ - இடதுசாரியோ அல்ல. நடுவழி நடக்கும் நல்லதோர் இயக்கம். நடிகருடைய கட்சிபோல் கெடுவறழியில் நடக்கும் கீழோரின் கூடாரமன்று தி.மு. கழகம் எனவே அரசியலில் எப்படி நடுவழியோ அவ்வாறே பொருளாதாரத்திலும் இடைவழியே தி.மு. கழகம் ஏற்ற வழி. எனவே தான் பேரறிஞர் அண்ணா முதலாளி-தொழிலாளி என்ற பிரிவில் சமுதாயத்தை அடக்கமால் இடைப்பட்ட பிரிவு ஒன்றைக் குறிப்பிட்டார்.
மொழியில் இசையில் பண்பாட்டில் இரவல் கருத்துக்களை அண்ணா விரும்பாததைப் போன்றே பொருளியற்றுறையிலும் இறக்குமதி செய்யப்பட்ட கோட்பாடுகள் கூடாது என்னும் கொள்கையை அண்ண கொண்டிருந்தார்.
மேற்கு-கிழக்கு என வல்லரசுகள் உலகை இருகூறாக்கிவைத்தற்கெதிராக நேரு போன்றோர் ‘நடுநிலை’ கூட்டுச் சேராமை போன்ற கோட்பாடுகளை உருவர்க்கினர். நட்பு பகை இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் உள்ளோரை "நொதுமலர்" என்பது தமிழ் மரபு-அதைப்போல் மேற்கு-கிழக்கு வல்லரசுகட்கான போட்டியில் யாருக்கும் நண்பனாகவோ பகைவனாகவோ இல்லாமல் "நொதுமலர்" போல் இந்நாடு நடக்கலாயிற்றன்றோ!
அதுபோன்றே காப்பிடலிசத்தைக் காப்பி அடிக்காமலும்-கம்யூனிசத்தை இறக்கு மதி செய்யாமலும் "இரவல் பொருளியற் கோட்பாடு" வேண்டாம் என்று புதிய விளக்கம் புகன்றவர் அண்ணா.
முதலாளி-தொழிலாளி என்ற இருபிரிவோடு "நுகர்வோர்" என்ற இடைப்பிரிவு ஒன்றுண்டு என உணர்த்தினார். முதலாளி தொழில் தொடங்குவது நுகர்வோர் பயன் கருதியே. நுகர்வோர் தேவைகட்குப் பொருட்களை உற்பத்தி செய்யவே தொழிலாளி அமர்த்தப்படுகின்றான். எனவே நடுத்தர வர்க்கமானது நுகர்வோரின் பிரதிநிதியாகிறது. முதலாளி வர்க்கமும் நடுத்தர வர்ககமும் நடுத்தர வர்க்கமான நுகர்வோர் (Consumer) நலனுக்காகவே ஒன்றுபட்டுள்ளன. நுகர்வோர் என்னும் நடுத்தர வர்க்கத்தார் மனிதாபிமான அடிப்படையில் தொழிலாளி வர்க்கத்தோடு தான் தோழமை பூண்டிருக்க வேண்டும் என்றும் அண்ண திட்டவட்டமாகக் கூறியுள்ளார். பாட்டாளிக்குக் கூட்டர்ளியாகவே நடுத்தர வர்க்கம் இருக்கவேண்டும் என்பதே அண்ணாவின் கட்டளை. மனிதாபிமான அடிப்படையில் இந்தச் சார்பு தேவை என்பது அறிஞரின் எண்ணம்.
கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்காக எத்தகைய பங்குப் பணியை மேற்கொள்ளவேண்டும் எனக் கார்ல்மார்க்ஸ் கட்டளை இட்டுச் சென்றாரோ அத்தகு பணிகளை செவ்வனே செய்து முடிக்கத் தக்கார் நடுத்தரவர்கத்தினரே என்பது பேரறிஞரின் துணிபு.
கானா நாட்டு மறைந்த அதிபர் நிக்ருமா தன் நாட்டுப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி புதிய பொருளாதாரக் கோட்பாடு ஒன்றை உருவாக்கித் தருக என, கானா நாட்டுப் பொருளியற் பேராசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார். இரவல் பொருளாதாரக் கொள்கை வேண்டாம் என்பதாலேயே புதிய விஞ்ஞான சோஷலிசத்தினை உருவாக்கித் தருமாறு நிக்ரூமா கேட்டார். "நிக்ருமா இசம்" அரும்பும் முன்னரே ஆட்சி இழந்தார் என்பது வரலாறு.
அண்ணாவின் பொருளியற்கோட்பாடு பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி ஆய்ந்தறிந்த அறிஞர்களிடம் பொறுப்புத் தரப்படுமானல் புதிய சித்தாந்தமாகவே புவியில் மலரக் கூடும் காலம் கனியும் போது தி.மு கழகம் இந்தக் காரியத்தை ஆற்றிடும்.
(Fabian Socialism) ஃபேபியன் சோஷலிசம்- இட்லரின் நேஷனல் சோஷலிசம் -மாவோ இசம்-மார்க்சிசம்-இலெனிசம்-டிராட்ஸ்கி இசம்-டிட்டோ இசம்-நிக்ரூமா இசம்-ஜனநாயக சோஷவிசம்-என்றெல்லாம் ‘சோஷலிசம்’ பல்வேறு உருவெடுத்து விட்டது. பலரும் தத்தமது மனப்போக்கிற்கு ஏற்ப சோஷலிசத்தைத் திரித்துத் தங்கள் கருத்துகளை அந்த "லேபிளில்" விற்க ஆரம்பித்துவிட்டனர்.
சோஷலிசம் என்ற சொல் எந்த அளவு சீர்கேடு அடைந்து விட்டது என்றல் சாய்பாபாவினó மத போதனையை Spiritual Socialism ஆத் மார்த்த சோஷலிசம் என்று ‘பிளிட்ஸ்’ ஏடு கூறுமளவு சீர் கெட்டுவிட்டது.
பொதுத்துறையில் போட்ட பணம் பயன் தராமல் போகிறது. ஒரு வழிப் பாதையாகவே முதலீடு பொதுத்துறையில் முடங்கிப் போகிறது. பயன் வெறுமையாக அமைகிறது என்பதால் அண்ணா காங்கிரசாரின் கொள்கை ‘போஸ்ட் ஆபீஸ்சோஷலிசம்’ என்று கிண்டல் செய்தார். காந்தியாரின் தர்மதர்த்தா சோஷலிசத்திலிருந்து தபால் ஆபீஸ் சோஷலிசம் என்ற அளவு காங்கிரஸ் முன்னேறி விட்டது என்று தான் கேலி செய்ய வேண்டும்.
இத்துணை திரிபு வாதங்கட்கிடையே தெளிந்த கண்ணோட்டத்துடன் தி.மு. கழகத்திற்கெனத் தனியான பொருளியற் கொள்கையை அண்ண போதித்துச் சென்றுள்ளார். அவர் தொட்டுச் சென்ற துறையை அறிஞர் பெருமக்கள் துவக்கினால்-விளக்கினால் விட்டுச்சென்ற இடத்திலிருந்து விரைந்து முன்னேறி முழுமை பெறமுடியும்.
போலிகளால் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற இயலாது. பொருளாதாரம் தெரியாத புரட்டர்களால் புதிய தித்தாந்தம் உருவாக முடியாது. உலகத் தலைவராக வேண்டிய அண்ண நன்றி கெட்ட தமிழனுக்காகத் தன் ஓயா உழைப்பை நல்கித் தலை சாயாதிருந்தால் "பொருளியற்கோட்பாட்டை" உலகினுக்கு மார்க்சிற்குப் பின்னல் அளித்த மாமேதை என்று புகழை ஈட்டியிருப்பார்!
காலம் நம்மிடமிருந்து அவரைக் கவர்ந்து சென்ற காரணத்தால் கலைஞர் தம் சுட்டுவிரல் அசைவிற்குக் காத்திருக்கும் இலட்சோப லட்சம் தமிழர் தம் பேரியக்கமாம் தி.மு. கழகமே அந்தப் பணியை நிறைவேற்றி ஆக வேண்டியுள்ளது.

உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!


உலகினுக்கே வழிகாட்டும் ஒளி விளக்கு!

(கழகக்குரல் வார ஏட்டில் 03.10.1976ல் நந்திவர்மன் எழுதியது)


புதைச் சேற்றில் அகப்பட்ட மூங்கையெனத் தவித்த புகழார்ந்த தமிழ்க் குலத்தின் நிலை கண்டு கலுழ்ந்த அண்ணா,

கொள்கை - குறிக்கோள் இன்மையே

இன்றுள்ள நிலைமைக்குக் காரணம்

என்றார்.

கற்றுத் தேர்ந்த வித்தகர் பலரைக் காசினிக்கு அளித்த தமிழ் நிலத்தில் மட்டுமல்ல - உலகெங்குமே நிலவும் குழப்பத்திற்கும், அமைதியின்மைக்கும் கொள்கையின்மையே காரணமாக அமைந்துவிட்ட சூழலில் - சுழலில் நம் தலைமுறை சிக்கிக் கிடக்கிறது!

காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட நாடுகள், "காரல் மார்க்சின் கம்யூனிசமா? மேலை நாட்டு முதலாளித்துவமா?' என்ற கேள்விக்கிடையே வளரத் தொடங்கின.

"தென் கிழக்காசிய அரசியலில், அரசியல் கட்சிகளும் - அவற்றின் தலைவர்களும் மக்களைச் சரிவர இயக்க முடியாமல் போனமைக்குக் கொள்கை அடிப்படை இன்மையே காரணம்" என அரசியல் வித்தகர்கள் கூறுகின்றனர்.

"தனி நபர் விருப்பு - வெறுப்புக்கேற்ப ஏற்படும் கட்சிகளின் ஆயுள், குறுகிய காலத்தினதே" என்பதற்கு எடுத்துக் காட்டுக்கள் கிடைக்கின்றன. அரசியல் வரலாற்றில்!

நம்மிடமிருந்து பிரிந்தவர்கள் கட்சி இதற்கு நல்லதோர் உதாரணமாகும்.

ஆப்பிரிக்க நாடுகளிலும் இதே நிலைமை தான், "கவர்ச்சிகரமான சொல்லடுக்குகள், வலுவான அரசியல் பொருளியற் கொள்கைகளாக ஆகிவிடா என்பதற்கு அங்கு நிறைய எடுத்துக்காட்டுக்கள் அகப்படுகின்றன.

அண்ணாவே சொல்லி இருக்கின்றார்- "கொக்கோ உற்பத்தியைப் பெருக்குவோம்" என்று முழங்கிய நிக்ரூமா, அதற்கு ஏற்ற சந்தைகளை உருவாக்கத் தவறியது பற்றியும், அதனால் உற்பத்தி பெருகியும் 'கானா' நாட்டுப் பொருளாதாரம் சீர்குலைத்தது பற்றியும்.

கொள்கை இல்லாமல் சீர்குலையும் நாடுகள், கிழக்கு அல்லது மேற்கு என்ற இரு வல்லரசு முகாம்களில் விழுகின்றன -- வீழ்ச்சியுறுகின்றன. 'இரவல்' பொருளாதார அரசியல் கொள்கைகளில் சிக்குகின்றன.

கருத்துக்கள் பிறப்பதற்குக் கருத்தடை ஏதுமில்லை.

கருவானவை உருவாவதும் உண்டு -- கருவிலேயே கருகிப் போவதும் உண்டு.

கருத்துக்களும் அவ்வாறே காலங் கடந்தும் காசினியில் நிலைப்பதும் உண்டு -- கண்முன்பே காற்றாகிப் போவதும் உண்டு.

காலம் உள்ளளவும் ஞாலம் உள்ளளவும், ஒரே கருத்தே ஏற்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. காலச் சுழற்சிக்கேற்பக் கருத்து வளர்ச்சியும்-மலர்ச்சியும் ஏற்கப்பட்டாகல் வேண்டும். இது, "தீது" என்றோ, "புதுக் கருத்து" உதயமாவது பேதைமை என்றோ அறிவுடையார் கூறார்.

அறிவு, தேங்கிய குட்டை நீரன்று -- தெளிந்த ஆற்று நீரோட்டம், ஊற்று நீரின் புதுப்புனலோட்டம்.

பிரெஞ்சுப் புரட்சி வெடித்ததன் பயனாய் அகிலம் அறிந்த அரசியல் நெறிகள் -- இரஷ்யப் புரட்சி உருவானதன் காரணமாக உலகம் உணர்ந்த உயரிய கருத்துக்கள் -- இவைகளோடு மனிதகுலம் பூண்டற்றுப் போக வேண்டுமா?

இன்னொரு புரட்சியோ -- புதுக் கருத்தோ -- பழைமைக்கு எதிரான அறிவின் பகுத்தறிவு ஒளியோ பிறக்காது என்று எவர்தான் பேசிட முடியும்?

"கொள்கை" அடிப்படையை "இரவல் சரக்கு" களாலே அமைக்க விரும்பாமல் கானா நாட்டு நிக்ரூமா, பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தி, புதியதொரு விஞ்ஞான சோஷலிசத்தை -- பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டில்லாமல், ஒழுக்க முதல் வாதத்தை அளவுகோலாக்கிச் சமூகப் பாகுபாடுகள் செய்யப் போவதாக -- உருவாக்கப் போவதாக உலகினுக்கு அறிவித்தார்.

கனவு கனவாகவே முடிந்திருக்கலாம், ஆனால், அந்த உந்துதலின் பின்னுள்ள உணர்வு, 'கொள்கை அடிப்படையை' வலுவாக்க வேண்டும் என்பதேயல்லாமல், 'கொள்கையே தேவையில்லை' எனக் கோமாளி அரசியல் நடத்தும் இங்குள்ள சிலரைப் போன்றதல்ல.

இந்த நிலைமைகள் எல்லாம் இல்லாமல், இன்பத் தமிழகத்திற்கு ஏற்றமளிக்கும் அரசியல், பொருளியல் கொள்கைகளை அதன் அடிப்படையில் அமைந்த அரசியலை பேரறிஞர் அண்ணா அவர்கள் உருவாக்கி விட்டார்.

அண்ணா உலகத் தலவைராக வேண்டியவர் காலம் அவரை நம்மிடமிருந்து பிரிக்காமல் இருந்திருந்தால்.

அத்தகு உயரிய இலக்கினை -- அண்ணா மலைப் பல்கலைப் கழகப் பேருரையில் பேரறிஞர் அண்ணா எத்துணை அழகுறத் தெரிவிக்கின்றார் தெரியுமா?

கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத கஞ்ச நெஞ்சனின் இதயமில்லாக் கடும் பார்வை விழாத தேவைகளே இல்லாத குற்றங்களே இல்லாத பொய்மையே இல்லாத பழிப்புரையே கேளாத உலகம்.

உடலாலும், உள்ளத்தாலும் பிணி வயப்படாத இனம் எங்கே வாணாள் நீடிக்குமோ எங்கே அச்சம் மடியுமோ எங்கே இன்பம் சுரக்குமோ எங்கே அன்பு ஆழமாகுமோ அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கிக் குடிசையிலே வாழுகின்ற மனிதனை இட்டுச் செல்லத் துடித்தாரே அண்ணா.

குவலயமே கொள்ளத்தக்க கொள்கை குறிக்கோள் அல்லவா இது.

இத்தகு கொள்கையை ஏந்திய தி.மு. கழகம், அத்தகு வலிவும் பொலிவும் வையத்திற்கே தேவைப்படும் தத்துவமும் கொண்டது என்பதனை அரசியல் வரலாற்றாசிரியர்கள் எழுதும் நாள் தொலைவில் இல்லை.





திங்கள், 27 ஜூன், 2011

புதுவையில் உதயமான அண்ணா திமுகழகம்

புதுவையில் ஏன் வளரவில்லை? 


 1972ல்தோன்றிய அ.இ.அ.தி.மு.க துவையில் மட்டும் வளராமல் இருப்ப தன் காரணம் என்ன? திராவிடப்பேரவை பொதுச்செயலாளர் நந்திவர்மன் பழைய வரலாற்றை நினைவூட்டினார்.

அண்ணா தி.மு.கழகம் உதயமானபோது செயலலிதா அதில் இல்லை. அண்ணா தி.மு.கழகம் புதுச்சேரியில் தான் உதயமானது என்ற வரலாறும் அவருக்குத் தெரியாது.1969ல் பரூக் மரக்காயர் தலைமையில் தி.மு.கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைச்சரவை நடத்தின. காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.கழக முதல்வராக இருப்பதா? என பழைய தி.மு.கவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 1967ல் அறிஞர் அண்ணா தமிழக முதல்வரான பிறகு 1969ல் புதுவையில் ஆட்சியை கைப்பற்ற வியூகம் வகுக்கப்பட்டது. அண்ணா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஏ. கோவிந்தசாமி அடிக்கடி புதுவை வருவார். அவரது உறவினர்கள் நேருவீதி – காந்தி வீதி சந்திப்பு அருகில் இன்றும் நாட்டு மருந்து கடை நடத்தி வருகிறார்கள். அவர்கள் வீடு அம்பலத்தாடுமய்யர் மடத்து வீதியில் இருக்கிறது. புதுவை வரும் தமிழக அமைச்சர் ஏ. கோவிந்தசாமி அவரது உறவினரான கிருஷ்ணராஜ் மூலமும் பழைய தி.மு.கழகத்தவரும் பின்பு அமைச்சராக இருந்தவருமான பெருமாள்ராஜா மூலமும் காங்கிரசிலிருந்த எதுவார்குபேர் அவர்களை தி.மு.கழகத்துக்குள் கொண்டு வந்தனர். பட்டுக்கோட்டை குமாரசாமி நவமணி நாளிதழ் ஆசிரியர். அவர் மூலமும் சென்னை மேயராக இருந்த மைனர் மோசசு மூலமும் பரூக் மரக்காயர் தி.மு.கழகத்துக்குள் சேர்ந்தார். அவரை தி.மு.கழகத்தில் அடிப்படை உறுப்பினராக்க எம்.ஏ.சண்முகம் வட்டச் செயலாளராக இருந்த வட்டக் கழகம் ஒப்புக்கொள்ளவில்லை. புதுவை வட்ட தி;.மு.க தென்னாற்க்காடு மாவட்டச் செயலாளர் குறிஞ்சிப்பாடி இரா. சாம்பசிவத்தின் கீழ் வட்டக் கழகமாக இருந்தது.

காரைக்கால் வட்டக் கழகம் முன்னாள் முதல்வர் எஸ். ராமசாமியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தஞ்சை மாவட்டச் செயலாளராக மன்னை நாராயணசாமி இருந்தார். புதுவையில் உறுப்பினராகாத ஒருவர் திமுக அரசின் முதல் அமைச்சர். அப்போது மத்திய அரசு சம்பள விகிதம் புதுச்சேரியில் அமுலானது. தமிழ் ஆசிரியர்களை விட இந்தி ஆசிரியர்க்கு கூடுதல் சம்பளம். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் பேரணியில் பங்கேற்று நான் இதை கண்டித்தேன். மாநில சுயாட்சிக்கும் புதுவைக்கும் சம்மந்தமில்லை என சட்டமன்றத்திலேயே பேசி பரூக் மரக்காயர் கண்டனத்துக்கு ஆளானார். புதுவை பல்கலைக்கழகத்துக்கு அரவிந்தர் பெயர் சு10ட்ட முனைந்தும் எதிர்ப்பை சம்பாதித்தார். உள்துறை அமைச்சராக இருந்த இராமசாமியின் இலாக்கா பறித்தும் எதிர்ப்புக்கு ஆளானார். எம்.ஏ.சண்முகம் தலைமையில் மாவட்ட திமுக கழகமாக அங்கீகரிக்கப்பட்டிருந்தது கட்சி! கட்சி ஆட்சியை கடுமையாக விமரிசித்தது. இதனால் மாவட்டக் கழகத்தை கலைத்து பரூக் மரக்காயரை மாநில அமைப்பாளராக்கினார்கள். அந்தச் சு10ழ்நிலையில் தமிழ்நாட்டில் திமுகழகம் உடையப்போகிறதுää அண்ணா பெயரில் கட்சி உருவாகும் என மாணவர் தி.மு.க செயலாளரான என்னிடம் முன்கூட்டியே கூறியவர் எங்கள் குடும்ப நண்பர் துணை நிலை ஆளுநர் பி.டி.ஜாட்டி ஆவார். எனவே எம்ஜிஆருக்கும் முன்பாக புதுவையில் அண்ணா பெயரில் கட்சி தொடங்குவது பற்றி புதுவைக் கடற்கரையில் கலைக்கப்பட்ட மாவட்டக் கழகப் பிரதிநிதிகள்ää சிவலிங்கம்ää செல்வம்ää இந்து நடராசன்ää அலைஓசை வைத்தியநாதன்ää முத்தையன்ää துரை அரிராமன் உள்ளிட்டோருடன் மாணவர் தி.மு.கழக மாநிலச் செயலாளர் ஆகிய நானும் விவாதித்தோம் 17 நாட்கள் இந்த விவாதம் நடந்தது. 42 கிளைக்கழகச் செயலாளர்களை நாங்கள் அணுகினோம்.

புதுவைப் பதிப்பு நாள் ஏடுகள் இல்லாத காலம். தந்தி மூலமே இந்து நடராசனும் சுதேசமித்திரன் விசயபாரதியும் நவமணி இராசமாணிக்கமும் செய்தியை அனுப்பிய காலம். அண்ணாயிஸ்ட் தி.மு.கழகம் என்ற புதுக்கட்சி துவக்க அறிவிப்பை நானும் (நந்திவர்மனும்) சிவலிங்கமும் செல்வமும் வெளியிட்டோம். தமிழ்நாட்டில் அனகாபுத்தூர் இராமலிங்கம் அண்ணா திமுகழகப் பெயரை இரண்டு நாள் கழித்துச் சொன்னார். ஆக செப்18-1972ல் தினமணி முதல்பக்கச் செய்தியாக எம்.ஜி.ஆர் ஆதரவாளர் தமிழகம் புதுவையில் கட்சி அமைப்பு என ஒரே செய்தியாக வெளிவந்தது. அப்போது அகில இந்திய வானொலி 7.15 இரவு டில்லியில் இருந்து வெளியான செய்தி அறிக்கையில் 42 தி.மு.கழகக் கிளைகள் உடனடியாக அண்ணா திமுகவில் இணைந்த செய்தியை ஆல் இன்டியா ரேடியோவில் பணியாற்றிய ராசாவும் குழந்தைவேலும் ஒலிபரப்பச் செய்தார்கள். திமுகழகச் சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேரில் உள்துறை அமைச்சர் இராமசாமிää பொதுப்பணி அமைச்சர் தெ. இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் அண்ணா திமுகவுக்கு துவங்கிய உடனே இணையத் தயாராக இருந்தார்கள். ராமசாமியின் நெருங்கிய நண்பனான நான் முன்கூட்டியே அண்ணா திமுகவுக்கு அனுப்பப்பட்டேன். திமுகழக மாவட்டப் பிரதிநிதி சிவலிங்கத்தை மாநில அமைப்பாளராக்கிவிட்டு அண்ணா திமுகழக தமிழ்நாடு புதுவை மாணவரணியை ஏற்பது என் திட்டமாக இருந்து எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளராக நா. மணிமாறன் இருந்தார். பேரொளி பத்திரிகையும் நடத்தினார். காங்கிரஸ்காரர் ஒருவர் தி.மு.க அமைச்சரவைக்கு தலைமையா? என்ற கோபத்தில் பிறந்த அண்ணா தி.மு.கழகம் புதுவை முதல்வர் மீது அடுக்கடுக்காய் புகார்களைக் கூறியது. துணை நிலை ஆளுநர் பி.டி.ஜட்டியிடமும் சேத்திலாலிடமும் ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டது.

காமராசர் சந்திப்பு

பரூக் அமைச்சரவை மீது விசாரணைக் கமிஷன் அமைக்க ஒரு நாள் முழு அடைப்பு நடத்த திட்டமிட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் நாடினேன். பழைய காங்கிரஸ் தலைவராக இருந்த ஜீவரத்தின உடையார்” காமராசர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்” நாங்கள் முழு அடைப்பில் பங்கேற்கிறோம் என்று சொன்னார் சென்னை சென்று புதுடெல்லியில் இருந்து வெளிவரும் ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் செய்தியாளர் வி.எஸ்.மணியத்தை அழைத்துக்கொண்டு திருமலைப்பிள்ளை சாலை-திநகரில் உள்ள காமராசர் இல்லத்தில் 11.11.1972 அன்று காமராசரை சந்தித்துப் பேசினேன். இது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் புதுவை அண்ணா தி.மு.கழக தலைவர் காமராசரை சந்தித்தார் என்று 12.11.1972 ல் செய்தியாக வெளிவந்தது. அன்று மாலையே காமராசரை சந்திக்க நாங்கள் யாரையும் அனுப்பவில்லை என அதிமுக நாளேடான தென்னகத்தில் அறிக்கை தலைமையால் வெளியிடப்பட்டது. தலைமைக் கழக அவசர அழைப்பினை ஏற்று சென்னை சென்று லாயிட்சு சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் எம்ஜிஆரை சந்தித்தேன். காமராசரை கடுமையாக விமர்சித்த எம்.ஜி.ஆர் தன்னைச் சுட எம்.ஆர்.ராதாவை ஏவிய ஒருவரை நீ போய் பார்ப்பதா? என்று என்னை திட்டினார். புதுவை மாநில அதிமுகழக நிலைமையை மாநில அமைப்பாளரான நான் சொல்லாவிட்டால் வேறு எப்படி அண்ணே கீழ்மட்ட நிலை தெரியும் என நான் சொன்னதற்கு “என்னிடம் குறுக்கு கேள்வி கேட்கும் வக்கீல்கள் எனக்குத் தேவையில்லை என்று சாடினார். நான் மௌனமாக தலை குனிந்து உட்கார்ந்து இருந்தேன். கோபம் தணிந்த எம்.ஜி.ஆர் சரி! சரி தலைமை அனுமதி இன்றி காமராசரை சந்தித்தற்கு வருத்தம் தெரிவித்து எழுதி தருமாறு சொன்னார். அவ்வாறே செய்தேன். ஏடுகளில் காமராசர் சந்திப்பு பற்றி மட்டுமே செய்தி வந்திருந்தது. மகாத்மாகாந்தி மகனுக்கும் இராஜாஜி மகளுக்கும் பிறந்த நண்பர் இராஜ்மோகன் காந்தி மூலம் ராஜாஜியை நான் சந்தித்திருந்தேன். புதுவை பரூக் அரசுக்கு எதிரான ஆதரவை திரட்டவே இந்தச் சந்திப்புகள்.

எம்.ஜி.ஆர் இருந்த அறையை விட்டு வெளியே வந்த என்னை வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஜேப்பியார்ää வழக்கறிஞர் பி.டி.சரசுவதிää ஆலந்தூர் மோகனரங்கன் ஆகியோர் ஆறுதல் கூறினர். நீங்கள் அண்ணன் எதிரே உட்கார்ந்திருக்கக் கூடாது! வளரவேண்டிய இளைஞர் என்பதால் என் அறிவுரை என்றார் ஆலந்தூர் மோகனரங்கன். புதுவையில் குபேர் வீட்டுச் சோபாவில் நமக்க இணையாக ரிக்ஷா ஓட்டுபவரும் உட்காhந்திருக்கும் பிரெஞ்சு சமத்துவம் நினைவுக்கு வந்தது. எம்.ஜி.ஆர்க்கு என்மீது கசப்பு ஏற்பட இந்தச் சம்பவம் காரணமாயிற்று.

பெரியவர் நெடுங்காடு ப.சண்முகம் அப்போது எதிர்க்கட்சித்தலைவர். காங்கிரசில் 10 உறுப்பினர்கள் இருந்தார்கள். திமுகவில் இருந்து இராமசாமி - இராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேர் வெளிவந்தால் ஆட்சி கவிழும். 6 பேர்கள் வெளியே வருவார்கள் அவர்கள் பெயர் அறிவிக்கப்படும் என தினமணியில் பேட்டி அளித்த நான் ஆளுநரைச் சந்தித்தேன். சுபாநாயகர் செல்வராசை சந்தித்து சட்டமன்றத்தை கூட்டுமாறு கேட்டிருந்தேன்.

தமிழ்நாட்டில் அண்ணா திமுகவுடன் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி புதுவை திமுக கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்று இருந்தது. மக்கள் தலைவர் வ. சுப்பையா அமைச்சர். டாக்டர் என்.ரங்கநாதனும் குருசாமியும் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் பரூக் அரசை விட்டு வெளியேறி இருந்தால் எம்.ஜி.ஆர் கட்சி துவக்கியவுடனே புதுவையில் ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் புதுவையில் அண்ணா தி.மு.கழக ஆட்சி வர முடியாமல் போனதற்கு கல்யாணசுந்தரம் காரணம். மக்கள் தலைவர் வ. சுப்பையா எந்தையார் மீதும் என் மீதும் மிகுந்த அன்புடையவர் ஆவர். மாஸ்கோ மருத்துவமனையில் இருந்த போது நீங்கள் மட்டும் திராவிடக் கம்யூனிஸ்ட் கட்சி என்று கட்சி நடத்தி இருந்தால் உங்கள் தலைமை ஏற்றுச் செயல்பட்டிருப்பேன் என நான் மடல் எழுதியதும் பழங்கதை. திமுககழக – கம்யூனிஸ்ட் கூட்டணி அமைச்சரவையில் வ. சுப்பையா இருந்தார். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் முழுநேர ஆலோசகர்களாக கலியாணசுந்தரமும் பாலதண்டாயுதமும் இருந்தார்கள். சுப்பையா இல்லத்தில் என் தலைமையில் சிவலிங்கம் செல்வம் துரை. அரிராமன்ää புலவர் கந்தக் கண்ணன் எம்ஜிஆர் மன்றச் செயலாளர் மணிமாறன் ஆகியோர் கலியாணசுந்தரத்தைச் சந்தித்து தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் கூட்டு புதுவையில் திமுகவுடன் கூட்டணி என்று இரட்டை நிலைப்பாட்டை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எடுப்பது சரி அல்ல என வாதாடினோம். சுப்பையாவின் தனிச் செயலாளரான ஜிம்மிராபர்ட்ஸ் இந்தச் சந்திப்புக்கு சாட்சியாவார். 3 உறுப்பினர் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதுவையில் திமுகழகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தால் திமுகவில் இருந்து அண்ணா திமுகவுக்கு வரத் தயாராக இருந்த ராமசாமிää ராமச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரும் ப. சண்முகம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அவர் கிழிருந்த 10 காங்கிரஸ் உறுப்பினர்களும் கூடி கூட்டணி அமைச்சரவை உருவாகி இருக்கும். அண்ணா திமுகழகம் துவங்கிய இரண்டே மாதத்தில் புதுவையில் ஆட்சியை பிடித்து இருக்கும். ஆனால் தி இந்து நாளேடு வழியாக கம்யூனிஸ்ட் தலைவர் கலியாணசுந்தரம் சொன்னார் : “தமிழகமும் புதுவையும் வேறு வேறு மாநிலங்கள். தமிழகத்தில் அண்ணா திமுகவுடன் உள்ளோம். புதுவையில் திமுகவுடன் இருக்கிறோம் இதில் தவறில்லை என்றார்.

அண்ணா திமுகழக அமைப்பாளரான நான் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு வாயிலாக பதில் அளித்தேன். புதுவையில் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அந்தஸ்தே கொண்டது. மாநில தகுதி இல்லாதது. எனவே தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் ஒரு மாவட்டமாக உள்ள புதுவை அண்ணா திமுக அணிக்கே வர வேண்டுமென அறிக்கை விட்டேன்.

கம்யூனிஸ்டுகளுக்கு கோபம் கொப்பளித்தது. அப்போதைய எம்எல்ஏ டாக்டர். ரங்கநாதன் நானும் (நந்திவர்மனும்) சில வெள்ளைக்காரர்களும் இருக்கும் படத்தை எம்ஜிஆரிடம் காட்டி நந்திவர்மன் ஒரு அமெரிக்க உளவாளி என வத்தி வைத்தார். இதை நம்பிய எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து 3 மாதத்துக்குள் நந்திவர்மனை அமைப்பாளர் பொறுப்பில் இருந்து சொந்த அலுவல் காரணமாக சஸ்பெண்ட் செய்து அறிவிப்பை 26.12.1972 அன்று வெளியிட்டார்.

நந்திவர்மன் ஆகிய நான் காமராசரை சந்தித்து இருந்ததால் பழைய காங்கிரஸ் நாளேடு இந்த சஸ்பெண்டை கண்டித்து தலையங்கம் எழுதியது. திமுகழகத்தின் வார ஏடான மாலைமணி கண்டித்தது. பம்பாயிலிருந்து வெளிவந்த கரண்ட வார ஏடும் புதுடெல்லியில் இருந்து வெளிவந்த ஸ்டேட்ஸ்மென் நாளேடும் இது பற்றி கட்டுரைகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தியின் மகனுக்கும் இராஜாஜியின் மகளுக்கும் பிறந்த ராஜ்மோகன் காந்தி நடத்தி வந்த மாரல் ரீ-ஆர்மமெண்ட் அமைப்புக்கு புதுவை மேயர் குபேர் மூலம் மாநகராட்சி வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வரவேற்பில் கலந்து கொண்ட அயல்நாட்டவருடன் நான் (நந்திவர்மன்) இருக்கும் படத்தை காட்டி அமெரிக்க உளவாளி முத்திரை குத்தினார்கள்.

கோவலனை விசாரிக்காமல் கொலைக்களத்துக்கு அனுப்பிய பாண்டிய நெடுங்செழியன் போல விசாரிக்காமலே அண்ணா திமுக ஆட்சி அமைக்க பாடுபட்ட நான் தண்டிக்கப்பட்டேன். இலாயிட்சு சாலையில் நான் நடந்து வந்ததும் அவ்வழியாக வந்த முரசொலிமாறன் என்னை அழைத்துச் சென்று கலைஞரிடம் விட்டதும்ää மீண்டும் கழகம் வர கலைஞர் அழைப்பு விட்டதும் புதுவை அண்ணா திமுகழகம் - திமுகழகத்தின் இணைந்த செய்தியை முரசொலி வெளியிட்டதும் பழங்கதை.

என்னை நீக்கிய பிறகு எம்ஜிஆர் ஏடுகளில் எதிர்கொண்ட விமர்சனங்களால் புதுவையை சேர்ந்த யாரையும் அமைப்பாளராக்காமல் சினிமா டைரக்டர் கோபாலகிருஷ்ணனை ஆறுமாதமும் அனகாபுத்தூர் ராமலிங்கத்தை ஆறுமாதமும் டெபுடேஷனில் புதுவைக்கு அனுப்பி அமைப்பாளராக செயல்படவிட்டது 1974 தேர்தலுக்கு முன் நடந்த நிகழ்வுகள்.

முதற்கோணல் முற்றும் கோணல் ஆனது!  அண்ணா திமுக தோள் மீதேறி கம்யூனிஸ்ட் முதல்வராகலாம் என கணக்குப் போட்டு என்னை வெளியேற்றினார்கள். அன்று தவறிழைத்த அதிமுக தலைமை புதுவையில் தகுதி வாய்ந்த முதல் அமைச்சர் வேட்பாளரை இன்றுவர உருவாக்காததால் அண்ணா திமுகவை ஆட்சிக்கு வரக்கூடிய கட்சியாகவே மக்கள் கருதவில்லை.  

அண்ணா திமுக பெயர் அறிவித்து கொள்கை அறிவித்து சட்டதிட்டம் வகுத்துக் கொடுத்த என்மீது அமெரிக்க உளவாளி என அபாண்டம் சுமத்திய கட்சித் தலைவிக்கு கட்சி துவக்கும் போது உடனிருந்தால்தானே பழைய வரலாறு தெரியும். இவ்வாறு திராவிடப்பேரவை பொதுச் செயலாளர் நந்திவர்மன் கூறியுள்ளார்.