வெள்ளி, 3 ஜூன், 2011

அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க


1974 புதுவை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இலாசுப்பேட்டையில் முடிந்த பின் அந்தத தேர்தலுக்காக பிரச்சாரச் செயலாளராக இரூந்த நந்திவர்மன் இல்லத்தில் விருந்துக்கு தலைவர் கலைஞர் வந்தபோது எடுத்த படத்தில் நந்திவர்மன், அவரது சித்தப்பா மகள்கள் மறைந்த அலமேலுமைதிலி,சுந்தரவல்லி ஆகியோர் உள்ளனர்.அந்த விருந்தில் சிட்டிபாபு, பண்ருட்டி இராமச்சந்திரன்,தென் ஆற்காடுமாவட்டச் செயலாளர் தியகதுர்கம் இராமகிருட்டினன், திண்டிவனம் தங்கவேலு எம்.எல்.சி,பரூக் மரைக்காயர் அவர் தம்பி இக்பால், பேராசிரியர் இராசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில் தி.மு.கழகம் தோற்றது. இலாசுப்பேட்டையில் பரூக் மரைக்காயரும் திருநள்ளாறில் சொளந்தரரங்கன் மட்டுமே வென்றனர்.21 நாளில் இராமசாமி தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்தது
21 நாள் அதிமுக ஆட்சி மீது அலைஒசை ஏட்டில் ஆற்காடு வீராசாமி 21 ஊழல் புகார்களை கூறினார். உடனே அதிமுக வின் 21 நாள் ஆட்சி முதல் அமைச்சர் இதை சொல்ல புதுவை தி.மு.கவில் ஆள் இல்லையா என சவால் விட்டார்.21 நாள் அதிமுக ஆட்சி மீது 21 ஊழல் புகார்களை புதுவை தி.மு.க பிரச்சாரச் செயலாள்ர் நந்திவர்மன் அப்போதைய துணைநிலை ஆளுனர் சேத்திலாலிடம் தந்தார் என்பது வரலாறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக