chennai media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
chennai media லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 14 அக்டோபர், 2015
புதன், 23 செப்டம்பர், 2015
தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.
புதுவையில் விளையாட்டாக நானும் இருக்கிறேன் அரசியல் மிருகங்களே என்னை இருட்டடிக்க முடியாது. இந்தியன் எக்ஸ்ப்ரஸில் 52 வாரங்கள் இலக்கியம், வரலாறு, தொல்லியல், இசை, நடனம், ஓவியம், புவி அறிவியல், தமிழரின் உலகப் பரவல், பன்னாட்டு தொல்குடிகளிடம் தமிழ் வேர்கள் பற்றி எழுதி வந்தேன் 2004 முதல் 2005 வரை., அதை நிறுத்தி மகிழ்ந்தீர்கள். 2014 ல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் 10 கட்டுரைகள் எழுதிய போதும் கத்திரிக் கோல் போட்டீர்கள். தேர்தல் சூதாட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை இருந்தும் ஒரு அரசியல்வாதி எழுதலாமா ? இந்த பொறாமையால் தமிழரின் வரலாற்றுப் பதிவுக்கு நீங்கள் எல்லாம் இருள் திரை போட்ட போது எ. ஜே.கே தொலைக்காட்சி உரிமையாளர் ஜோன்குமார் எனக்கு வாய்ப்பு அளித்தால் 140 வாரங்கள் அறிவியல் அறிவோம் அறிவால் உயர்வோம் என்ற தலைப்பிலும் வெளியே தெரியாத வரலாறு தலைப்பிலும் பேசினேன். இந்த கை எழுத்துப் படிகளை தொகுப்பாசிரியர் என்று போட்டு நூல்களாக வெளியிட ஒரு பேராசிரியைக்கு அனுமதி அளித்துள்ளேன். இந்த பேச்சுகள் மேலும் ஆராய தூண்டும் நோக்கில் அமைந்தவை. ஆய்வு அரங்கங்களில் பல பல்கலைக்கழகங்களில் முன்பு எல்லாம் புதுவை பல்கலைக்கழகத்தில் என்னை பேசச் செய்து மகிழ்ந்த எஸ்.வி.நாராயணன், அ.அறிவுநம்பி ,எஸ்.ஆரோக்கியநாதன் , பேராசிரியர் சம்பந்தன் போன்றோர் உலகின் எந்த பல்கலைக்கழகத்தில் ஆய்வு ஏடு அளிக்க சொன்னாலும் ஓரளவு தமிழர் வரலாற்று மறு கட்டமைப்புக்கு நான் உழைக்க. முடியும்.
செவ்வாய், 5 மார்ச், 2013
வெள்ளி, 15 ஜூன், 2012
பல நாடுகளில் டெசோ வேண்டும் :சண்டே இந்தியனில் நந்திவர்மன்
நந்திவர்மன்,பொதுச்செயலாளர்,திராவிடப் பேரவை
பல ஆண்டுகளாக இணையத்தில் அகில இந்திய டெசோ என்ற பிளாக்கை நடத்திவருகிறேன். இந்திய மண்ணில் புலம்பெயர்ந்த திபெத் அரசு தர்மசாலாவில் இயங்குகிறது. திபெத்திய பாராளுமன்றம் உள்ளது. 2009&ல் இத்தாலியப் பாராளுமன்றத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திபெத்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். 267 திபெத்திய ஆதரவுக் குழுக்கள் பல நாடுகளில் செயல்படுகின்றன. 267வது குழுவாக இலங்கையிலேயே ஆதரவுக்குழு இயங்குகிறது.
அதுபோல கலைஞர் மீண்டும் புத்துயிர் ஊட்டிய டெசோ தமிழ்நாட்டில் மட்டுல்ல, உலகின் பல நாடுகளிலும் உருவாக வேண்டும். 1998&ல் டெல்லியில் தோழர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அனைத்துலக ஈழ ஆதரவாளர் மாநாட்டை நடத்தினார். 2006&ல் ஆல் இந்தியா டெசோ என்று உருவாக்கி ஈழப்பிரச்னை பற்றி கண்திறப்புக் கருத்தரங்கம் டெல்லியில் நடத்த திட்டமிட்டோம். நடக்கவில்லை. கடந்த முறை டெசோ தொடக்க மாநாட்டில் மதுரையில் பேசிய கலைஞர் உலக நாடுகளுக்கெல்லாம் ஈழப்பிரச்னையை கொண்டு செல்வோம் என்றார். மீண்டும் புதுப்பிக்கப்படும் டெசோ குறைந்த பட்சம் டெல்லியிலாவது மாநாட்டைக் கூட்டவேண்டும். தமிழ்நாட்டுக் குள்ளேயே மாநாடுகள், போராட்டங்கள் என்று சுருக்கிக்கொள்வது ஈழப் பிரச்னையை இந்தியாவின் பிற மாநிலங்களுக்குப் புரியவைக்காது.
சோவியத் யூனியன், யூகோஸ்லாவியா, செக்கோஸ்லாவியா ஆகிய ஒன்றியங்கள் உடைந்தபோது 1994 அளவில் 19 புதிய நாடுகள் பிறந்தன. எஸ்டோனியா, லாட்வியா, லிதுனியா &இழந்த சுதந்தரத்தை மீண்டும் பெற்றன. இந்த நிகழ்வுகளின்போது ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள நாடுகள் ஹெல்சிங்கி மாநாடு கூட்டி புதியதாக உருவாகும் நாடுகளை அங்கீகரிக்க வழிமுறைகள்/வரையறைகள் வகுத்து அதன்படி மேற்சொன்ன நாடுகளை அங்கீகரித்தனர்.
அதே அளவுகோள்படி, 21ஆம் நூற்றாண்டில் தொடர்ந்து பல நாடுகளில் பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்நாடுகளுக்கு சுதந்தரம் கிடைக்கச் செய்த ஐக்கிய நாடுகள் முன், உதாரணப்படி தமிழ் ஈழத்தை உலக நாடுகள் அங்கீகரிக்க உலகின் பல நாடுகளில் டெசோ அமைப்பு உருவாக வேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்றப் பிறகு ஜனநாயக வழிமுறைகளை ஏற்று மக்கள் தேர்வு செய்து அமெரிக்காவிலிருந்து இயங்கும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசையும் இந்தியாவில் இயங்கும் புலம்பெயர்ந்த திபெத்திய அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க டெசோ வாதாட வேண்டும்.
பொது வாக்கெடுப்பு மூலம் நியூஸிலாந்தின் கடைசிக் காலனியான 644 பேர் வாழக்கூடிய அடோல் ஆல் அட்டாஃபுக்கு சுயாட்சி வழங்கிய ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கும், திபெத்துக்கும் வழங்குமாறு டெசோ வலியுறுத்தவேண்டும். கலைஞரின் முயற்சி தமிழ்நாட்டுடன் நிற்கக்கூடாது. அவர் மேற்கொண்டிருக்கும் இந்த டெசோ இப்போதைக்கு காலத்தின் தேவை என்றுதான் நான் கருதுகிறேன். 2009 காலகட்டத்தை மறந்துவிட்டு அடுத்து நடக்கவேண்டியதை யோசியுங்கள்!
Labels:
aringnar anna,
chennai media,
cna,
dmk,
dravida peravai,
eelam,
george fernandes,
kalaignar,
LTTE,
mdmk,
nandhivarman,
rathika sithsabaieesan,
srilanka,
tamil eelam
செவ்வாய், 29 மே, 2012
சனி, 28 ஏப்ரல், 2012
அகுச்தீன் பெனுவா விடும் அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்
கல்லூரியில் படித்த காலத்துக்கு பிறகு 43 வருடங்கள் புதுவை வந்தால் என்னைச் சந்தித்ததே இல்லை அகுச்தீன் பெனுவா, மார்ச் 2012 இல் சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசினோம்.
1967 ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார். 1968 இல் தாகூர் கலைக் கல்லூரி மாணவர் மன்றம் தொடங்க தமிழக கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வந்தார். அப்போது மாணவர் தலைவர் அகுச்தீன் பெனுவா.
2012 மார்ச்சில் என்னிடம் கதை விட்டார் தனித் தமிழ்நாடு கிடைத்தால் நீ தான் பிரான்சுக்கு தமிழ் நாட்டின் தூதுவர் என அண்ணா இவரிடம் சொன்னதாக முதல் புளுகு மூட்டையை என்னிடம் அவிழ்த்தார்.
தி.மு.க கேட்டது திராவிட நாடு .அதுவும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது 1962 ல் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் வீடு இருந்தால் தான் ஓடு மற்ற முடியும், நாடு இருந்தால் தான் தனி நாடு கேட்க முடியும்,எனவே தி.மு.க பிரிவினைக் கோரிக்கையை கைவிடுகிறது என அண்ணா பேசினார்.
தி.மு.க வை ஒடுக்க பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு அரசு கொண்டு வந்ததும் அப்போதுதான். சி.பா.ஆதித்தனார் தான் தனித் தமிழ் நாடு கேட்டவர்.
அண்ணா கேட்காத தமிழ் நாடு பற்றி அண்ணா 1968இல் அண்ணாவையே சந்திக்காத பெனுவாவிடம் கூறினாராம். இந்த வரலாற்றுப் பொய்களுக்கு நான் தலை ஆட்டத்தால் எங்கள் நட்பில் முதல் விரிசல் ஏற்பட்டது. வி.எம்.சி. ராஜா எங்களோடு இருந்தவர். நாவலரை அழைக்க உடன் சென்றவர். அவரும் நானும் சாட்சி, நடக்காத ஒன்றை இட்டுக் கட்டி பீற்றிக் கொள்ளும் இந்த குணம் பெனுவாவின் இன்றைய சரிவுக்கு முதல் காரணம் .
2012 மார்ச்சில் என்னிடம் கதை விட்டார் தனித் தமிழ்நாடு கிடைத்தால் நீ தான் பிரான்சுக்கு தமிழ் நாட்டின் தூதுவர் என அண்ணா இவரிடம் சொன்னதாக முதல் புளுகு மூட்டையை என்னிடம் அவிழ்த்தார்.
தி.மு.க கேட்டது திராவிட நாடு .அதுவும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது 1962 ல் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் வீடு இருந்தால் தான் ஓடு மற்ற முடியும், நாடு இருந்தால் தான் தனி நாடு கேட்க முடியும்,எனவே தி.மு.க பிரிவினைக் கோரிக்கையை கைவிடுகிறது என அண்ணா பேசினார்.
தி.மு.க வை ஒடுக்க பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு அரசு கொண்டு வந்ததும் அப்போதுதான். சி.பா.ஆதித்தனார் தான் தனித் தமிழ் நாடு கேட்டவர்.
அண்ணா கேட்காத தமிழ் நாடு பற்றி அண்ணா 1968இல் அண்ணாவையே சந்திக்காத பெனுவாவிடம் கூறினாராம். இந்த வரலாற்றுப் பொய்களுக்கு நான் தலை ஆட்டத்தால் எங்கள் நட்பில் முதல் விரிசல் ஏற்பட்டது. வி.எம்.சி. ராஜா எங்களோடு இருந்தவர். நாவலரை அழைக்க உடன் சென்றவர். அவரும் நானும் சாட்சி, நடக்காத ஒன்றை இட்டுக் கட்டி பீற்றிக் கொள்ளும் இந்த குணம் பெனுவாவின் இன்றைய சரிவுக்கு முதல் காரணம் .
என வரலாறு திறந்த புத்தகம். எனக்கு விருது கொடுக்க சென்னை வரச் சொல்லிவிட்டு நான் ஒரு ஒசி காரில் சென்னை போனால் அந்தக் காரில் இவருக்கு வேண்டிய அம்மையாரை அழைத்து வரவில்லை என்பதையே பெரிய கொலைக் குற்றம் போல ஊரில் பேசிப் பேசி என் நட்பு நானே முறித்துக் கொள்ளும் நிலைமை உருவாக்கியவர்.
எம்.ஜி ஆரையே என சுயமரியாதை பெரிதென்பதால் துச்சமென நினைத்தவன். அண்ணா தி.மு.க தோற்றமும் நந்திவர்மன் வெளியேற்றமும் என்றத் தலைப்பில் என இணைய தளத்தில் அந்தக் காலப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளே சாட்சி.
அவரே தவறு உணர்ந்து எஸ்.டி. சோமசுந்தரத்தை என்னிடம் அனுப்பி மீண்டும் வருக என் எம். ஜி. ஆர் கேட்டதற்கு வாழ நாள் முழுதும் அவர் வீட்டு படியை மிதிக்க மாட்டேன் என்றவன் நான்.
பணக்காரனின் ரகசிய வாழ்க்கைக்கு எடுபிடியாக இருக்கும் அவசியம் எனக்கு எந்த வயதிலும் ஏற்பட்டதில்லை. ஏற்படாது.
பெனுவா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் புளுகு மூட்டைகள் தேர்தலில் விவாதிக்கப்படும் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், தமிழில்.
நந்திவர்மன்
வியாழன், 3 நவம்பர், 2011
அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா
அம்மா தி.மு.க பொதுச் செயலாளரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான திருமதி ஜெயலலிதா அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றாமல் இவ்வளவு பெரிய நூலகம் முன் சின்னஞ் சிறிய அண்ணா சிலை வைத்து அண்ணாவுக்கு அவமரியாதை செய்தார் கலைஞர் எனவே அவர் பெயர் பொறித்த கல்வெட்டுக்களை நீக்கிவிட்டு வானுயர்ந்த சிலையை அண்ணாவுக்கு அமைத்து அவர் பெயரை போட்டுக் கொள்ளுமாறு சசிகலாவாவது அறிவுரை சொல்லக் கூடாதா .....
அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்
அண்ணா தி.மு.க பெயரையும் அண்ணாயிசத்தையும் நாட்டுக்கு முதலில் அறிவித்த நந்திவர்மன் வேண்டுகோள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)