சனி, 28 ஏப்ரல், 2012

அகுச்தீன் பெனுவா விடும் அண்டப் புளுகும் ஆகாசப் புளுகும்


கல்லூரியில் படித்த காலத்துக்கு பிறகு 43 வருடங்கள் புதுவை வந்தால் என்னைச் சந்தித்ததே இல்லை அகுச்தீன் பெனுவா, மார்ச் 2012 இல் சந்தித்தார். இடைப்பட்ட காலத்தில் இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றிப் பேசினோம்.

1967 ல் தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல் அமைச்சரானார். 1968 இல் தாகூர் கலைக் கல்லூரி மாணவர் மன்றம் தொடங்க தமிழக கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் வந்தார். அப்போது மாணவர் தலைவர் அகுச்தீன் பெனுவா.

2012 மார்ச்சில் என்னிடம் கதை விட்டார் தனித் தமிழ்நாடு கிடைத்தால் நீ தான் பிரான்சுக்கு தமிழ் நாட்டின் தூதுவர் என அண்ணா இவரிடம் சொன்னதாக முதல் புளுகு மூட்டையை என்னிடம் அவிழ்த்தார்.

 தி.மு.க கேட்டது திராவிட நாடு .அதுவும் சீனா இந்தியாவை ஆக்கிரமித்த போது 1962 ல் வேலூர் சிறையில் இருந்து விடுதலை ஆனதும் வீடு இருந்தால் தான் ஓடு மற்ற முடியும், நாடு இருந்தால் தான் தனி நாடு கேட்க முடியும்,எனவே தி.மு.க பிரிவினைக் கோரிக்கையை கைவிடுகிறது என அண்ணா பேசினார்.

 தி.மு.க வை ஒடுக்க பிரிவினைத் தடைச் சட்டத்தை நேரு அரசு கொண்டு வந்ததும் அப்போதுதான். சி.பா.ஆதித்தனார் தான் தனித் தமிழ் நாடு கேட்டவர்.

அண்ணா கேட்காத தமிழ் நாடு பற்றி அண்ணா 1968இல் அண்ணாவையே சந்திக்காத பெனுவாவிடம் கூறினாராம். இந்த வரலாற்றுப் பொய்களுக்கு நான் தலை ஆட்டத்தால் எங்கள் நட்பில் முதல் விரிசல் ஏற்பட்டது. வி.எம்.சி. ராஜா எங்களோடு இருந்தவர். நாவலரை அழைக்க உடன் சென்றவர். அவரும் நானும் சாட்சி, நடக்காத ஒன்றை இட்டுக் கட்டி பீற்றிக் கொள்ளும் இந்த குணம் பெனுவாவின் இன்றைய சரிவுக்கு முதல் காரணம் .


என வரலாறு திறந்த புத்தகம். எனக்கு விருது கொடுக்க சென்னை வரச் சொல்லிவிட்டு நான் ஒரு ஒசி காரில் சென்னை போனால் அந்தக் காரில் இவருக்கு வேண்டிய அம்மையாரை அழைத்து வரவில்லை என்பதையே பெரிய கொலைக் குற்றம் போல ஊரில் பேசிப் பேசி என் நட்பு நானே முறித்துக் கொள்ளும் நிலைமை உருவாக்கியவர்.

எம்.ஜி ஆரையே என சுயமரியாதை பெரிதென்பதால் துச்சமென நினைத்தவன். அண்ணா தி.மு.க தோற்றமும் நந்திவர்மன் வெளியேற்றமும் என்றத் தலைப்பில் என இணைய தளத்தில் அந்தக் காலப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளே சாட்சி.


அவரே தவறு உணர்ந்து எஸ்.டி. சோமசுந்தரத்தை என்னிடம் அனுப்பி மீண்டும் வருக என் எம். ஜி. ஆர் கேட்டதற்கு வாழ நாள் முழுதும் அவர் வீட்டு படியை மிதிக்க மாட்டேன் என்றவன் நான்.

பணக்காரனின் ரகசிய வாழ்க்கைக்கு எடுபிடியாக இருக்கும் அவசியம் எனக்கு எந்த வயதிலும் ஏற்பட்டதில்லை. ஏற்படாது.

பெனுவா பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் புளுகு மூட்டைகள் தேர்தலில் விவாதிக்கப்படும் ஆங்கிலத்தில், பிரெஞ்சில், தமிழில்.

நந்திவர்மன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக