kalaignar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kalaignar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 அக்டோபர், 2015

முரசொலி மாறனோடு நான்

1973 ல் முரசொலி செல்வம் இல்லத்தில் முரசொலி மாறனோடு நான் எடுத்துக் கொண்ட படம்.திராவிட மாணவ்ர் முன்னேற்றக் கழக புதுவை மாநில அமைப்பாளராக இருந்த நான் முரசொலி மாறன் எழுதிய ஏன் வேண்டும் இன்பத் திராவிடம் நூலைப் படித்தது முதல் அவர் மீது தனிப்பற்று கொண்டவன்.

ஆயிரம் விளக்கில் இன்று பாரத ஸ்டேட் வங்கி உள்ள இடத்தில் முரசொலி பழைய அலுவலத்தில் சிறிய அறையில் ஏகப்பட்ட புத்தகங்களுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் மாறன் அவர்களால் அமெரிக்க நூலகத்தில் உறுப்பின்னாக சேர்த்து விடப்பட்டேன்.புத்தகம் படிக்கும் பழக்கமே அவரைப் பார்த்துத் தான் எனக்கு ஏற்பட்டது. பீட்டர்ஸ் பிரின்சிபல் என்ற புத்தகத்தை எனக்கு அவர் பரிசளித்தார்.உள்ளுவதுள்ளும் உயர்வுள்ளல் வேண்டும் என்ற உணர்வை என்னுள் மூட்டிய புத்தகம் அது.அவர் அமைச்சராக இருந்த போதும் கடிதங்களுக்கு பதில் அளித்தார்.என் 25 வயதில் அவ்ரோடு எடுத்துக்கொண்ட படத்தை 68 வயதில் வெளியிட்டு பழைய நினைவுகளை பசுமையாக பாதுகாப்பதில் மகிழ்கிறேன்.


நந்திவர்மன்

வெள்ளி, 15 ஜூன், 2012

பல நாடுகளில் டெசோ வேண்டும் :சண்டே இந்தியனில் நந்திவர்மன்

நந்திவர்மன்,பொதுச்செயலாளர்,திராவிடப் பேரவை



பல ஆண்டுகளாக இணையத்தில் அகில இந்திய டெசோ என்ற பிளாக்கை நடத்திவருகிறேன். இந்திய மண்ணில் புலம்பெயர்ந்த திபெத் அரசு தர்மசாலாவில் இயங்குகிறது. திபெத்திய பாராளுமன்றம் உள்ளது. 2009&ல் இத்தாலியப் பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 267 திபெத்திய ஆதரவுக் குழுக்கள் பல நாடுகளில் செயல்படுகின்றன. 267வது குழுவாக இலங்கையிலேயே ஆதரவுக்குழு இயங்குகிறது.

அதுபோல கலைஞர் மீண்டும் புத்துயிர் ஊட்டிய டெசோ தமிழ்நாட்டில் மட்டுல்ல, உலகின் பல நாடுகளிலும் உருவாக வேண்டும். 1998&ல் டெல்லியில் தோழர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனைத்துலக ஈழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தினார். 2006&ல் ஆல் இந்தியா டெசோ என்று உருவாக்கி ஈழப்பிரச்னை பற்றி கண்திறப்புக் கருத்தரங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டோம். நடக்கவில்லை. கடந்த முறை டெசோ தொடக்க மாநாட்டில் மதுரையில் பேசிய கலைஞர் உலக நாடுகளுக்கெல்லாம் ஈழப்பிரச்னையை கொண்டு செல்வோம் என்றார். மீண்டும் புதுப்பிக்கப்படும் டெசோ குறைந்த பட்சம் டெல்லியிலாவது மாநாட்டைக் கூட்டவேண்டும். தமிழ்நாட்டுக் குள்ளேயே மாநாடுகள், போராட்டங்கள் என்று சுருக்கிக்கொள்வது ஈழப் பிரச்னையை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புரியவைக்காது.

சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய ஒன்றியங்கள் உடைந்தபோது 1994 அளவில் 19 புதிய நாடுகள் பிறந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா &இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. இந்த நிகழ்வுகளின்போது ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள நாடுகள் ஹெல்சிங்கி மாநாடு கூட்டி புதியதாக உருவாகும் நாடுகளை அங்கீகரிக்க வழிமுறைகள்/வரையறைகள் வகுத்து அதன்படி மேற்சொன்ன நாடுகளை அங்கீகரித்தனர்.

அதே அளவுகோள்படி, 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளுக்கு சுதந்தரம் கிடைக்கச் செய்த ஐக்கிய நாடுகள் முன், உதாரணப்படி தமிழ் ஈழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க உலகின் பல நாடுகளில் டெசோ அமைப்பு உருவாக வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்றப் பிறகு ஜனநாயக வழிமுறைகளை ஏற்று மக்கள் தேர்வு செய்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசையும் இந்தியாவில் இயங்கும் புலம்பெயர்ந்த திபெத்திய அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க டெசோ வாதாட வேண்டும்.

பொது வாக்கெடுப்பு மூலம் நியூஸிலாந்தின் கடைசிக் காலனியான 644 பேர் வாழக்கூடிய அடோல் ஆல் அட்டாஃபுக்கு சுயாட்சி வழங்கிய ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கும், திபெத்துக்கும் வழங்குமாறு டெசோ வலியுறுத்தவேண்டும். கலைஞரின் முயற்சி தமிழ்நாட்டுடன் நிற்கக்கூடாது. அவர் மேற்கொண்டிருக்கும் இந்த டெசோ இப்போதைக்கு காலத்தின் தேவை என்றுதான் நான் கருதுகிறேன். 2009 காலகட்டத்தை மறந்துவிட்டு அடுத்து நடக்கவேண்டியதை யோசியுங்கள்!

வெள்ளி, 3 ஜூன், 2011

அகவை 88 காணும் ஆலமரம் : தமிழருக்கு நிழல் தர நீடு வாழ்க


1974 புதுவை சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் இலாசுப்பேட்டையில் முடிந்த பின் அந்தத தேர்தலுக்காக பிரச்சாரச் செயலாளராக இரூந்த நந்திவர்மன் இல்லத்தில் விருந்துக்கு தலைவர் கலைஞர் வந்தபோது எடுத்த படத்தில் நந்திவர்மன், அவரது சித்தப்பா மகள்கள் மறைந்த அலமேலுமைதிலி,சுந்தரவல்லி ஆகியோர் உள்ளனர்.அந்த விருந்தில் சிட்டிபாபு, பண்ருட்டி இராமச்சந்திரன்,தென் ஆற்காடுமாவட்டச் செயலாளர் தியகதுர்கம் இராமகிருட்டினன், திண்டிவனம் தங்கவேலு எம்.எல்.சி,பரூக் மரைக்காயர் அவர் தம்பி இக்பால், பேராசிரியர் இராசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்தலில் தி.மு.கழகம் தோற்றது. இலாசுப்பேட்டையில் பரூக் மரைக்காயரும் திருநள்ளாறில் சொளந்தரரங்கன் மட்டுமே வென்றனர்.21 நாளில் இராமசாமி தலைமையில் அமைந்த அதிமுக ஆட்சி கவிழ்ந்தது
21 நாள் அதிமுக ஆட்சி மீது அலைஒசை ஏட்டில் ஆற்காடு வீராசாமி 21 ஊழல் புகார்களை கூறினார். உடனே அதிமுக வின் 21 நாள் ஆட்சி முதல் அமைச்சர் இதை சொல்ல புதுவை தி.மு.கவில் ஆள் இல்லையா என சவால் விட்டார்.21 நாள் அதிமுக ஆட்சி மீது 21 ஊழல் புகார்களை புதுவை தி.மு.க பிரச்சாரச் செயலாள்ர் நந்திவர்மன் அப்போதைய துணைநிலை ஆளுனர் சேத்திலாலிடம் தந்தார் என்பது வரலாறு